Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 4 • Share
Page 1 of 4 • 1, 2, 3, 4
பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
கனிமொழி
அப்பா சொன்னாரென பள்ளிக்குச் சென்றேன்
தலை சீவினேன் சில நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டை போட்டுக் கொண்டேன்
பல் துலக்கினேன் வழிபட்டேன்
கல்யாணம் கட்டி கொண்டேன் காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று
அப்பா சொன்னாரென பள்ளிக்குச் சென்றேன்
தலை சீவினேன் சில நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டை போட்டுக் கொண்டேன்
பல் துலக்கினேன் வழிபட்டேன்
கல்யாணம் கட்டி கொண்டேன் காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
புகைப்படத்திற்காகச் சிரிக்கும் அப்பா
பக்கத்தில் அம்மா அதே அச்சத்தோடு
தி. பரமேஸ்வரி
பக்கத்தில் அம்மா அதே அச்சத்தோடு
தி. பரமேஸ்வரி
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
சமையலறை தேடி நீரருந்திவிட்டு திரும்பும்
அவருக்கு எதைச்சொல்லி
என் வயதை ஞாபகப்படுத்த?
சுகிர்தராணி
அவருக்கு எதைச்சொல்லி
என் வயதை ஞாபகப்படுத்த?
சுகிர்தராணி
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
ஊணுறக்கம் அற்று பத்து நாட்களாய்
அலைந்து திரிந்து அப்பா
விழித்துக்கிடப்பார் ஓரமாய்....
விதை நெல்லை விற்றும்
விளைநிலத்தை விலைபேசியும்
தேற்றினார்
இராஜலட்சுமி
அலைந்து திரிந்து அப்பா
விழித்துக்கிடப்பார் ஓரமாய்....
விதை நெல்லை விற்றும்
விளைநிலத்தை விலைபேசியும்
தேற்றினார்
இராஜலட்சுமி
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
சைக்கிள் விடக்கற்றுக் கொண்ட புதிதில்
பிடிமானம் தவறி விழுந்து
ஆடுசதை பிய்ந்த காயம்
ஆறும்வரை அலுக்காமல்
தூக்கிச்சுமந்த... ஒரு துக்க நாளில்
மரணம் தூக்கிப்போன
என் அப்பாவை
நினைத்து...
தமிழச்சி
பிடிமானம் தவறி விழுந்து
ஆடுசதை பிய்ந்த காயம்
ஆறும்வரை அலுக்காமல்
தூக்கிச்சுமந்த... ஒரு துக்க நாளில்
மரணம் தூக்கிப்போன
என் அப்பாவை
நினைத்து...
தமிழச்சி
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
தண்டோடு தலைகுனியும் / தாமரையின்
நிறைமாதச் சோர்வோடு / பயணித்த நான்
உறங்குவதற்கு இலகுவாக / உடைமாற்ற
யத்தனிக்கையில் / தள்ளாடி விழுந்து விடுவேனோ
எனும் / உள்ளார்ந்த / பதட்டத்தோடும்
உளியின் நுனியது / விரல்களில் படாது
துளையிடும் சிற்பியின் / கவனத்தோடும்
தமிழச்சி
நிறைமாதச் சோர்வோடு / பயணித்த நான்
உறங்குவதற்கு இலகுவாக / உடைமாற்ற
யத்தனிக்கையில் / தள்ளாடி விழுந்து விடுவேனோ
எனும் / உள்ளார்ந்த / பதட்டத்தோடும்
உளியின் நுனியது / விரல்களில் படாது
துளையிடும் சிற்பியின் / கவனத்தோடும்
தமிழச்சி
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
