Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
Page 2 of 5 • Share
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
First topic message reminder :
சூரியனாகவே ஆசைபட்டேன்
முடியவில்லை
ஒரு மெழுகு திரியையாவது
ஏற்றிவிடவே
இப்போது போராடிக்கொண்டு இருக்கிறேன்
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சூரியனாகவே ஆசைபட்டேன்
முடியவில்லை
ஒரு மெழுகு திரியையாவது
ஏற்றிவிடவே
இப்போது போராடிக்கொண்டு இருக்கிறேன்
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
Last edited by சுபபாலா on Fri Mar 28, 2014 12:08 am; edited 1 time in total
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
எத்தனை நூறு உறவு இருந்தாலும்
அத்தனை உறவிடமும்
உள்ளத்தின் உண்மை அழுகையை சொல்லமுடியாது
அத்தனை உறவுக்குள்ளும் ஒரு உறவை
மனம் தேடி போனாலும்
அந்த உறவு அதை கேட்க விரும்புவதில்லை
அதனால் தான் இன்னும்
கண்ணீர் தீவுகள் தானாகவே
சுனாமியாகி
கண்ணுக்குள்ளேயே உள்ளேயே
காணாமல் போகிறதோ ?
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
அத்தனை உறவிடமும்
உள்ளத்தின் உண்மை அழுகையை சொல்லமுடியாது
அத்தனை உறவுக்குள்ளும் ஒரு உறவை
மனம் தேடி போனாலும்
அந்த உறவு அதை கேட்க விரும்புவதில்லை
அதனால் தான் இன்னும்
கண்ணீர் தீவுகள் தானாகவே
சுனாமியாகி
கண்ணுக்குள்ளேயே உள்ளேயே
காணாமல் போகிறதோ ?
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
கடலோடு கோபித்து கொண்டு வந்த
அலை
கரையை தொடும் முன்பே
கடலையே திரும்பி தேடுது
கடலோ
உன்னை போலவே
நினைவலைகளை கூட
துரத்திவிட்டு
துயரின்றி சிரிக்குது ....!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
அலை
கரையை தொடும் முன்பே
கடலையே திரும்பி தேடுது
கடலோ
உன்னை போலவே
நினைவலைகளை கூட
துரத்திவிட்டு
துயரின்றி சிரிக்குது ....!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
உலகில் நிம்மதி தரக்கூடியது
அமைதி தர கூடியது
வாழ்வின் நாட்களை அழகாக்குவது
கட்டுபாடு உடைய வாழ்க்கை மட்டும் அல்ல ...!
கருணையும் அன்பும் எதிர்பார்ப்பற்ற நட்புரிமை கொண்ட்டாடலும் தான் ::::!
முழுமையான அன்பு நிலைக்குள் போகாத வரை
யாருக்கும் எதுவும் சாத்தியமாகாது ....!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
அமைதி தர கூடியது
வாழ்வின் நாட்களை அழகாக்குவது
கட்டுபாடு உடைய வாழ்க்கை மட்டும் அல்ல ...!
கருணையும் அன்பும் எதிர்பார்ப்பற்ற நட்புரிமை கொண்ட்டாடலும் தான் ::::!
