தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இது உங்கள் இடம்..!

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue May 28, 2013 3:03 am

First topic message reminder :

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down


இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Mon Jun 10, 2013 11:58 pm

குடிகார கணவரா நீங்கள்?

என் அலுவலகத்திற்கு, தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. எங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் கடைநிலை பெண் ஊழியரின் கணவர், சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி, கேட்டு, எப்படி இத்துயர செய்தியை, அப்பெண்ணிடம் பக்குவமாக கூறுவது; அவர் எப்படி இதை தாங்கிக் கொள்வார் என, பலவாறு சிந்தித்து, சில ஆண் ஊழியர்கள் கலந்து பேசி, பின், அப்பெண்ணை அழைத்து, தகவல் கூறினோம். அப்பெண், அச்செய்தியை மிக லேசாக எடுத்துக் கொண்டதுடன், ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் விட்டு விட்டு, விடுப்பு கடிதம் எழுதி தந்து விட்டு, வீட்டிற்கு சென்று விட்டார்.
மறுதினம், சில அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள், இறந்தவரின் வீட்டிற்கு சென்றோம். அப்பெண்ணே, எங்களை எதிர்கொண்டார். தன் கணவர் மிகப் பெரிய குடிகாரர் என்றும், அனுதினம் பணம் கேட்டு துன்புறுத்துவார் என்றும், மேல்நிலைப் படிப்பு படிக்கும் பெண் குழந்தை முன், செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதுடன், தகாத வார்த்தைகளால், வேறு ஒரு ஆண்மகனோடு இணைத்து பேசி அடிப்பார் என்றும், அனுதினம் செத்து பிழைத்தோம். என் பிரார்த்தனையை இன்று இறைவன் கேட்டு, கண் திறந்து விட்டார் சார்... இனி, நான் என் மகளுடன் குறைந்த வருவாய் என்றாலும், நிம்மதியாக வாழ்வை எதிர்கொள்வேன் என, பெருமூச்சு விட்டு பொருமினார். ஆறுதல் கூற சென்ற ஆண்களாகிய நாங்கள் தான், அழுது வருந்தினோம்; இப்படி ஒரு ஆண்மகனா என்று!
இக்கடிதம், குடிகார கணவன், சந்தேகப் பேர்வழி கணவன்மார்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். நீங்கள் செத்து போனால் அழ, மனைவி, குழந்தைகள் வேண்டும். குடியைவிட்டுவிட்டு, வாழும் கொஞ்ச காலத்தில், மனைவி குழந்தைகளை சந்தோஷமாக வைத்து கொள்ளுங்கள். இல்லையேல், மேற்சொன்ன கதிதான் குடிகாரனாகிய உங்களுக்கும்.

— எம்.எஸ்.வி.அருண், புளியங்குடி.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Mon Jun 10, 2013 11:59 pm

மனித நேயம்...!

எங்களுக்கு பக்கத்து தெருவில் குடியிருக்கும் நபர், தீபாவளிக்கு முன்தினம், துவைத்த துணிகளை தேய்ப்பதற்கு எடுத்துச் சென்றார். அங்கு துணிகளை தேய்த்துவிட்டு, தேய்த்த பெண்மணிக்கு தீபாவளி பரிசாக, 200 ரூபாய் வழங்கினார். அதோடு, முடி திருத்தகம் சென்றார். அங்கு கடந்த வாரம் தான் முடி வெட்டிக் கொண்டார். தீபாவளிக்காக மீண்டும் முடிவெட்டிவிட்டு, அவருக்கு கைலி, சட்டை ஆகியவைகளோடு, பணமும் கொடுத்து, தீபாவளி வாழ்த்துக் கூறினார்.
ஐம்பது வயதான இவர், அதிகம் சம்பாதிப்பவர் இல்லையென்றாலும், அனைவரும் தீபாவளி கொண்டாடி மகிழ வேண்டும் என்ற மனித நேயத்துடன் செயல்பட்டதை, வெகுவாக வியந்து பாராட்டினேன். அவரிடம் கேட்கும்போது, 'நாம் வேலை செய்யும் இடங்களில், நமக்கு தீபாவளி போனஸ் வழங்குகின்றனர். அது, போல இவர் பணி செய்வது நமக்காக. ஆதலால், நாம் தான், "போனஸ்' வழங்க வேண்டும்...' என்று கூறினார்.
இப்பழக்கத்தை அனைவரும் கடைபிடித்தால், மனித நேயம் வளரும்.

— கே.குமார், ராமநாதபுரம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Mon Jun 10, 2013 11:59 pm

கறிக்கடை கலப்படம்!

நான் சொல்லப்போகும் பிரச்னை, தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இருக்கிறது. எங்க ஊரில், பத்துக்கும் மேற்பட்ட மட்டன் கடைகள் உள்ளன. கறி தீர்ந்து விட்டால், புதிய ஆட்டை ரோட்டில் போட்டு, துடிக்க துடிக்க அறுப்பர். அது நல்ல ஆடா, சீக்கு பிடித்த ஆடா என ஆராய்ந்து, சுகாதார ஆய்வாளரால், சீல் குத்தப்பட்டதல்ல. தவிர, கடைகளில் வட்டவடிவ கட்டையில், மாமிச சப்பைகள் இருக்கும். இரு ஆட்டின் தொடைப்பகுதிகள் கொக்கியில் தொங்கவிடப்பட்டிருக்கும். நாம் அரைக்கிலோ மட்டன் கேட்டால், 300 கிராம் வரை தொடை கறியிலிருந்து அரிந்து, தராசில் இடுவர். மீதி இருநூறு கிராமுக்கு, கட்டை மீதிருக்கும் மாட்டுக்கறி மாமிசத்தை எடுத்து, தராசில் இட்டு, ஐநூறு கிராமாக்குவர்.
ஆட்டு மாமிசம் ரோஜா நிறத்திலும், மாட்டுமாமிசம் அடர் குங்கும நிறத்திலும் இருக்கும். இந்த கலப்படத்தை, நம் கண் முன்னே மூணு சீட்டுக்காரர் போல் செய்வர். இதனாலேயே நான் மட்டன் வாங்குவதை நிறுத்தி விட்டேன். மீறி வாங்கினால், தொங்கும் ஆட்டு சப்பையை அப்படியே எடைபோட்டு வாங்கி விடுவேன் அல்லது தலை மற்றும் சுட்டு ரோமம் நீக்கிய ஆட்டுக்கால்கள் வாங்குவேன். என் சந்தேகம் நியாயமானதா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

— பெயர், ஊர் சொல்ல விரும்பாத வாசகர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Mon Jun 10, 2013 11:59 pm

எத்தனை காலம்தான் ஏமாற்றுவரோ!

மற்றவர்களை ஏமாற்றுவதற்கு எப்படியெல்லாம் யோசித்து செயல்படுகின்றனர் என்பதற்கு, நானும், என் நண்பரும் ஏமாந்த கதை ஒரு உதாரணம். நான் ஒரு சீனியர் சிட்டிசன். சென்னை சேப்பாக்கத்தில், தமிழ்நாடு அரசு கெஸ்ட் ஹவுஸ் அருகில், என் நண்பருக்காக நின்று கொண்டிருந்தேன். என் அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதில், இரண்டு டிரைவர்கள் இருந்தனர். ஆட்டோவில், 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் அமர்ந்திருந்தார்.
ஆட்டோ ஓட்டி வந்தவர் என்னிடம் வந்து, "சார் உங்களுக்கு இங்கிலீஷ் தெரியுமா?' என்றான். "தெரியும்' என்றேன்.
"அவர்கிட்ட கொஞ்சம் பேசுங்க சார். ஆயிரம் டாலர் மாற்ற வேண்டும் என்று சொன்னார். பர்மா பஜார் அழைத்து சென்றோம். அங்கே ஆயிரம் டாலரை வாங்கிக் கொண்டு ஓடி விட்டனர். இப்போது அவரது கையில் பணமில்லை. எங்களுக்கு ஆட்டோ சார்ஜே, 700 ரூபாய் ஆகிவிட்டது...' என்று கூறினர்.
நான் அந்த நபரிடம் ஆங்கிலத்தில் பேசினேன். "இன்று மாலை, 4.00 மணி பிளைட்டில் சிங்கப்பூர் போக வேண்டும். பல்லாவரத்தில் மனைவியும், குழந்தையும் காத்திருக்கின்றனர். காலையிலிருந்து சாப்பிடவில்லை. இவர்களுக்கு ஆட்டோ சார்ஜ் கொடுக்கவும் பணம் இல்லை. தற்சமயம் என்னிடம் இருப்பது இந்த ரோலக்ஸ் வாட்சும், சோனி ஹான்டிகாம் கேமராவும்தான்...' என்று கூறி, இரண்டுக்கும், பில்லும், அதற்கு டூட்டி கட்டிய ரசீதும் காட்டினார். மொத்தம் 38,000 ரூபாய். "இதை வைத்துக் கொண்டு, 15,000 கொடுங்கள். நான் ஊர் போய் சேர வேண்டும்...' என்றார்.
"என்னிடம் பணம் இல்லை. அதனால், எனக்கு வேண்டாம். ஏதாவது கடையில் கொடுங்கள், பணம் கிடைக்கும்...' என்றேன்.
இதற்குள் என் நண்பர் வந்து விட்டார். இந்த கதையை கேட்ட அவர், "ஐயோ நம் ஊருக்கு வந்து கஷ்டப்படுகின்றனரே... அந்த, 4.00 மணி பிளைட் பிடிக்க வேண்டுமே என்ற கவலையில் உதவ முன் வந்தார். அருகிலிருந்த வங்கிக்கு அழைத்துச் சென்று, 15,000 ரூபாய் எடுத்து கொடுத்து, மேலும், அவர் கேட்காமலே, 1,000 ரூபாயும் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.
அதன்பின், அவரிடம் வாங்கிய ரோலக்ஸ் வாட்ச், சோனி கேமரா இரண்டையும், அவரது நண்பர் கடைக்கு எடுத்து சென்றோம், அதன் மதிப்பறிய. அவர் ரோலக்ஸ் வாட்ச், 1,500 ரூபாய் என்றும், கேமரா, 2,500 ரூபாய் என்றும் கூறினார். இரண்டுமே டூப்ளிகேட்; சைனா மேக் என்றார்.
அதிர்ச்சியில் பேசவே முடியவில்லை. மொத்தத்தில் நண்பருக்கு, 12,000 ரூபாய் நஷ்டம். "இந்த வயதில் பாடம் கற்றுக் கொண்டதற்கு எனக்கு செலவு, 12,000 ரூபாய்...' என்றார் மனம் தளர்ந்தவராக.
இப்படிப்பட்டவர்கள், இது போன்ற டூப்ளிகேட் பொருட்களுடனும், டூப்ளிகேட் ரசீதுடனும் சுற்றிக் கொண்டுதான் இருப்பர். இளகிய மனம் படைத்தவர்கள் ஏமாந்து விடாமல் இருக்க, எங்கள் அனுபவம் உதவும் என்று நம்புகிறேன்.

— எஸ்.ராமச்சந்திரன், சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:04 am

ஓ... இந்த பள்ளிக்கூட மாணவியர்!

