Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்
திடீரென்று உன் நினைப்பு
பற்றிக் கொண்ட நெருப்பாய்
ஈரமாய்
உலர்வாய்
இன்னும்
என்னென்னவெல்லாமோ
இறுதியில் வந்தாய்
நீ அணைத்துக் கொண்டது
கசகசப்பாய் இருந்தது
தீர்ந்து போயிருந்தது காதல்
லீனா மணிமேகலை
பற்றிக் கொண்ட நெருப்பாய்
ஈரமாய்
உலர்வாய்
இன்னும்
என்னென்னவெல்லாமோ
இறுதியில் வந்தாய்
நீ அணைத்துக் கொண்டது
கசகசப்பாய் இருந்தது
தீர்ந்து போயிருந்தது காதல்
லீனா மணிமேகலை
Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்
வேதனை எதுவுமில்லை.
உன்னை எந்த அறைக்குள்
பூட்டுவதெனத் தெரியாமல்
ஒவ்வொரு அறையாய்
மாற்றிக் கொண்டே
இறுதியில்
ஒரு அகதியைப் போல்
வெளியேற்றுகிறேன்.
கவிஞர் ரத்திகா
உன்னை எந்த அறைக்குள்
பூட்டுவதெனத் தெரியாமல்
ஒவ்வொரு அறையாய்
மாற்றிக் கொண்டே
இறுதியில்
ஒரு அகதியைப் போல்
வெளியேற்றுகிறேன்.
கவிஞர் ரத்திகா
Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்
ஒரு குறைமாதச் சிசுவின்
அசைவென அவன் நினைவு
அன்பே
நாம் இணைதல் அசாத்தியம்
மணலில் பதிந்த சுவடுகளனைத்தையும்
காற்று கௌவித் தின்னட்டும்
எஞ்சியவை-
ஒரு சொல்
ஒரு முத்தம்
-மைதிலி
அசைவென அவன் நினைவு
அன்பே
நாம் இணைதல் அசாத்தியம்
மணலில் பதிந்த சுவடுகளனைத்தையும்
காற்று கௌவித் தின்னட்டும்
எஞ்சியவை-
ஒரு சொல்
ஒரு முத்தம்
-மைதிலி
Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்
விஷப் பாம்பொன்று
என் மீதேறி
நிதானமாக
கடந்து போகிறது
புரிதலற்ற – உன்
பார்வைகளைச்
சந்திக்கும் பொழுதெல்லாம்
அ.வெண்ணிலா
என் மீதேறி
நிதானமாக
கடந்து போகிறது
புரிதலற்ற – உன்
பார்வைகளைச்
சந்திக்கும் பொழுதெல்லாம்
அ.வெண்ணிலா
Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்
வேதனையுடன் மறைந்து சென்றும்
பார்த்துவிட்டாய் நீ!
யாரோ போல் முகம் திருப்பியபோது
ஞாபகம் வந்தது . . .
உன்னோடு மணிக்கணக்கில்
பேசிய நாட்களும்
வெயில்படாமல் நீ என்னை
மறைத்து நின்றதுவும்
- மு.சத்யா
பார்த்துவிட்டாய் நீ!
யாரோ போல் முகம் திருப்பியபோது
ஞாபகம் வந்தது . . .
உன்னோடு மணிக்கணக்கில்
பேசிய நாட்களும்
வெயில்படாமல் நீ என்னை
மறைத்து நின்றதுவும்
- மு.சத்யா
Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்
சோரம் மிகப் புனிதமானது
ஏனெனில் பணம் பத்திரங்கள் துச்சம் அதில்
பிறிதும் கண்மூடிக் காதல்
அதில்தான்
திறந்த முழு சரணடைவு
அதில்தான்,
அன்புடை நீ! மாசுபடுத்தாதே இதை.
இன்னொரு திருமணமாக்கி இதையும்.
- மாலதி
ஏனெனில் பணம் பத்திரங்கள் துச்சம் அதில்
பிறிதும் கண்மூடிக் காதல்
அதில்தான்
திறந்த முழு சரணடைவு
அதில்தான்,
அன்புடை நீ! மாசுபடுத்தாதே இதை.
இன்னொரு திருமணமாக்கி இதையும்.
- மாலதி
Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்
எனது பெண்ணைக்
கண்டுபிடிக்க முடிவதில்லை
அவள் எல்லா பேருந்து நிலையங்களிலும்
என் கண்களில் படாமல் ஒளிந்து கொள்கிறாள்
அவளைத் தேடிச் சலித்த கண்களில்
முலைகளும், பிருஷ்டங்களுமே
படுகின்றன.
லட்சுமி மணிவண்ணன்
கண்டுபிடிக்க முடிவதில்லை
அவள் எல்லா பேருந்து நிலையங்களிலும்
என் கண்களில் படாமல் ஒளிந்து கொள்கிறாள்
அவளைத் தேடிச் சலித்த கண்களில்
முலைகளும், பிருஷ்டங்களுமே
படுகின்றன.
லட்சுமி மணிவண்ணன்
Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்
இன்று நான்
முழுக்க முழுக்க
காமத்தால் நிரம்பியிருக்கிறேன்
அவ்வளவு
இணக்கமாக இருக்கிறேன்
இந்த உலகத்தோடு
-மனுஷ்ய புத்திரன்
முழுக்க முழுக்க
காமத்தால் நிரம்பியிருக்கிறேன்
அவ்வளவு
இணக்கமாக இருக்கிறேன்
இந்த உலகத்தோடு
-மனுஷ்ய புத்திரன்
Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்
நீ பிராயத்தைக் கரையவிட்ட
அதே நதியின் கரையில்தான்
உன் மகளும் அமர்ந்திருக்கிறாள்
அமைதியாக
-சங்கர் ராமசுப்ரமணியன்
அதே நதியின் கரையில்தான்
உன் மகளும் அமர்ந்திருக்கிறாள்
அமைதியாக
-சங்கர் ராமசுப்ரமணியன்
Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்
கண்ணன் தன் தோழர்களுக்குச் சொல்கிறான்
ராதா இப்பொழுது வந்து விடுவாள்
கண்ணன் ஒன்றும் அவ்வளவு சுயநலக்காரனல்ல
தனது தோழர்களில் சிலரும்
ராதாவுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை
அறியாதவனும் அல்ல
வீட்டு முற்றங்களில் சாலையோரங்களில் தியேட்டர் இருளில்,
போக்குவரத்து சிக்னல் விளக்குகளின் கீழ்
இன்னும் பலரும் ஆங்காங்கே பதுங்கியிருக்கிறார்கள்.
ஒரே நேரத்தில் உங்களுக்காகவும் எல்லோருக்காகவும்
தனித்தனியே தோன்றி
காதலை வழங்குபவள்தான் ராதா
பார்வையாளராகிய நீங்களும் அறிந்தேயிருக்கிறீர்கள்.
-செல்மா
ராதா இப்பொழுது வந்து விடுவாள்
கண்ணன் ஒன்றும் அவ்வளவு சுயநலக்காரனல்ல
தனது தோழர்களில் சிலரும்
ராதாவுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை
அறியாதவனும் அல்ல
வீட்டு முற்றங்களில் சாலையோரங்களில் தியேட்டர் இருளில்,
போக்குவரத்து சிக்னல் விளக்குகளின் கீழ்
இன்னும் பலரும் ஆங்காங்கே பதுங்கியிருக்கிறார்கள்.
ஒரே நேரத்தில் உங்களுக்காகவும் எல்லோருக்காகவும்
தனித்தனியே தோன்றி
காதலை வழங்குபவள்தான் ராதா
பார்வையாளராகிய நீங்களும் அறிந்தேயிருக்கிறீர்கள்.
-செல்மா
Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்
தலைவாரி பூச்சூடி மையிட்டு
நீ
காத்திருப்பது உன்
கணவனுக்குத்தான் என்றாலும்
மெல்ல மெல்லப் படியேறி வரும்
என்னைக் கண்டும் சிலிர்க்கிறாய்.
