தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 16, 2014 1:29 pm

First topic message reminder :

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Zbpqy_203565


பெண்ணே நீ யார் ....?
-------------------------------

என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!

நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?

தோகை விரித்தாடும் மயில்
அழகியா ..?

எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?

கண்ட நொடியில் வெந்து
துடிக்குதடி -மனசு
பெண்ணே நீ யார் ....?

குறள் - 1081

தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 05, 2014 9:54 am

நம்பியது தவறோ ....!!!

உன்னை எப்போதுமே ..
பிரிந்திடமாட்டேன்
பிரிந்திட மாட்டேன்
அடிக்கடி சொன்னவனே ....!!!
அஞ்சாதே கண்ணே என்று ..
ஆறுதல் சொன்னவனே ...!!!

பிரிவு
நிச்சயமாகி விட்டதடா ...
நீ கூறிய ஆறுதலை ..
நம்பியது தவறோ ....!!!


திருக்குறள் : 1154
+
பிரிவாற்றாமை
+
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 74
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 05, 2014 10:08 am

துன்பத்தை என்னால் தாங்க முடியாது ....!!!

என்னை
காக்க விரும்பினால் ..
என்னவன் என்னை ...
பிரியக்கூடாது .....
பிரிந்த பின் அவனுடன்
சேர்வது எளிதல்ல .....!!!

என்னவனை எப்படியாவது
என்னில் இருந்து பிரிவதை
தடுத்தே ஆகணும்
இல்லாவிடில் அவனின்
துன்பத்தை என்னால் தாங்க
முடியாது ....!!!

திருக்குறள் : 1155
+
பிரிவாற்றாமை
+
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 75
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 08, 2014 4:14 pm

நம்புதில்லை இந்த மனம் ....!!!

கண்ணாளனே....!!!
செல்லபோவது உறுதி
சொல்லப்போவதும் உறுதி
எப்படி உங்கள் மனம்
கல்லானது ...?

இங்கிருந்து துடிக்கபோகும்
என் உள்ளத்தை ஒருகணம்
சிந்தித்து பார்த்தாயா ...?
சென்றுவருவேன் கண்ணே
கலங்காதே என்றாலும்
நம்புதில்லை இந்த மனம் ....!!!

திருக்குறள் : 1156
+
பிரிவாற்றாமை
+
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 76
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 08, 2014 4:22 pm

மெல்லிடையானதை பார் ,....!!!

என்னவனே ....!!!
நீ என்னை விட்டு பிரியும் ..
துயரத்தை கொஞ்சம் பாராயோ ..?
துன்பத்தால்
மெல்லிடையானதை பார் ,....!!!

அணிந்திருக்கும் வளையல்
தானாக கழன்று விழுந்து
என் துயரத்தை ஊரறிய
செய்துவிட போகிறது .......!!!

திருக்குறள் : 1157
+
பிரிவாற்றாமை
+
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 77
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 08, 2014 4:32 pm

நீ இல்லாத இந்த ஊரில் வாழ்வதா ..?

உற்றார் இல்லாத ஊரிலும் ....
உறவுகள் இல்லாத இடத்திலும் ...
வாழ்வதை விட துன்பம் ....
ஏதுண்டு என்னவனே .....?

என் இனியவனே ...
அதைவிட கொடுமை ....
நீ இல்லாத இந்த ஊரில்
வாழ்வதா ..? வாழ்வின்
உயிர் பிரியும் கொடுமைக்கு
சமனல்லவா இக் கொடுமை ....!!!


திருக்குறள் : 1158
+
பிரிவாற்றாமை
+
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 78
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 08, 2014 4:42 pm

என்னவனின் பிரிவை விட ...!!!

தொட்டால் தான் சுடும் -தீ
அதுகூட பெரியதொரு ...
துன்பத்தை தருவதில்லை ...
என்னவனின் பிரிவை விட ...!!!

காதலிலும் காமத்திலும் ...
அன்புக்குரியவரின் பிரிவு ...
தீயை விட கொடுமையான
வேதனை வடுவையும் ...
தருகிறதே .....!!!

திருக்குறள் : 1159
+
பிரிவாற்றாமை
+
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 79
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 08, 2014 4:49 pm

பிரிந்த பின் வாழ்கிறார்கள் ....!!!

ஒப்புதலுக்கு துணைவனின்..
பிரிவை சம்மதிக்கும் ...
பெண்கள் பலர் உள்ளனர் .....
பிரிந்த பின் வாழ்கிறார்கள் ....!!!

எனக்கு தெரியவில்லை
என்னவனே உன்னை
பிரிந்த நொடியில் இருந்து
வாழ்வேனோ ...?
நீ மீண்டும் வரும் வரை
இருப்பேனோ .....?