முழுமையான அன்பு நிலைக்குள் போகாத வரை
யாருக்கும் எதுவும் சாத்தியமாகாது ....!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
பல வீடுகளில் வீட்டின் மூலையில்
வழிபடும் கடவுளாகவும்
சில வீடுகளில் மூலையில் கசக்கி எறியபட்ட காகிதமாகவும்
வாழ்ந்து கொண்டே
இன்னொரு தலைமுறையையும்
வளர்த்துக்கொண்டுதான் இருக்கிறாள்
தாயெனும் சாமி
எல்லாவற்றையும் தனக்குள்ளே
தாங்கும் தர்மத்தின் பூமி ....!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
வழிபடும் கடவுளாகவும்
சில வீடுகளில் மூலையில் கசக்கி எறியபட்ட காகிதமாகவும்
வாழ்ந்து கொண்டே
இன்னொரு தலைமுறையையும்
வளர்த்துக்கொண்டுதான் இருக்கிறாள்
தாயெனும் சாமி
எல்லாவற்றையும் தனக்குள்ளே
தாங்கும் தர்மத்தின் பூமி ....!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
உயரத்தில் இருப்பதால்
சூரியன் சுடும் என்று நினைக்கிறோம்
சூரியனுக்கும் துயர்படும் வாழ்வுண்டு என்று நாம் எப்போதும்
உணர்ந்ததில்லை
அது போலவே வாழ்விலும்
வசதியும் கணணியும் கைநிறைய
காசு இருந்தாலும்
துயரம் என்பது அவனுக்கும் உண்டென்பதை
சமூகம் எப்போதும் சரிவர புரிந்ததில்லை .........!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சூரியன் சுடும் என்று நினைக்கிறோம்
சூரியனுக்கும் துயர்படும் வாழ்வுண்டு என்று நாம் எப்போதும்
உணர்ந்ததில்லை
அது போலவே வாழ்விலும்
வசதியும் கணணியும் கைநிறைய
காசு இருந்தாலும்
துயரம் என்பது அவனுக்கும் உண்டென்பதை
சமூகம் எப்போதும் சரிவர புரிந்ததில்லை .........!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
எண்களே ஒன்று சேர்க்கிறது
நம்
எண்ணங்கள் எப்போது
பாரதியின் கனவை நனவாக்கபோகிறது
தமிழால் ஒன்று சேர்ந்து .....!!!
11/12/13/
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
நம்
எண்ணங்கள் எப்போது
பாரதியின் கனவை நனவாக்கபோகிறது
தமிழால் ஒன்று சேர்ந்து .....!!!
11/12/13/
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
தமிழ் எனக்கு தலை மயிர் அல்ல
என் உடலுக்குள் இருக்கும்
எனை இயக்கம் உயிர்
அந்த பயிர் விழுதோடு இறக்கக்கூடாது
விருட்சமாய் ஆழ வேண்டும்
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
என் உடலுக்குள் இருக்கும்
எனை இயக்கம் உயிர்
அந்த பயிர் விழுதோடு இறக்கக்கூடாது
விருட்சமாய் ஆழ வேண்டும்
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
நாம் ஒன்றை நினைக்க
தெய்வம் ஒன்றை நினைக்கிறது என்பது பொய்
நாம் ஒன்றை புரிந்து கொள்ள
உறவுகள் தவறாக எரிந்து கொண்டிருப்பதே மெய்
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
தெய்வம் ஒன்றை நினைக்கிறது என்பது பொய்
நாம் ஒன்றை புரிந்து கொள்ள
உறவுகள் தவறாக எரிந்து கொண்டிருப்பதே மெய்
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
பெற்ற பிள்ளைக்கே விளங்குதில்லை
அகதிவலி
உலகம் எப்படி புரியும் எங்கள்
அவலமொழி.....!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
அகதிவலி
உலகம் எப்படி புரியும் எங்கள்
அவலமொழி.....!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
விளக்குகளுக்கு பயந்து
விட்டில்கள் ஒதுங்குவதில்லை
விமர்சனத்துக்கு பயந்து
விழுதுவிட நினைப்பவன் உறங்குவதில்லை
அறிவுள்ளவன் எதிர்வுகளை சந்தித்து
வரலாறாகிறான்
எதிலும் பயமுள்ளவன் வாழ்வை தொலைத்து தினமும்
அலைமோதுகிறான் .......!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
விட்டில்கள் ஒதுங்குவதில்லை
விமர்சனத்துக்கு பயந்து
விழுதுவிட நினைப்பவன் உறங்குவதில்லை
அறிவுள்ளவன் எதிர்வுகளை சந்தித்து
வரலாறாகிறான்
எதிலும் பயமுள்ளவன் வாழ்வை தொலைத்து தினமும்
அலைமோதுகிறான் .......!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
தமிழனுக்கு இரண்டு முகம்
ஒன்று தாய் முகம்
மற்றொன்று தமிழ்-அகம் (தமிழகம் )
தாய் முகத்தை போரில் தொலைத்தான்
தமிழ் அகத்தை
அகதியாகி அலைந்து தொலைத்தான்......!!!