மழலையாய்த் / தவழ்கையில் / முன் நகர்கையில்
மெல்லச் சுவர்பிடித்து / எழுந்து நிற்கையில்
நாலெட்டு எடுத்து வைக்கையில்
கைதட்டி ஆர்ப்பரிக்கும் அம்மா
சிறுவயதுப் பந்தயத்தில் / சிட்டாய்ப் பறந்தோடிப்
பெருமையுடன் பார்த்தாள்
வளர்ந்த பருவம் தாண்டுகையில்
விளையாடி முடித்து வீடு நுழைந்தவளை
வெளியில் போனால் / காலை உடைப்பேன் என்கிறாள்
தி. பரமேஸ்வரி
மெல்லச் சுவர்பிடித்து / எழுந்து நிற்கையில்
நாலெட்டு எடுத்து வைக்கையில்
கைதட்டி ஆர்ப்பரிக்கும் அம்மா
சிறுவயதுப் பந்தயத்தில் / சிட்டாய்ப் பறந்தோடிப்
பெருமையுடன் பார்த்தாள்
வளர்ந்த பருவம் தாண்டுகையில்
விளையாடி முடித்து வீடு நுழைந்தவளை
வெளியில் போனால் / காலை உடைப்பேன் என்கிறாள்
தி. பரமேஸ்வரி
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
வந்ததிலிருந்து பேராசைகளாய் ஒலித்தன
அம்மா ஆசைகள் / வாசல் தெளிக்க
மண்தரையும் / கோலம்போட முற்றம்
சாணி உருண்டையும் / பூசணிப்பூவும்
குளியலுக்கு / முழுவாளித் தண்ணியும்
சீரியலுக்குள் தொலையாமல் / ஆற அமர உட்கார்ந்து
கதைபேசசாயங்காலமும்
ஜன்னல் திறந்த ராத்தூக்கமும்
ஆண்டாள் பிரியதர்ஷினி
அம்மா ஆசைகள் / வாசல் தெளிக்க
மண்தரையும் / கோலம்போட முற்றம்
சாணி உருண்டையும் / பூசணிப்பூவும்
குளியலுக்கு / முழுவாளித் தண்ணியும்
சீரியலுக்குள் தொலையாமல் / ஆற அமர உட்கார்ந்து
கதைபேசசாயங்காலமும்
ஜன்னல் திறந்த ராத்தூக்கமும்
ஆண்டாள் பிரியதர்ஷினி
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
அரும்பத் துவங்கியிருக்கும் / முதல் மீசையிலிருந்து
சொட்டுகிறது இன்னமும் / பால் வாசம்
இப்போதம் அறுபடாத / அரூபக்கொடியுடன்தான்
உலவுகிறான் / உடையும் விளிம்பிலிருக்கும்
குரலுடன் / எனது அடிவயிற்றுச் சூடுதேடிய
அவனின் நேற்றுகள் / இன்று நிறைந்திருக்கின்றன
ஆண்மைப் புதிர்களால்...
ஆண்டாள் பிரியதர்ஷினி
சொட்டுகிறது இன்னமும் / பால் வாசம்
இப்போதம் அறுபடாத / அரூபக்கொடியுடன்தான்
உலவுகிறான் / உடையும் விளிம்பிலிருக்கும்
குரலுடன் / எனது அடிவயிற்றுச் சூடுதேடிய
அவனின் நேற்றுகள் / இன்று நிறைந்திருக்கின்றன
ஆண்மைப் புதிர்களால்...
ஆண்டாள் பிரியதர்ஷினி
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
வேற்றூர் சென்றுவிட்டுக்
கணவருடன் திரும்புகையில்
கண்ணில் படுகிறது அம்மா வீடு
அம்மாவைப் பார்க்கும் ஆசையில்
கெஞ்சியும்
மறுத்து நகர்கிறது வண்டி
தி. பரமேஸ்வரி
கணவருடன் திரும்புகையில்
கண்ணில் படுகிறது அம்மா வீடு
அம்மாவைப் பார்க்கும் ஆசையில்
கெஞ்சியும்
மறுத்து நகர்கிறது வண்டி
தி. பரமேஸ்வரி
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
கதம்ப மாலையாய் / உன் தோள்களில்
உன் தோழியரின் புன்னகை
கதம்ப மாலைகள் கசங்காமலேயே
அணைக்க நினைக்கிறது / என் தோள்கள்...