திருக்குறள் : 1160
+
பிரிவாற்றாமை
+
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 80
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 09, 2014 11:07 am

வலியை மறைக்கிறேன் ...!!!

காதலின் வலி
காலத்துக்கும் கொல்லும்...
மரண வலி -யாரும் ..
அறியாமல் இருக்க ...
வலியை மறைக்கிறேன் ...!!!

என் துன்பங்களை ...
மறைக்க மறைக்க தான்
என் காதல் வலியும்...
ஊற்று போல் ஊறிக்கொண்டே
இருக்கிறது ....!!!


திருக்குறள் : 1161
+
படர்மெலிந்திரங்கல்
+
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 81
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 09, 2014 11:15 am

என்னவன் தந்து விட்டான் ....!!!

காதலின் துன்பத்தை
மறக்கவும் முடியாது
மறைக்கவும் முடியாது
மறைக்க முடியாத வலியை
என்னவன் தந்து விட்டான் ....!!!

என்னவனே
நீ தந்த காதல் வலியை
உன்னிடமும் சொல்ல
வெட்கம் தடுகிறது ...
அத்தனை இன்பத்தை
தந்தவனே .....!!!


திருக்குறள் : 1162
+
படர்மெலிந்திரங்கல்
+
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 82
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by செந்தில் Tue Sep 09, 2014 11:23 am

கைதட்டல் பகிர்வுக்கு நன்றி கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 09, 2014 11:26 am

உயிர் வலிக்கிறது

இரு தலை
கொல்லி எறும்பு போல் ...
ஒருபுறம் காதல் வலியை..
தாங்க முடியாமல்
உயிர் வலிக்கிறது
மறு புறம் சொல்ல முடியாமல்
நாணம் தடுக்கிறது ....!!!

காதலால் ...
என்னை காவடிபோல்
ஆக்கியவனே - உன் நினைவுகள்
நாணங்கள் காவடிபோல்
ஆடவைக்கிறது ....!!!

திருக்குறள் : 1163
+
படர்மெலிந்திரங்கல்
+
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 83
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 09, 2014 11:29 am

பகிர்வுக்கு நன்றி
கருது சொன்னமைக்கு மிக்க நன்றி
இது ஒரு கடின உழைப்பான முயற்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 09, 2014 11:42 am

ஏங்கி துடிக்குது மனம் ...!!!

என் இதயம்
ஒரு காதல் கடல் ...
வலியாலும் வெட்கத்தாலும்...
காதல் கடல் ....
அலைமோதுகிறது ...!!!

காதல் கடலில் நின்று
தத்தளிக்கிறேன் ..
கரை ஒதுங்க ஏங்குகிறேன் ...
ஓடமாக ஏதுமில்லாமல் ..
ஏங்கி துடிக்குது மனம் ...!!!

திருக்குறள் : 1164
+
படர்மெலிந்திரங்கல்
+
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 84
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 09, 2014 11:53 am

பகைவனாக மாறி விட்டால்...?

போதுமடா...
நீ தரும் வலி ....
இன்பமாக இருக்கும் ....
போதே இத்தனை வலியை...
தருபவனே ....!!!

சில வேளை
பகைவனாக மாறி விட்டால்
என்னென்ன
வலிகளையெல்லாம்
தருவாயோ உயிரே .....!!!

திருக்குறள் : 1165
+
படர்மெலிந்திரங்கல்
+
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 85
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 11, 2014 8:13 pm

துயரத்தை அளவிடவே முடியாதடா ....!!!

காதல் இன்பம்
ஊற்றுப்போன்றது
அது பெருகி பெருகி
கடலைபோல் மாறி
இன்பம் தரும் ....!!!

என்னவனே ...
பிரிந்து வாழ்வது
கடலை விட கொடுமை ...
கடலின் ஆழத்தை அளந்து
விடலாம் - நீ தந்த துயரத்தை
அளவிடவே முடியாதடா ....!!!

திருக்குறள் : 1166
+
படர்மெலிந்திரங்கல்
+
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 86
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 11, 2014 8:25 pm

தத்தளிக்கிறேன் ...!!!

என்னவனே
காதலின் துன்பம்
நடுகடலில் தத்தளிக்கும்
படகை போன்றது ....!!!

நடு ராத்திரியானாலும் ...
உன் நினைவோடு ....
தனித்திருந்து தவிக்கிறேன் ...
காதல் என்ற கடலின் ...
துன்பத்தை கடந்து செல்ல ....
முடியாமல் தத்தளிக்கிறேன் ...!!!