இப்போது இருமுகமும் இல்லாமல்
அழுமுகத்தோடு.....!!!
அனாதையாய் தமிழும் தமிழனும் .....!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
ஒன்று தாய் முகம்
மற்றொன்று தமிழ்-அகம் (தமிழகம் )
தாய் முகத்தை போரில் தொலைத்தான்
தமிழ் அகத்தை
அகதியாகி அலைந்து தொலைத்தான்......!!!
இப்போது இருமுகமும் இல்லாமல்
அழுமுகத்தோடு.....!!!
அனாதையாய் தமிழும் தமிழனும் .....!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
நீ மின்விளக்கோடு வாழ்வாயானால்
ஒரு மெழுகுதிரியையாவது
ஒரு ஏழையின் வீட்டில் ஏற்றி வை
நாளை ......!
அந்த வெளிச்சத்தால் உன் வீடும் சோலையாகலாம்
இருள் அகன்றிய ஒளியால்
நீயும் கடவுளாகலாம் ........!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
ஒரு மெழுகுதிரியையாவது
ஒரு ஏழையின் வீட்டில் ஏற்றி வை
நாளை ......!
அந்த வெளிச்சத்தால் உன் வீடும் சோலையாகலாம்
இருள் அகன்றிய ஒளியால்
நீயும் கடவுளாகலாம் ........!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
முதிர்கன்னி.......!
வாழத்தானே பிறந்தோம்
வரதட்சனை கொடுக்க முடியாமல்
சாகவா பிறந்தோம்
பெண்ணாய் பிறந்த போது
பொன்னென அப்பா கொஞ்சி தழுவினார்
பொக்கிசமென அம்மா தழுவி
மெச்சினார்
வயது வரும் வரை
வசந்தம் வீட்டு வாசல் நானென
வாழ்த்து பாடினர்
எங்கிருந்து வந்ததது
வரதட்சிணைக்கு என்னை ஏலம் போடும்
சந்தை விற்பனை ......!!!
வீடு முழுக்க ஆனந்தம் இருந்தது
ஆகாயம் போல்
இப்போ !!!
வீதி முழுதும் ஆர்பாட்டம் போல்
மாறிவிட்டது
விதியின் வாழ்க்கை
பாசப்பட்ட பிறப்பென்று உலகம்
சொல்லுது
பாவப்பட்ட பிறபென்று
மனசு சொல்லுது
காரணம் நானறிவேன் .....!
என்னை ஈன்றவள் எதை அறிவாள்
என்னை தூக்கி சுமந்த தந்தை
எதை உணர்வார்
பாவம்....!
இந்த உயிர் வாழ
அந்த உயிர் சாகுது
சீதன கொடுமையாலே
இந்த இளமை
முதுமையிலும் அழுகுது .....!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
வாழத்தானே பிறந்தோம்
வரதட்சனை கொடுக்க முடியாமல்
சாகவா பிறந்தோம்
பெண்ணாய் பிறந்த போது
பொன்னென அப்பா கொஞ்சி தழுவினார்
பொக்கிசமென அம்மா தழுவி
மெச்சினார்
வயது வரும் வரை
வசந்தம் வீட்டு வாசல் நானென
வாழ்த்து பாடினர்
எங்கிருந்து வந்ததது
வரதட்சிணைக்கு என்னை ஏலம் போடும்
சந்தை விற்பனை ......!!!
வீடு முழுக்க ஆனந்தம் இருந்தது
ஆகாயம் போல்
இப்போ !!!
வீதி முழுதும் ஆர்பாட்டம் போல்
மாறிவிட்டது
விதியின் வாழ்க்கை
பாசப்பட்ட பிறப்பென்று உலகம்
சொல்லுது
பாவப்பட்ட பிறபென்று
மனசு சொல்லுது
காரணம் நானறிவேன் .....!
என்னை ஈன்றவள் எதை அறிவாள்
என்னை தூக்கி சுமந்த தந்தை
எதை உணர்வார்
பாவம்....!