… … … …
பெண்ணுரிமை பேசும் / உன் எழுத்துகள்
என்னுரிமையை எப்போதம்
இருட்டடிப்பே செய்கின்றன.
புதியமாதவி
உன் தோழியரின் புன்னகை
கதம்ப மாலைகள் கசங்காமலேயே
அணைக்க நினைக்கிறது / என் தோள்கள்...
… … … …
பெண்ணுரிமை பேசும் / உன் எழுத்துகள்
என்னுரிமையை எப்போதம்
இருட்டடிப்பே செய்கின்றன.
புதியமாதவி
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
செடி பார்க்கச் சொல்லி / சுவற்றில் பல்லி பாரென
பார்வை திரும்பி / மருத்துவமனை போவதாய்
பொய்யுரைத்து... / குழந்தையை ஏமாற்றி
அழவிட்டுச் செல்லும் / தாயின் வழித்தடங்கள்
தீப்பிடித்துக் கொள்கின்றன.
இளம்பிறை
பார்வை திரும்பி / மருத்துவமனை போவதாய்
பொய்யுரைத்து... / குழந்தையை ஏமாற்றி
அழவிட்டுச் செல்லும் / தாயின் வழித்தடங்கள்
தீப்பிடித்துக் கொள்கின்றன.
இளம்பிறை
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
மிகவும் அருமை.கவியருவி ம. ரமேஷ் wrote:வேற்றூர் சென்றுவிட்டுக்
கணவருடன் திரும்புகையில்
கண்ணில் படுகிறது அம்மா வீடு
அம்மாவைப் பார்க்கும் ஆசையில்
கெஞ்சியும்
மறுத்து நகர்கிறது வண்டி
தி. பரமேஸ்வரி
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
ஓரடி... ஈரரடியுமாய்
நடக்கமுயன்று
தடுமாறி விழுந்தெழும்
கண்மணிச் செல்வத்தை
உறவினர் வீடொன்றில்
விட்டுவந்த
வயிற்றுப் பிழைப்பின்
மிச்சப் பொழுதுகளில்
இளம்பிறை
நடக்கமுயன்று
தடுமாறி விழுந்தெழும்
கண்மணிச் செல்வத்தை
உறவினர் வீடொன்றில்
விட்டுவந்த
வயிற்றுப் பிழைப்பின்
மிச்சப் பொழுதுகளில்
இளம்பிறை
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
நம்மிலிருந்து உலகம் உருக்கொள்வதாய்
நாம் புனைந்திருந்த கற்பிதம்
பாதரச உருளையாய்
கை நிற்காமல் உருண்டொடுகிறது
பாரவசமே நமக்கு அருளியிருந்தது
அ. வெண்ணிலா
நாம் புனைந்திருந்த கற்பிதம்
பாதரச உருளையாய்
கை நிற்காமல் உருண்டொடுகிறது
பாரவசமே நமக்கு அருளியிருந்தது
அ. வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
மடியமர்ந்து கொஞ்சியதில்லை
விரல் பிடித்து பாதையளந்ததில்லை
அருகமர்ந்து பாடம் படித்ததில்லை
வயதிற்கேற்ற அறிவுரைகள் கூறியதில்லை
இப்பொழுது புரிகிறதப்பா…
வாழ்க்கை
கற்றுத் தருவதில் அல்ல
கற்றுக் கொள்வதில்தான்
அ. வெண்ணிலா
விரல் பிடித்து பாதையளந்ததில்லை
அருகமர்ந்து பாடம் படித்ததில்லை
வயதிற்கேற்ற அறிவுரைகள் கூறியதில்லை
இப்பொழுது புரிகிறதப்பா…
வாழ்க்கை
கற்றுத் தருவதில் அல்ல
கற்றுக் கொள்வதில்தான்
அ. வெண்ணிலா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
இந்த மாலை
வேறெந்தப் பொழிதுகளையும்விடச்
சுமக்கவே இயலாதபடிக்கு
எப்படி இவ்வளவு கனத்துவிடுகிறது
இந்த மாலை
மாதவிடாய் ஈரம் நிரம்பிக்
கனக்கிற பஞ்சைப்போல.
அதிர்வு
கசங்கிய அரைக்கால்
உடை தரித்து
நாசியை எக்கும் நாற்றம் பருகியபடி
குப்பை சுமப்பான்
எத்தனையாவது பரம்பரையென
என்னைப் போன்றே தானும் அறியாதபடி
சுத்தத்திற்கும் அசுத்தத்திற்கும்
இடையேயான தூர்ந்துபோன
வேறுபாடுகளுடன்
நான் விலக்கிச் செல்கிற இடங்களையே
வசிப்பிடமாக்கிக் கொள்கிறான்
என் வீட்டுக் குப்பைகளை அள்ளும் தருணத்தில்
சூல்கொள்ளாது உடைந்த
என் கருமுட்டைகளின் கரைபடிந்த
நாப்கின்களைக் கண்டு
என்ன நினைத்துக்கொள்கிறானோ
நடுங்கிக் கூசும் என் கருப்பை
சல்மா
வேறெந்தப் பொழிதுகளையும்விடச்
சுமக்கவே இயலாதபடிக்கு
எப்படி இவ்வளவு கனத்துவிடுகிறது
இந்த மாலை
மாதவிடாய் ஈரம் நிரம்பிக்
கனக்கிற பஞ்சைப்போல.
அதிர்வு
கசங்கிய அரைக்கால்
உடை தரித்து
நாசியை எக்கும் நாற்றம் பருகியபடி
குப்பை சுமப்பான்
எத்தனையாவது பரம்பரையென
என்னைப் போன்றே தானும் அறியாதபடி
சுத்தத்திற்கும் அசுத்தத்திற்கும்
இடையேயான தூர்ந்துபோன
வேறுபாடுகளுடன்
நான் விலக்கிச் செல்கிற இடங்களையே
வசிப்பிடமாக்கிக் கொள்கிறான்
என் வீட்டுக் குப்பைகளை அள்ளும் தருணத்தில்
சூல்கொள்ளாது உடைந்த
என் கருமுட்டைகளின் கரைபடிந்த
நாப்கின்களைக் கண்டு
என்ன நினைத்துக்கொள்கிறானோ
நடுங்கிக் கூசும் என் கருப்பை
சல்மா
Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
ஒவ்வொரு இரவுகள் முடிந்து
வீடு திரும்பும் வேளையில்
நான் இழந்தது
ஒன்றுமில்லையென
நிரூபிக்க வேண்டியிருப்பதும்
நிரூபணத்தை
நீ ஏற்றுக் கொள்வதும்
நம் வழக்கங்களாய் இருப்பதையே
'வாழ்தல்' என்கிறார்கள்.
அ.வெண்ணிலா
வீடு திரும்பும் வேளையில்
நான் இழந்தது
ஒன்றுமில்லையென
நிரூபிக்க வேண்டியிருப்பதும்
நிரூபணத்தை
நீ ஏற்றுக் கொள்வதும்
நம் வழக்கங்களாய் இருப்பதையே
'வாழ்தல்' என்கிறார்கள்.
அ.வெண்ணிலா
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பெண்ணிய கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» தா.வே. விக்கிரமாதித்தன் கவிதைகள் - ரசித்தவை
» ருத்ரா கவிதைகள் - ரசித்தவை
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» தா.வே. விக்கிரமாதித்தன் கவிதைகள் - ரசித்தவை
» ருத்ரா கவிதைகள் - ரசித்தவை
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|