அலுவலகத்திற்கு, தினமும் பஸ்சில் பயணம் செய்யும் போது, பள்ளிக்கூட மாணவ, மாணவியரின் காதல் சேஷ்டைகளையும், கடித பரிமாற்றங்களையும், கண் ஜாடைகளையும் பார்க்கும்போது, மனதுக்குள் வேதனையும், கோபமும் தான் எழுகிறது. இளம் பூக்கள் இப்படி அறியாமையால் காதல் தீயில் கருகுவதை நினைக்கையில், இவர்கள் வயதை குறை சொல்வதா அல்லது பெற்றோரை குறை சொல்வதா என்றே தெரியவில்லை.
பெற்றோரே... டீன் ஏஜ் பிள்ளைகள், உங்களுக்கு இருந்தால், அவர்களது நடவடிக்கைகளை கவனியுங்கள். நீங்கள், "டிவி' நிகழ்ச்சிகளில் மூழ்கியிருக்கும் நேரம், உங்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என்பதையும் கவனியுங்கள். அவர்கள் நன்றாக படிக்க வேண்டுமெனில், நீங்கள், "டிவி'யை மறக்க வேண்டும்.
படித்த பெற்றோராயின், அவர்களது படிப்பில் உதவி செய்யுங்கள். அவர்களோடு தோழமையுடன் பழகி, காதலின், வெற்று கவர்ச்சியையும், அழிவையும், செக்சின் அடிப்படை தத்துவத்தையும் விளக்கி, அதனால் ஏற்படும் விளைவுகளையும் நயமாக எடுத்துச் சொல்லுங்கள். இளமை பருவத்தில் கல்வியே சிறந்தது என்பதை எடுத்துச் சொல்லுங்கள். இதை சரியாக புரிந்து கொண்டால், உங்கள் பிள்ளைகள் காதல் எனும் மாய வலையில் சிக்கி, தங்கள் வாழ்க்கையை அழித்து கொள்ள மாட்டார்கள்.

— சவுந்தர்யா ராஜசேகர், கோவை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:04 am

சபாஷ்... சரியான ஐடியா!

என் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரது மேஜையில், பைல்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. "அலுவலக பைல்களை வீட்டிற்கு கொண்டு வந்து பார்க்கிறீர்களா?' என கேட்டேன்.
"இல்லை. இதெல்லாம் வீட்டு சமாச்சாரம் தான்' என்று அவர் சொன்ன விஷயம் வியப்படைய வைத்தது. "வீட்டு வரி, தண்ணீர் வரி, கரன்ட் பில், பிள்ளைகளின் அட்மிஷன், வரவு செலவு, வீட்டுக்கு வரும் அழைப்பிதழ்கள் என, எல்லாவற்றையும் தனித்தனியாக உறைகள் போட்டு, அவற்றின் மேலே, அதன் தலைப்பை எழுதி வைத்து விடுவேன். மேலும், கரன்ட் பில், வீட்டு வரி கட்ட வேண்டிய தேதி, போன்ற விஷயங்களை பென்சிலால் குறித்து வைப்பேன்.

"ஒவ்வொரு உறையிலும், அது தொடர்பான தபால்கள் வர வர, அவற்றை, "டேக்' போட்டு இணைத்து விடுவேன். இதனால், எந்த பில்லை எங்கே வைத்தோம் என்று தேட வேண்டியதில்லை. எல்லாவற்றையும் மேஜையில் வைத்திருப்பதால் பார்க்கவும், எடுக்கவும், வீட்டில் உள்ள அனைவரும் கையாள்வதற்கு எளிதாகவும் இருக்கிறது' என்றார்.
நண்பரின் யோசனையை நாமும் பின்பற்றலாமே!

— இளங்கோ, கரிமேடு.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:08 am

முன்னெச்சரிக்கை முத்தண்ணா!

அலுவலக வேலையாக, சக அலுவலருடன் புதுச்சேரி சென்றிருந்தோம். ஓட்டலில் ரூம் பதிவு செய்தவுடன், "லெட்ஜர்ல ரூம் நெம்பர் போடாதீங்க. நான் போய் ரூமை ஒரு தடவை, "செக்' பண்ணி பார்த்துட்டு வந்துடறேன். பிறகு, ரூம் நெம்பரை என்ட்ரி போடுங்க...' என்று சொல்லி, ரூம்பாயுடன் ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று, சோதித்த பின், "ஓ.கே., ரூம் நெம்பர் போடுங்க...' என்று சொல்லி, சாவியை வாங்கிக் கொண்டான்.
அவனது இந்த நடவடிக்கை, எனக்கு ஆச்சரியமாக இருக்கவே, அவனிடம் இது குறித்து கேட்டேன்... "அது ஒண்ணுமில்லை மாப்ள... நாம தங்குறது ஒண்ணும் ஸ்டார் ஓட்டல் இல்ல. சாதாரண ஓட்டல் தான். ஒரு முறை, திருச்சியில ஒரு ஓட்டல்ல பாத்ரூம் குழாயை திறந்த போது, துருப்பிடித்த குழாய் உடைந்து, டிரஸ் பாழானது மட்டுமில்லாம, அந்த ஓட்டல்காரங்க, குழாயை, நான் தான் உடைச்சேன்னு சொல்லி, அதுக்கும், "தண்டம்' வசூலிச்சிட்டாங்க. அதுலேர்ந்து, எந்த ஊருக்குப் போய், எந்த ஓட்டல்ல தங்கினாலும், ரூம்ல எல்லாம் ஒழுங்கா, உருப்படியா இருக்கான்னு, "செக்' பண்ணிப் பாக்குறதை, வழக்கமா வச்சிருக்கேன்...' என்றான்.
ஓட்டல்களில் ரூம் போடுவதிலும், இவ்வளவு பிரச்னைகள் உள்ளதை நண்பனின் அனுபவம் உணர்த்தியது.

— ந.மகேந்திரவர்மன், மறைமலைநகர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:08 am

நமீதா வேண்டாம் மச்சான்ஸ்!

உற்சாக பானத்தை ஆராதிப்பவன் நான். உ.பா., அருந்திவிட்டு தூங்கும் நாட்களில் எல்லாம், இடுப்பு கைலி நெகிழ்ந்து, நமீதா போல் அலங்கோலமாய் படுத்து கிடப்பேன் போல. இது, என் மனைவிக்கு பழக்கமான காட்சியாக இருந்தாலும், என் 15 வயது மகனின் முகத்தை சுளிக்க வைத்திருக்கிறது. பல விதமாய், "கமென்ட்' அடிக்க ஆரம்பித்தான்.
நானும், கைலியை இறுக்கிக்கட்டி, அய்யம்பேட்டை பாய் போல் இடுப்பில் சுருட்டி விட்டு பார்த்தேன். கைலி மேல் பெல்ட் அணிந்தும் பார்த்தேன்; பலனில்லை. காலையில் கைலி அவிழ்ந்து கிடந்து, "மச்சான்ஸ்...' என்றது.
கடைசியில் என் நண்பர் ஒருவர் ஐடியா கொடுத்தார். உ.பா., அருந்த பெர்முடா டவுசருடன் போய், அதனுடனேயே அருந்துவது. உ.பா.,விற்கு பின், தொளதொள பைஜாமா அணிந்து தூங்குவது. பெர்முடாவும், பைஜாமாவும் என் மானத்தை காப்பாற்றுகின்றன.
உ.பா., அன்பரே... லுங்கி தவிர்ப்பீர்; தொளதொள பெர்முடா டவுசர் அணிவீர்!

— ஆர்.ஒய்.எம்.பாலகிருஷ்ணன், சாத்தூர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:09 am

உழைப்புத் திருடர்கள்!

உலகம் உருண்டை என்பது, நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன், தொழிலாளர்கள் சிகாகோ நகரில் போராடி, ரத்தம் சிந்தி, உயிர்களை இழந்து, "எட்டு மணி நேர வேலை...' நேரத்தை வென்றெடுத்தனர். அதுவரை அவர்களை, 12 மணி நேரம் முதல், 16 மணி நேரம் வரை, கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தனர்.
தற்போது தமிழகத்தில், பல தொழிற்சாலைகளிலும், குறிப்பாக வெளிநாட்டு கம்பெனிகளில்,
12 மணி நேர வேலை அமலில் உள்ளது. அவர்களுக்கு ஆதரவாகப் பரிந்து பேச, அங்கு தொழிற்சங்கங்களும் கிடையாது.
நண்பரின் மகன், அதுபோன்றதொரு கம்பெனியில் பணியில் இருந்தான். லீவு போடாமல் வேலைக்கு வந்தால், 500 ரூபாய் இன்சென்டிவ். லீவு போட்டால், 500 ரூபாய் கட் என்று ஒப்பந்தம். ஊதியம், 4,000 ரூபாய்.
நண்பரின் மகன், ஒரு ஆண்டாக விடுமுறையே எடுக்காமல், பணிபுரிந்து இருக்கிறான். சம்பளத்தை மட்டும் பிரதி மாதம், 10ம்தேதி கொடுத்து வந்தவர்கள், இன்சென்டிவை இன்னும் சாங்ஷன் ஆகவில்லை என்று தட்டிக் கழித்து வந்தனர்.
சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல், தொடர்ந்து எட்டு நாட்கள் லீவு எடுத்துவிட்டு, மீதி, 22 நாட்கள் வேலை செய்து இருக்கிறான். ஆனால், அதற்குரிய சம்பளத்தைத் தராமல், ஒப்பந்தப்படி, 4,000 சரியாகப் போச்சு என்கின்றனராம்!
இந்த உழைப்புத் திருடர்களை என்ன செய்வது?

— வி.லட்சுமணன், மயிலாப்பூர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:09 am

கிளி போல மனைவி இருந்தாலும்...

என் தோழியின் கணவர், அலுவலகத்திற்கு செல்லும் போதெல்லாம், எதிர் வீட்டு பெண், ஏதேனும் ஒரு காரணமாக வெளியே வருவாள். மிகவும் சுமாராக இருப்பாள். தோழியோ நல்ல அழகி. எனவே, விளையாட்டுத்தனமாக, "அந்த பெண் உங்களையே விழுங்கி விடுவது போல் பார்க்கிறாள்...' என்று தினமும் கிண்டல் பண்ணியிருக்கிறாள் தோழி.
ஆரம்பத்தில் அதை பொருட்டாக மதிக்காதவர், நாளைடைவில் மனம் மாறி, இப்போது இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு விட்டது. "அவளை திருமணம் செய்து கொள்ள போகிறேன். சம்மதம் என்றால் வீட்டில் இரு. இல்லையெனில், விவாகரத்து செய்து கொள்வோம்...' என்று மிரட்டும் அளவுக்கு நிலமை முற்றி விட்டது.
காதல் திருமணம் செய்து கொண்டதால், பெற்றோர் ஆதரவும் இன்றி, வேறு வழியில்லாமல் அவர்களுக்கு வேலைக்காரி போல, ஒரே வீட்டில் இருக்கிறாள் தோழி. ஆண்களின் மனம் குரங்கு போன்றது. எனவே, எதைப் பேசினாலும் யோசித்து பேசுங்கள் பெண்களே!

— திவ்யா சுரேந்தர், மதுரை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:09 am

ரெப்ரெஜிரேட்டரில் வைத்த அப்பளம்!

"நண்பர் ஒருவரின் வீட்டுக்கு, நண்பகல் நேரத்தில் சென்றிருந்தேன். அனைவரும் ஒன்றாக அமர்ந்து, உணவருந்திக் கொண்டிருந்தனர். நண்பரின் மனைவி, பொரித்துக் கொண்டு வந்து பரிமாறிய அப்பளம், ஒரு குழந்தையின் தட்டில் போடும் போது, உடைந்து விட்டது.
"உடைந்த அப்பளம் வேண்டாம். எனக்கு, உடையாத அப்பளம் தான் வேண்டும்...' என்று, குழந்தை அழத் தொடங்கியது. "முழு அப்பளத்தையா முழுங்கப் போகிறாய்? உடைத்து, உடைத்துத்தானே சாப்பிடப் போகிறாய். அதையே சாப்பிடு...' என்றார் நண்பரின் மனைவி.
குழந்தை மறுத்தது. இருவரும் அவரவர் நிலையில் உறுதியாக இருக்க, மனைவிக்காக பரிந்து பேசினார் நண்பர். "எனக்கு முழு அப்பளம் தான் வேண்டும். நான் முழுசாகவே அதை சாப்பிடுவேன்...' என்றது குழந்தை.
அனைவருக்கும் ஆச்சரியம். சரி, என்னதான் நடக்கிறது. எப்படி சாப்பிடப் போகிறது என்ற ஆர்வ மிகுதியால், ஒரு முழு அப்பளத்தைப் பொரித்துக் கொடுக்கச் சொன்னார் நண்பர். அப்பளத்தை கையில் வாங்கிய குழந்தை, அதை எடுத்துச் சென்று, ரெப்ரெஜிரேட்டரின் சில்லர் தட்டில் ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து எடுத்து வந்தது. இப்போது, அப்பளம் அப்படியே துணி மாதிரி மடிக்கும் பக்குவத்தில் இருந்தது.
"இப்ப பாருங்க... முழு அப்பளத்தை எப்படி நான் சாப்பிடுறேன்னு...' என்று சொல்லி, அப்பளத்தை மடித்து, வாய்க்குள் போட்டு, சாப்பிடத் துவங்கியது. நாங்கள் பிரீசரில் வைத்த மாதிரி, உறைந்து போனோம்.

— மு.தட்சிணாமூர்த்தி, வேணுகோபாலபுரம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:10 am

இன்று பேச மாட்டேன்

என் நண்பன், ஒரு தொழிலதிபர். என்னை விட ஐந்து வயது இளையவன். ஐந்து ஆண்டுகளுக்கு முன், அவன் உயிர்க்கொல்லி நோய் ஒன்றால் பீடிக்கப்பட்டு, தெய்வாதீனமாய் தப்பினான். நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவனுடன் போனில் பேசுவேன்.
ஒரு ஞாயிறு, காலை 8.00 மணிக்கு அவனுக்கு போன் பண்ணினேன். நண்பனின் மகன் போனை எடுத்தான். "அப்பா இப்ப பேசமாட்டாரு...' என்றான். "நான் அவனின் <உயிர் நண்பன்...' என்றேன். "கடவுளே பேசினாலும், அப்பா பேசமாட்டார். ஏன்னா ஞாயிற்றுகிழமை அப்பா மவுன விரதம் இருக்காரு...' என்றான்.
இன்னொரு நாள், நண்பனை நேரில் சந்தித்து, இது பற்றி வினவினேன். அதற்கு அவன், "உயிர் பிழைக்க வைத்த கடவுளுக்கும், எமனுடன் போராடி, என்னுயிரை மீட்ட என் மனைவிக்கும், நான் உயிர் பிழைக்க வேண்டும் என பிரார்த்தித்த நல்லுள்ளங்களுக்கும் நன்றி செலுத்த, இந்த மவுன விரதம். இந்த மவுன விரதம், உயிர் காக்கும் தொடர் மருந்தாக செயல்படுகிறது.
"தவிர, மன உறுதியை வளர்க்க, கோபம் குறைக்க, நன்றியுணர்வு பேண, இவ்வுலகில் இருந்தும், இல்லாமல் வாழ்ந்து பார்க்க, என் மவுனவிரதம் பயன்படுகிறது...' என்றான். இப்போதெல்லாம், வாரம் ஒரு முறை, நானும் மவுன விரதம் இருக்கிறேன்.

— பரந்தாமன், செய்யாறு.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:10 am

விவஸ்தை கெட்ட ஜென்மங்கள்!

கடற்கரையில் அமர்ந்திருந்தேன். சிறிது தூரத்தில், இரண்டு இளைஞர்கள் அமர்ந்து, சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர். நைசாக காதை நீட்டினேன். ஒருவர், தன் முதலிரவு அனுபவங்களை விலாவரியாக, உற்சாகம் கரைபுரள, சினிமா கதை போல் சொல்லிக் கொண்டிருந்தார். அதில், அவருடைய மனைவியின் உடலழகை விவரித்த போது, பேச்சில் பெருமை தாங்கவில்லை. மற்றவர், "ஜொள்ளு' விட்டு, கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த பேச்சைக் கேட்ட எனக்கு, அருவருப்பாக இருந்தது. எத்தனை அநாகரிகமான பேச்சு இது? குடும்ப அந்தரங்கங்களை இப்படி வெளிச்சம் போட்டு கூறினால், இவர் மனைவியை, நண்பர் பார்க்கும் போது, எப்படி நல்ல கண்ணோட்டத்தில் பார்க்கத் தோன்றும்? நண்பர் கூறின வார்த்தைகள் தானே நினைவுக்கு வரும். இது எந்தெந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்!
நீங்கள் இப்படி நண்பர்களிடம் சொல்லும் விஷயம், மனைவிக்கு தெரிந்தால், எத்தனை வேதனைப்படுவார்?
ரோட்டில் செல்லும் போது, உங்கள் மனைவியை, ஆண்கள் சாதாரணமாக பார்த்தால் கூட, எப்படி கோபம் வருகிறது? அப்படியிருக்க, நண்பர் உங்கள் மனைவியை நல்ல கண்ணோட்டத்தில் பார்க்க முடியுமா? யோசிங்க புதுமாப்பிள்ளைகளே !