இந்த உயிர் வாழ
அந்த உயிர் சாகுது
சீதன கொடுமையாலே
இந்த இளமை
முதுமையிலும் அழுகுது .....!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
புல்லாங்குழல்
....................!
எல்லா பக்கமும் கண் இருந்தும்
என் கண்ணீரை
நான் வெளிகாட்டியதே இல்லை
உயிர் உலகோடு வாழும் மனிதன் மட்டும் ஏன்
கண்ணீரில் கரைகிறான் .....!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
....................!
எல்லா பக்கமும் கண் இருந்தும்
என் கண்ணீரை
நான் வெளிகாட்டியதே இல்லை
உயிர் உலகோடு வாழும் மனிதன் மட்டும் ஏன்
கண்ணீரில் கரைகிறான் .....!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
சண்டை நடந்துகொண்டிருக்கும் போதே
சமாளிப்பதற்கான வழியை தேடிகொண்டிருக்கும் மனசு
காரணம் இல்லாமல் வந்த காதல்போல்
காரணமே இல்லாமல் வரும் கோபத்தால் ....!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சமாளிப்பதற்கான வழியை தேடிகொண்டிருக்கும் மனசு
காரணம் இல்லாமல் வந்த காதல்போல்
காரணமே இல்லாமல் வரும் கோபத்தால் ....!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
உயிர் இருக்கும் போதே அறிவால்
விதையிடு .....!!!
உயிர் போனபின்னும்
இதயங்கள் போற்றும் இறைவனாய்
இருந்து ஒளி கொடு...!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா
விதையிடு .....!!!
உயிர் போனபின்னும்
இதயங்கள் போற்றும் இறைவனாய்
இருந்து ஒளி கொடு...!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
!! ........அப்பா ....!!!!
குழந்தையாக இருக்கும் போது
கடவுளாக வரம் தந்தவரே
சிறுவனாகும் போது தோழனாக
மடி தந்தவரே ....!!!
இளைஞனாகும் போது மட்டும்
எதிரி போல் எதிர் நின்றவரே
எல்லா சுமையையும் சுமந்து
எங்களுக்காய் உறக்கத்தையும் உடலையும் தேய்த்து ஒளி தந்தவரே
உன்னை நினைத்து நினைத்து
உயிர் கிளை முறிந்து விழுகிறது
கண்ணீராக ....!!!
நீயோ வளர்த்து ஆளாக்கி விட்டுடேன் என்ற பெருமையில்
இப்போ என் பிள்ளையாக .......!!!!
அப்பா இப்போதாவது சொல்வாயா
என்னை பற்றி
நான் இன்றுவரை உன்னை சுற்றி வந்ததே இல்லை
நீயும் உறங்கியபின் வந்து
தலை தடவி கொஞ்சி விடுவது போல்
உண்மையாக நேரில் மடி இருத்தி மகிழ்ந்ததில்லை
நான் பயத்தில் ஒளிந்து கொள்வேன்
நீங்கள்
பாசத்தை காட்ட கூடாது என்று
ஒளிந்து கொள்வீர்கள்
ஆதலால் தான்
இந்த உலகம் தெரியும் அளவுக்கு
நானும் ஒளிர்ந்து கொண்டு இருக்கிறேன்
நீ காட்டிய மௌனபாதையை
வாழ்க்கையின் மொழியில்
மொழிபெயர்த்து கொண்டு இருக்கிறேன்
அம்மா தான் எதுவும் சாப்பிடாமல்
இருப்பதையெல்லாம் ஊட்டி விடுவாள்
அப்பா நீயோ
ஒரு வேட்டி சட்டை கூட வாங்காது
எங்களுக்கு புதிது வாங்கி
உடுத்தி விடுவாய்
உன்னிடம் இருந்து எதையும் அறிய
முடியவில்லை அப்பா
உன்னிடம் நான் இன்று வரை அறிந்தது
தோல்வி வந்து தோற்று போனது மட்டுமே
ஏனெனில்
நீ எப்போது தூங்கினாய் தோற்பதற்கு
தோள் வலிக்க வலிக்க நீ தோள் சுமந்த வலிகளை
இப்போ நான் சுமக்கிறேன்
நீ தந்த உயிர் போகும் முன்னே
உன் பெயரை பொறித்து வைக்கிறேன்
யார் பெத்த பிள்ளையோ என்று
கேட்காமல்
நீ பெத்த சிங்கமா இது என்று
இந்த உலகம் தேடி வரும் நாள் வரும்
அந்த தேதியின் போது உங்களை ஏற்றி வர தேர் வரும்
இனி யாவும் வரமே .....!