திருக்குறள் : 1167
+
படர்மெலிந்திரங்கல்
+
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 87
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 11, 2014 8:34 pm

நீ -என்னோடு இருகிறாய் ...!!!

ஓ இரவே நீயும்
என்னைபோல் அநாதை
எல்லோரையும்
தூங்க வைத்திவிட்டு
நீ -என்னோடு இருகிறாய் ...!!!

காதல்
வலி கொண்டவருக்கு
பகல் என்ன ..?
இரவென்ன ..?
இரவே கவலை படாதே
உன்னோடு நானும்
இருக்கிறேன் ....!!!

திருக்குறள் : 1168
+
படர்மெலிந்திரங்கல்
+
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 88
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 11, 2014 8:50 pm

இரவுகளே நிறுத்துங்கள்

காதல் துன்பத்தில்
பெரும் துன்பம் விடியாத
இரவுகள் தான் .....!!!
நினைவுகளோடு தூங்காத ..
கண்ணுக்கு விடியல் தான்
விடுதலை .......!!!

நீண்டு போகும்
இரவுகளே நிறுத்துங்கள்
முடியவில்லை இதற்கு
மேல் நினைவுகளோடு
ஏங்கிகொண்டிருக்க .....!!!

திருக்குறள் : 1169
+
படர்மெலிந்திரங்கல்
+
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 89
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 11, 2014 9:11 pm

நீ இருக்கும் தூரம் வரை ....!!!

என்னவனே ..
நீ இருக்கும் தூரம் வரை
என் எண்ணங்களும்
நீண்டு கொண்டே செல்கிறது ....!!!

எண்ணங்கள் நீண்ட
தூரம் போல் -என்
கண்கள் நீ இருக்கும்
இடத்தை சென்றிருந்தால்
கண்கள் கண்ணீர்
வெள்ளத்தில் நீந்தாதடா ....!!!

திருக்குறள் : 1170
+
படர்மெலிந்திரங்கல்
+
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 90
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by முரளிராஜா Fri Sep 12, 2014 8:10 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 25, 2014 11:31 am

மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 02, 2014 1:08 pm

கண்கள் செய்த குற்றமே ..

என்
கண்கள் செய்த குற்றமே ..
உன் மீது காதல் வந்தது ..
கண்ணே என் கண்ணே
நீ தான் என் உயிரே ....!!!

கண்ணால் தோன்றிய ...
காதல் நோயென்பதால் ...
தானே உன்னை நினைந்து ..
என் கண்கள் அழுகின்றனவோ ...?
தோற்றிவித்ததும் -நீ
துன்பப்படுவதும் - நீ


திருக்குறள் : 1171
+
கண்விதுப்பழிதல்
+
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 91
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 02, 2014 1:24 pm

காரணம் நீதானே கண்ணே,,,,,!!!

ஏய் கண்விழியே ...
கண்டவுடன் காதல் கொண்டாய் ...
வரப்போகும் துன்பத்தை ....
அறியாமல் மயங்கினாய் .....
விரும்பினாய் .....!!!

காணவில்லை உயிரை
என்பதால் கலங்கி நிற்கிறாய்
கண் விழியே -அத்தனைக்கும்
காரணம் நீதானே கண்ணே,,,,,!!!

திருக்குறள் : 1172
+
கண்விதுப்பழிதல்
+
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 92
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 02, 2014 1:40 pm

என் கண்களை நினைத்து

அன்று
பார்த்த நொடியில் ..
அவரை பற்றிக்கொண்டேன்..
கண் பார்த்தால் காதல் வரும் ..
என்பதை கண்டுகொண்டேன் ...!!!

இன்று
என்னவனை நினைத்து
என் கண்கள் கலங்குகின்றன ...
என் கண்களை நினைத்து
சிரிக்கிறேன் சிந்திக்கிறேன்
திணறுகிறேன் நான் ...!!!

திருக்குறள் : 1173
+
கண்விதுப்பழிதல்
+
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 93
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 02, 2014 1:53 pm

நீ அனுபவித்துகொள் ..!!!

என் கரு விழிகண்கள் ...
அவனை கண்டவுடம் ..
காதல் கொண்டு தவிக்கிறது ..
காதலில் விழுந்து தப்பவும் ..
முடியாமல் வாழவும்
முடியாமல் தவிக்கிறது .....!!!

பாவம் என் கண்கள்
அழுது அழுது வற்றியே
விட்டது கண்கள் ...
செய்தது நீ அனுபவித்துகொள் ..
கண்ணே.....!!!

திருக்குறள் : 1174
+
கண்விதுப்பழிதல்
+
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 94
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 4 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum