Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
Page 1 of 1 • Share
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
பிப்ரவரி-2
-
பெங்களூரு,
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி
20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில்
நேற்றிரவு நடந்தது. இரு அணியிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டன.
இந்திய அணியில் மனிஷ்பாண்டேவுக்கு பதிலாக புதுமுக வீரராக
ரிஷாப் பான்ட் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் டாவ்சன்
நீக்கப்பட்டு பிளங்கெட் இடம் பிடித்தார்.
தொடர்ந்து 3-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன்
மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி விராட்
கோலியும், உள்ளூர் நாயகன் லோகேஷ் ராகுலும் இந்திய அணியின்
இன்னிங்சை தொடங்கினர்.
2-வது ஓவரில் விராட் கோலி (2 ரன், 4 பந்து) தேவையில்லாமல்
ரன்-அவுட் ஆனார். பந்து அவரது காலில் பட்டு எழும்பி சற்று அருகில்
விழுந்தது. அதற்குள் ஒரு ரன் எடுக்க பாதி தூரம் ஓடி விட்டார்.
ஆனால் ராகுல் வேண்டாம் என்று மறுத்தார். திரும்பி வருவதற்குள்
கோலி ரன்-அவுட் செய்யப்பட்டார். ஐ.பி.எல். போட்டியில்
இது கோலியின் சொந்த ஊர் மைதானம் என்பதால் மிகுந்த
ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
காணாமல் போன பந்து
அடுத்து சுரேஷ் ரெய்னா நுழைந்தார். டைமல் மில்ஸ் வீசிய பந்தை
சிக்சருக்கு தூக்கியடித்து தனது வாணவேடிக்கையை ஆரம்பித்தார்.
ஆடுகளத்தில் பந்து இரு விதமாக அதாவது திடீரென எழும்புவதும்,
தாழ்ந்து வருவதுமாக இருந்தது.
ஆனால் பேட்டிங்குக்கு உகந்த வகையில் காணப்பட்டது. இதை நமது
வீரர்கள் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டனர். ஜோர்டானின்
ஒரே ஓவரில் ரெய்னா 2 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார்.
மறுமுனையில் ராகுல் அடித்த ஒரு இமாலய சிக்சர் ஸ்டேடியத்தை
விட்டு வெளியே போய் விழுந்தது. அந்த சிக்சரின் தூரம் 98 மீட்டர்
ஆகும். பந்து தொலைந்து போனதால் புதிய பந்து எடுக்கப்பட்டது.
ஸ்கோர் 65 ரன்களை எட்டிய போது, ராகுல் (22 ரன், 18 பந்து,
2 பவுண்டரி, ஒரு சிக்சர்), பென் ஸ்டோக்சின் பந்து வீச்சில் கிளன்
போல்டு ஆனார்.
-
பெங்களூரு,
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி
20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில்
நேற்றிரவு நடந்தது. இரு அணியிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டன.
இந்திய அணியில் மனிஷ்பாண்டேவுக்கு பதிலாக புதுமுக வீரராக
ரிஷாப் பான்ட் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் டாவ்சன்
நீக்கப்பட்டு பிளங்கெட் இடம் பிடித்தார்.
தொடர்ந்து 3-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன்
மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி விராட்
கோலியும், உள்ளூர் நாயகன் லோகேஷ் ராகுலும் இந்திய அணியின்
இன்னிங்சை தொடங்கினர்.
2-வது ஓவரில் விராட் கோலி (2 ரன், 4 பந்து) தேவையில்லாமல்
ரன்-அவுட் ஆனார். பந்து அவரது காலில் பட்டு எழும்பி சற்று அருகில்
விழுந்தது. அதற்குள் ஒரு ரன் எடுக்க பாதி தூரம் ஓடி விட்டார்.
ஆனால் ராகுல் வேண்டாம் என்று மறுத்தார். திரும்பி வருவதற்குள்
கோலி ரன்-அவுட் செய்யப்பட்டார். ஐ.பி.எல். போட்டியில்
இது கோலியின் சொந்த ஊர் மைதானம் என்பதால் மிகுந்த
ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
காணாமல் போன பந்து
அடுத்து சுரேஷ் ரெய்னா நுழைந்தார். டைமல் மில்ஸ் வீசிய பந்தை
சிக்சருக்கு தூக்கியடித்து தனது வாணவேடிக்கையை ஆரம்பித்தார்.
ஆடுகளத்தில் பந்து இரு விதமாக அதாவது திடீரென எழும்புவதும்,
தாழ்ந்து வருவதுமாக இருந்தது.
ஆனால் பேட்டிங்குக்கு உகந்த வகையில் காணப்பட்டது. இதை நமது
வீரர்கள் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டனர். ஜோர்டானின்
ஒரே ஓவரில் ரெய்னா 2 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார்.
மறுமுனையில் ராகுல் அடித்த ஒரு இமாலய சிக்சர் ஸ்டேடியத்தை
விட்டு வெளியே போய் விழுந்தது. அந்த சிக்சரின் தூரம் 98 மீட்டர்
ஆகும். பந்து தொலைந்து போனதால் புதிய பந்து எடுக்கப்பட்டது.
ஸ்கோர் 65 ரன்களை எட்டிய போது, ராகுல் (22 ரன், 18 பந்து,
2 பவுண்டரி, ஒரு சிக்சர்), பென் ஸ்டோக்சின் பந்து வீச்சில் கிளன்
போல்டு ஆனார்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
ரெய்னா-டோனி அரைசதம்
இதை தொடர்ந்து விக்கெட் கீப்பர் டோனி களம் புகுந்தார்.
ரெய்னாவும், டோனியும் கைகோர்த்து இங்கிலாந்தின் பந்து வீச்சை
நொறுக்கியெடுத்தனர். முதல் 10 ஓவர்களில் 78 ரன்கள் எடுத்திருந்த
இந்திய அணிக்கு அதன் பிறகு ஸ்கோர் ஜெட் வேகத்தில் பயணித்தது.
2010-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக 20 ஓவர் போட்டியில்
அரைசதத்தை கடந்த ரெய்னா 63 ரன்களில்(45 பந்து, 2 பவுண்டரி,
5 சிக்சர்) கேட்ச் ஆனார். மொத்தத்தில் ரெய்னாவுக்கு இது 4-வது
அரைசதமாகும். இதன் பிறகு யுவராஜ்சிங் ஆட வந்தார்.
இன்னொரு புறம் ஆக்ரோஷமாக பேட்டை சுழட்டியடித்து ரசிகர்களுக்கு
விருந்து படைத்த டோனி தனது முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்து
பிரமாதப்படுத்தினார்.
யுவராஜ்சிங் சிறிது நேரமே நின்றாலும், இங்கிலாந்தை உலுக்கிவிட்டார்.
கிறிஸ் ஜோர்டானின் திடீரென வேகத்தை குறைத்து (ஸ்லோ) பந்து வீசும்
தந்திரம் இந்த ஆட்டத்தில் எடுபடவில்லை. அவரது ஒரே ஓவரில்
யுவராஜ்சிங், 3 சிக்சரும், ஒரு பவுண்டரியும் விரட்ட, மைதானமே ரசிகர்களின்
உற்சாக கரவொலியில் அதிர்ந்தது. 18-வது ஓவரான அந்த ஓவரில் மட்டும்
இந்தியாவுக்கு 24 ரன்கள் கிட்டியது. யுவராஜ்சிங் தனது பங்குக்கு 27 ரன்கள்
(10 பந்து) எடுத்தார்.
இந்தியா 202 ரன் குவிப்பு
கடைசி ஓவரில், டோனி 56 ரன்களில் (35 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம்
இழந்தார். இதன் பின்னர் ஹர்திக் பாண்ட்யா அடித்த சிக்சர் இந்திய அணி
200 ரன்களை தொடுவதற்கு வித்திட்டது. பாண்ட்யா 11 ரன்களில் (4 பந்து)
ரன்-அவுட் ஆனார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு
202 ரன்கள் குவித்தது. பெங்களூரு மைதானத்தில் ஒரு அணி 200 ரன்களை
தாண்டியது இதுவே முதல் முறையாகும். கடைசி 5 ஓவர்களில் மட்டும்
இந்திய வீரர்கள் 70 ரன்களை திரட்டினர். இங்கிலாந்துக்கு எதிராக
இந்தியாவின் 2-வது அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது.
இதை தொடர்ந்து விக்கெட் கீப்பர் டோனி களம் புகுந்தார்.
ரெய்னாவும், டோனியும் கைகோர்த்து இங்கிலாந்தின் பந்து வீச்சை
நொறுக்கியெடுத்தனர். முதல் 10 ஓவர்களில் 78 ரன்கள் எடுத்திருந்த
இந்திய அணிக்கு அதன் பிறகு ஸ்கோர் ஜெட் வேகத்தில் பயணித்தது.
2010-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக 20 ஓவர் போட்டியில்
அரைசதத்தை கடந்த ரெய்னா 63 ரன்களில்(45 பந்து, 2 பவுண்டரி,
5 சிக்சர்) கேட்ச் ஆனார். மொத்தத்தில் ரெய்னாவுக்கு இது 4-வது
அரைசதமாகும். இதன் பிறகு யுவராஜ்சிங் ஆட வந்தார்.
இன்னொரு புறம் ஆக்ரோஷமாக பேட்டை சுழட்டியடித்து ரசிகர்களுக்கு
விருந்து படைத்த டோனி தனது முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்து
பிரமாதப்படுத்தினார்.
யுவராஜ்சிங் சிறிது நேரமே நின்றாலும், இங்கிலாந்தை உலுக்கிவிட்டார்.
கிறிஸ் ஜோர்டானின் திடீரென வேகத்தை குறைத்து (ஸ்லோ) பந்து வீசும்
தந்திரம் இந்த ஆட்டத்தில் எடுபடவில்லை. அவரது ஒரே ஓவரில்
யுவராஜ்சிங், 3 சிக்சரும், ஒரு பவுண்டரியும் விரட்ட, மைதானமே ரசிகர்களின்
உற்சாக கரவொலியில் அதிர்ந்தது. 18-வது ஓவரான அந்த ஓவரில் மட்டும்
இந்தியாவுக்கு 24 ரன்கள் கிட்டியது. யுவராஜ்சிங் தனது பங்குக்கு 27 ரன்கள்
(10 பந்து) எடுத்தார்.
இந்தியா 202 ரன் குவிப்பு
கடைசி ஓவரில், டோனி 56 ரன்களில் (35 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம்
இழந்தார். இதன் பின்னர் ஹர்திக் பாண்ட்யா அடித்த சிக்சர் இந்திய அணி
200 ரன்களை தொடுவதற்கு வித்திட்டது. பாண்ட்யா 11 ரன்களில் (4 பந்து)
ரன்-அவுட் ஆனார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு
202 ரன்கள் குவித்தது. பெங்களூரு மைதானத்தில் ஒரு அணி 200 ரன்களை
தாண்டியது இதுவே முதல் முறையாகும். கடைசி 5 ஓவர்களில் மட்டும்
இந்திய வீரர்கள் 70 ரன்களை திரட்டினர். இங்கிலாந்துக்கு எதிராக
இந்தியாவின் 2-வது அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
» 20 ஓவர் உலக கோப்பையையும் இந்திய அணி வெல்லும்: ஸ்ரீகாந்த் நம்பிக்கை
» டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
» மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அழகி போட்டியில் இந்திய பெண்
» 20 ஓவர் உலக கோப்பையையும் இந்திய அணி வெல்லும்: ஸ்ரீகாந்த் நம்பிக்கை
» டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
» மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அழகி போட்டியில் இந்திய பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|