-மகாதேவன்
நீ
காத்திருப்பது உன்
கணவனுக்குத்தான் என்றாலும்
மெல்ல மெல்லப் படியேறி வரும்
என்னைக் கண்டும் சிலிர்க்கிறாய்.
-மகாதேவன்
Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்
உள்ளாடைக்குள் பணத்தை வைத்துக்கொண்டு
மேலாடையைச் சரி செய்தபடி
கதவு திறந்து புறப்பட்ட நீ
திரும்பி வந்து தந்த முத்தத்தை
நான் மறக்க மாட்டேன்.
-மகாதேவன்
மேலாடையைச் சரி செய்தபடி
கதவு திறந்து புறப்பட்ட நீ
திரும்பி வந்து தந்த முத்தத்தை
நான் மறக்க மாட்டேன்.
-மகாதேவன்
Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்
எறும்புத்திண்ணிகள் மிகவும் சாதுவானவை ரொம்ப நல்லவை
எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது என்றவளே!
என்னைப் போலவே ஒரு எறும்புத்திண்ணியைப்
பரிசாகத் தருகிறேன் படுக்கைக்கருகில் வைத்துக்கொள்.
-ஸ்ரீபதி பத்மநாபன்
எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது என்றவளே!
என்னைப் போலவே ஒரு எறும்புத்திண்ணியைப்
பரிசாகத் தருகிறேன் படுக்கைக்கருகில் வைத்துக்கொள்.
-ஸ்ரீபதி பத்மநாபன்
Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்
ஒரு பெண்ணைச் சேர்த்துக்கொண்டு
திரிகிற துக்கம் தாளவில்லை எனக்கு
என் விதைப்பையைச் சிதைப்பதற்கு
அல்லது உறங்கும்போது தலையில்
கல்லை வீசிவிட்டுப் போக
அவளுக்கு முகாந்திரங்களுண்டு
-யவனிகா
திரிகிற துக்கம் தாளவில்லை எனக்கு
என் விதைப்பையைச் சிதைப்பதற்கு
அல்லது உறங்கும்போது தலையில்
கல்லை வீசிவிட்டுப் போக
அவளுக்கு முகாந்திரங்களுண்டு
-யவனிகா
Re: நவீனக் காதல் கவிதைகளின் புதியப் போக்குகள்
உன் முகம் தீய்ந்த தீயில்
அமிலங்கள்
நெஞ்சில் சுரக்கின்றன
வாழ்நாளின் பக்கங்கள்
கண்ணீரில் கடக்கின்றன;
சமூகத்தின் குற்றத்தில்
காதலும் கைதானதே
தான் தைத்த நாகரிகச் சட்டையை
தன் கையால்
கிழித்துப் போட்டதே;
கண்ணில் தூசெனில்
துடிக்கும் கரங்களிரண்டில்
கசங்கிப் போய் வீழ்ந்தவளே
இன்று காணாமல் போனதேன்…?
காலத்தின் தீர்ப்பில்
கலையும் மை வாங்கி
வாழ்க்கையைத் திருத்த எண்ணி
உன் குரலைச் சாட்சி வைத்தவள்
உயிரையா விட்டுப் போவாய்..?
வினோதினி என்றும்
வித்யா என்றும்
உயிர்கள்
சொட்டு சொட்டாய். . .
சொட்டு சொட்டாய். . .
கொப்பளித்துக் கொப்பளித்து
வடிந்த ரத்தத்தில்
காதல்’ அமிலத்தினும் காரமானதே,
வாழ்க்கை. . .
பெண்ணைப் பெற்றவர்க்குச் சாபமானதே;
ஒரு சமூகத்தையே துடிக்கவைத்த ரணத்தை
உடம்பெல்லாம் தாங்கி
உயிர்வலிக்க. . . வலிக்க. . .
நீ முனங்கிய முனகல்களில்
எரித்தவனின் கையை விட
அவனை அப்படி வளர்த்த
இச்சமுகத்தின் கைகளுக்கே
அதிகம் வலித்திருக்கக் கூடும்..
இனி யாருக்கு வலித்து
யாருக்கென்ன லாபம்
நீ போனவள் போனவளில்லையா?
எரிந்தவள்
சாம்பல் தானில்லையா.. ?
ஆனால்
பெண்ணைப் பெற்றவளுக்கு
அடி வயிற்றில் எரியும்
நெருப்பொன்று உண்டு
தோள்மீது தாங்கியவனுக்கு
மார்மீது சுடும் தீயொன்று உண்டு
அது இனி எல்லோருள்ளும்
சுடர்விட்டு எரியும்
காட்டுத் தீயேனப் பரவி
அவனைப் போன்றோரை தேடித் தேடிக் கொல்லும்
அவர்களின் மரணத்தில்
இனி உனைப்போன்ற
வினோதினிகளும். . . . . .
வித்யாக்களும் . . . . . . .
காப்பாற்றப் படலாம்..
-
வித்யாசாகர்
அமிலங்கள்
நெஞ்சில் சுரக்கின்றன
வாழ்நாளின் பக்கங்கள்
கண்ணீரில் கடக்கின்றன;
சமூகத்தின் குற்றத்தில்
காதலும் கைதானதே
தான் தைத்த நாகரிகச் சட்டையை
தன் கையால்
கிழித்துப் போட்டதே;
கண்ணில் தூசெனில்
துடிக்கும் கரங்களிரண்டில்
கசங்கிப் போய் வீழ்ந்தவளே
இன்று காணாமல் போனதேன்…?
காலத்தின் தீர்ப்பில்
கலையும் மை வாங்கி
வாழ்க்கையைத் திருத்த எண்ணி
உன் குரலைச் சாட்சி வைத்தவள்
உயிரையா விட்டுப் போவாய்..?
வினோதினி என்றும்
வித்யா என்றும்
உயிர்கள்
சொட்டு சொட்டாய். . .
சொட்டு சொட்டாய். . .
கொப்பளித்துக் கொப்பளித்து
வடிந்த ரத்தத்தில்
காதல்’ அமிலத்தினும் காரமானதே,
வாழ்க்கை. . .
பெண்ணைப் பெற்றவர்க்குச் சாபமானதே;
ஒரு சமூகத்தையே துடிக்கவைத்த ரணத்தை
உடம்பெல்லாம் தாங்கி
உயிர்வலிக்க. . . வலிக்க. . .
நீ முனங்கிய முனகல்களில்
எரித்தவனின் கையை விட
அவனை அப்படி வளர்த்த
இச்சமுகத்தின் கைகளுக்கே
அதிகம் வலித்திருக்கக் கூடும்..
இனி யாருக்கு வலித்து
யாருக்கென்ன லாபம்
நீ போனவள் போனவளில்லையா?
எரிந்தவள்
சாம்பல் தானில்லையா.. ?
ஆனால்
பெண்ணைப் பெற்றவளுக்கு
அடி வயிற்றில் எரியும்
நெருப்பொன்று உண்டு
தோள்மீது தாங்கியவனுக்கு
மார்மீது சுடும் தீயொன்று உண்டு
அது இனி எல்லோருள்ளும்
சுடர்விட்டு எரியும்
காட்டுத் தீயேனப் பரவி
அவனைப் போன்றோரை தேடித் தேடிக் கொல்லும்
அவர்களின் மரணத்தில்
இனி உனைப்போன்ற
வினோதினிகளும். . . . . .
வித்யாக்களும் . . . . . . .
காப்பாற்றப் படலாம்..
-
வித்யாசாகர்
Similar topics
» நவீனக் கைக் கடிகாரம்
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» கல்தோன்றிய மண்தோன்றிய காலத்துக்கு முற்பட்டது காதல், அதோடு உடன் பிறந்தது காதல் எதிர்ப்பு
» உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» கல்தோன்றிய மண்தோன்றிய காலத்துக்கு முற்பட்டது காதல், அதோடு உடன் பிறந்தது காதல் எதிர்ப்பு
» உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|