Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -8 யட்சன் கேள்வியும் தருமன் பதிலும்
Page 1 of 1 • Share
மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -8 யட்சன் கேள்வியும் தருமன் பதிலும்
இந்த ஜீவ உலகத்தில் மரண பயம் இல்லாத உயிர்களே இல்லை.
"எல்லோரும் சாக பயந்துதான் சாகிறார்கள். தன்னை உணர்ந்தவர்களால் மட்டுமே சாவையும் தள்ளிப்போட முடியும்."
-எழுத்துசித்தர் பாலகுமாரன்
ஆம் இந்த மானுடம் எப்படியாவது மரணத்தை வென்று விட மாட்டோமா என்கிற தவிப்பில் திளைத்து கொண்டேதான் இருக்கிறது. 99 வயது கடந்தாலும் வாழ்வின் மீதான ஆசை ஒட்டிக்கொண்டேதான் இருக்கிறது.
இதன் மூலம் என்ன என்பதை நோக்கி பயணிக்க துவங்கும் பொழுதில், பந்தங்களின் பிணைப்பும் பற்றுதலுமே காரணம் என்பதை அனைவரும் அறிந்ததே!
நண்பர்களே மகாபாரதத்தில் யட்சனுக்கும் தருமனுக்கும் நிகழ்ந்த உரையாடல், பித்தனின் மனதில் பசையிட்டு ஒட்டிக்கொண்டது இதை பற்றி சிந்திக்கும் தருணத்தில்,
அதில் ஒரு கேள்வி ,
யட்சன்: சோகத்தில் மிக கொடியது எது?
தருமன்:தன் மகன் தனக்குமுன் இறந்து போகும் புத்திர சோகமே.
இவ்வாறாக தருமன் பதில் அளித்து இருப்பான்.
இந்த உரையாடலுக்கும் பதிலுக்கும் என்ன தொடர்பு. எனும் எண்ணம் உங்களுக்கு தோன்றலாம்
ஆம் மானுட சமூகம் மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளும் மரணத்தை வெல்ல செய்துகொண்டு இருக்கும் போரில் வென்று கொண்டுதான் இருக்கிறான். அந்த மெய்ஞானம் கொண்ட நிலை பற்றி
சாந்தோக்கிய உபநிஷத் கூறுவதை எண்ணி எண்ணி தூக்கம் கலைந்தவன் பித்தன்.
" உன் தந்தை ,நீ , உன் மகன் அனைவரும் ஒருவரே....."
உன் தந்தை நீ ஆகுறார், நீ உன் மகனாகிறாய், உன் மகன் கூட உந்தன் தொடர்ச்சியே ...
இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது இருக்கவும் போகிறது .
இது உபநிசத் கூறும் உண்மை, ஆம் இதைவிட மரணத்தை வெல்வது வேறு என்னவாக இருக்கும்.
இந்த தொடர்ச்சி அறுபட்டுவிடுமே என்ற நிலை வரும் போது மிக கொடிய சோகம் ஆகிறது. அதனால் தான் புத்திர சோகம் மிக கொடியது ஆகிறது.
பேருந்தின் ஜன்னலோரத்தில் வேகமாக ஓடும் காட்சிகளை கவனித்து கொண்டே இருக்கும் போது, ஒரு கை பித்தனின் தோள் தொட்டு கேட்டது , " என்ன செய்றீங்க தம்பி ?".
பிறகு கதை கேட்ட பின் சொன்னார்கள் அந்த வயதான தம்பதியினர், " என் பையனும் இருந்திருந்தால் உங்கள் வயதிருக்கும்..." என சொன்னபோது கதையை தொடர்ந்து கேட்காமல் இருந்து விட்டான் பித்தன் காரணம் அவர்கள் கண்கள் குளமாவதை காண விரும்பவில்லை.
யட்சன் கேள்வியும் தருமன் பதிலும் செவி மடல் விட்டு மறைய மறுக்கிறது.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -8 யட்சன் கேள்வியும் தருமன் பதிலும்
மறையாமல் தொலைந்து இருக்கட்டும்...
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -8 யட்சன் கேள்வியும் தருமன் பதிலும்
கவியருவி ம. ரமேஷ் wrote:மறையாமல் தொலைந்து இருக்கட்டும்...
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -8 யட்சன் கேள்வியும் தருமன் பதிலும்
நிதர்சன உண்மை பித்தன்... பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -2
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -4
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -2
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -4
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|