என் அப்பாவே நீ வாழ வேண்டும்
கோடி யுகமே .....,!!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
குழந்தையாக இருக்கும் போது
கடவுளாக வரம் தந்தவரே
சிறுவனாகும் போது தோழனாக
மடி தந்தவரே ....!!!
இளைஞனாகும் போது மட்டும்
எதிரி போல் எதிர் நின்றவரே
எல்லா சுமையையும் சுமந்து
எங்களுக்காய் உறக்கத்தையும் உடலையும் தேய்த்து ஒளி தந்தவரே
உன்னை நினைத்து நினைத்து
உயிர் கிளை முறிந்து விழுகிறது
கண்ணீராக ....!!!
நீயோ வளர்த்து ஆளாக்கி விட்டுடேன் என்ற பெருமையில்
இப்போ என் பிள்ளையாக .......!!!!
அப்பா இப்போதாவது சொல்வாயா
என்னை பற்றி
நான் இன்றுவரை உன்னை சுற்றி வந்ததே இல்லை
நீயும் உறங்கியபின் வந்து
தலை தடவி கொஞ்சி விடுவது போல்
உண்மையாக நேரில் மடி இருத்தி மகிழ்ந்ததில்லை
நான் பயத்தில் ஒளிந்து கொள்வேன்
நீங்கள்
பாசத்தை காட்ட கூடாது என்று
ஒளிந்து கொள்வீர்கள்
ஆதலால் தான்
இந்த உலகம் தெரியும் அளவுக்கு
நானும் ஒளிர்ந்து கொண்டு இருக்கிறேன்
நீ காட்டிய மௌனபாதையை
வாழ்க்கையின் மொழியில்
மொழிபெயர்த்து கொண்டு இருக்கிறேன்
அம்மா தான் எதுவும் சாப்பிடாமல்
இருப்பதையெல்லாம் ஊட்டி விடுவாள்
அப்பா நீயோ
ஒரு வேட்டி சட்டை கூட வாங்காது
எங்களுக்கு புதிது வாங்கி
உடுத்தி விடுவாய்
உன்னிடம் இருந்து எதையும் அறிய
முடியவில்லை அப்பா
உன்னிடம் நான் இன்று வரை அறிந்தது
தோல்வி வந்து தோற்று போனது மட்டுமே
ஏனெனில்
நீ எப்போது தூங்கினாய் தோற்பதற்கு
தோள் வலிக்க வலிக்க நீ தோள் சுமந்த வலிகளை
இப்போ நான் சுமக்கிறேன்
நீ தந்த உயிர் போகும் முன்னே
உன் பெயரை பொறித்து வைக்கிறேன்
யார் பெத்த பிள்ளையோ என்று
கேட்காமல்
நீ பெத்த சிங்கமா இது என்று
இந்த உலகம் தேடி வரும் நாள் வரும்
அந்த தேதியின் போது உங்களை ஏற்றி வர தேர் வரும்
இனி யாவும் வரமே .....!
என் அப்பாவே நீ வாழ வேண்டும்
கோடி யுகமே .....,!!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
கடிதங்களை சுமந்து செல்ல அங்கீகரிக்கும் முத்திரையாக இரு
இல்லை
உன்னை புகழ்ந்து வரும் கடிதங்களின்
முகவரியாக இரு
இரண்டும் அற்று
நித்திரையாகிவிடாதே ......!!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
இல்லை
உன்னை புகழ்ந்து வரும் கடிதங்களின்
முகவரியாக இரு
இரண்டும் அற்று
நித்திரையாகிவிடாதே ......!!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
எல்லோருக்கும் பிடித்தவனாக
இருப்பதற்கு முதல்
உன்னை உனக்கு பிடித்தவனாக
இருப்பு கொள் ....!அதன் பின்
இரும்பு கூட உருகும்
இமயம் கூட உன் அந்தகார சக்தி கண்டு
இறங்கி வந்து வணங்கும் ........!!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
இருப்பதற்கு முதல்
உன்னை உனக்கு பிடித்தவனாக
இருப்பு கொள் ....!அதன் பின்
இரும்பு கூட உருகும்
இமயம் கூட உன் அந்தகார சக்தி கண்டு
இறங்கி வந்து வணங்கும் ........!!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
எனக்கு பிடித்த முயற்சியாளர்கள்
எறும்பு ...!
தேனீ ....!
சிலந்தி ......!!!
விருதுக்குரிய சாதனையாளர்கள்
அதனால் தான்
கவிதைகளில் கூட கையெழுத்து ஆகிறார்கள் ......!!!!
!....சுய நம்பிக்கையோடு சுபபாலா .....!
எறும்பு ...!
தேனீ ....!
சிலந்தி ......!!!
விருதுக்குரிய சாதனையாளர்கள்
அதனால் தான்
கவிதைகளில் கூட கையெழுத்து ஆகிறார்கள் ......!!!!
!....சுய நம்பிக்கையோடு சுபபாலா .....!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
ஏன் அம்மா வைரமுத்து வாலி
பிறந்த ஆண்டில்
என்னை பெறவில்லை
பெற்று இருந்தால்
எல்லா கவிதையையும் நானே எழுதி இருப்பேன்
இப்போ ......!
ஒரு பொருளும் கிடைக்கவில்லை
கவி அருளாய் ........!!!
(கடைசியாய் பிறந்த ஏக்கம் )
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
பிறந்த ஆண்டில்
என்னை பெறவில்லை
பெற்று இருந்தால்
எல்லா கவிதையையும் நானே எழுதி இருப்பேன்
இப்போ ......!
ஒரு பொருளும் கிடைக்கவில்லை
கவி அருளாய் ........!!!
(கடைசியாய் பிறந்த ஏக்கம் )
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
வாழ்க்கையை நீ நேசி
வரும் இன்ப துன்பத்தை
காற்றை போல சுவாசி
வள்ளுவ குறளை நாளும் வாசி
இதயத்தில் வந்து ஒட்டாது
ஒரு நாளும் துன்ப தூசி
ஆதலால் நாளும்
குறள் படித்து யோசி .......!!!
வாழ்க்கையே தினமும் நலமாக
இறவன் வழங்குவான் ஆசி .....!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
வரும் இன்ப துன்பத்தை
காற்றை போல சுவாசி
வள்ளுவ குறளை நாளும் வாசி
இதயத்தில் வந்து ஒட்டாது
ஒரு நாளும் துன்ப தூசி
ஆதலால் நாளும்
குறள் படித்து யோசி .......!!!
வாழ்க்கையே தினமும் நலமாக
இறவன் வழங்குவான் ஆசி .....!!!
/சுய நம்பிக்கையோடு சுபபாலா /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
போராட்டம் தான் வாழ்க்கை
வாழும் வரை போராடு
உன் போராட்டம் பிறருக்கு பயனானால்
வாழும் வரை போராடு
வாழ்கை வழ்வதெற்கே என்பதை
உன் போராட்டம் பிறருக்கு உணர்த்தட்டும்
வாழும் வரை போராடு
வாழும் வரை போராடு
உன் போராட்டம் பிறருக்கு பயனானால்
வாழும் வரை போராடு
வாழ்கை வழ்வதெற்கே என்பதை
உன் போராட்டம் பிறருக்கு உணர்த்தட்டும்
வாழும் வரை போராடு
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சுபபாலாவின் நம் தமிழ்......!!!
» சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» சுபபாலாவின் காதல் கவிதை
» சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
» சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
» சுபபாலாவின் நட்பு கவிதை
» சுபபாலாவின் காதல் கவிதை
» சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|