— வீ.குணாளன், புதுவை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:11 am

கேட்டாளே ஒரு கேள்வி!

ஒரு திரைப்படத்தில், கமலஹாசன், குழந்தைகளின் முன்னிலையிலே மனைவியை முத்தமிடுவார். எதிலும், ஒளிவு - மறைவு இருக்கக் கூடாது. செக்ஸ் விஷயங்களை குழந்தைப் பருவத்திலேயே மனதில் பதிய வைத்து விட்டால், அவர்கள் வளர்ந்த பின், அந்த விஷயத்தில், "தவறு' செய்ய மாட்டார்கள் என்று ஒரு விளக்கமும் சொல்லப் படும்.
நல்ல விஷயந்தானே என்று, நானும், என் மனைவியும், காதலித்துக் கைபிடித்த கதையை, என் பேரன், பேத்திகளிடம் அவ்வப்போது, பிரஸ்தாபிப்பது வழக்கம்.
"ஆமாம்... நீயும், பாட்டியும் லவ் பண்ணுனதா சொல்றீங்களே... அப்போ பீச்சு, பார்க்ல எல்லாம் பாட்டு பாடிட்டே டான்ஸ் ஆடி இருப்பீங்களே... என்ன பாட்டு பாடுனே? அந்த பாட்டை இப்ப பாடி, அதே மாதிரி ஒரு டான்ஸ் ஆடு. உங்க பின்னணியில கூட டான்ஸ் ஆடி பாடுன உன் பிரண்ட்செல்லாம், இப்ப என்ன பண்றாங்க, எங்க இருக்காங்க?' என்றாள் ஒரு நாள்.
ஆடிப்போனேன். திரைப்படங்களில் ஹீரோவும், ஹீரோயினும், காதலிக்கும் போது, பாடிக்கொண்டே டான்ஸ் ஆடுவது போல வரும் காட்சிகளின் பாதிப்பு என்று புரிந்தது. என்ன செய்ய; என்ன சொல்ல?
— எம்.பாலசுந்தரம், சென்னை.
* நல்லவேளை... சினிமாவுல வர்ற ஹீரோ - ஹீரோயின் மாதிரி, "காஸ்ட்யூம்' போட்டுகிட்டு வந்து ஆடுங்கன்னு சொல்லாம விட்டாளே... அதுவரைக்கும் சந்தோஷப்படுங்க பாலா.

— பொ.ஆ.,
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:11 am

பக்தி என்பது என்ன?

அண்மையில், நான் என் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று, அங்கு தங்கும்படி நேர்ந்தது. அது பழைய காலப்பெரிய வீடு. வீட்டில் கிட்டத்தட்டப் பத்து குடும்பத்தினர், "போர்ஷன்'களில் குடியிருந்தனர். விடியற்காலை 5:00 மணியிருக்கும். மார்கழி மாதமாதலால், ஓரிரு, "போர்ஷன்'களில் வெங்கடேச சுப்ரபாதம் போன்ற பக்திப் பாடல்கள், "டிவி'களிலிருந்து ஒலிக்கத் தொடங்கின. அந்த ஒலி, எல்லாருக்குமே காதை அடைக்கும் அளவுக்கு இருந்தது. சற்று நேரத்திற்குள், கிட்டத்தட்ட எல்லா, "போர்ஷன்'களிலிருந்துமே விதவிதமான பக்திப்பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. இதில், இன்னும் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவரவர்கள் தங்களுக்குப் பிடித்தமான, "டிவி' சேனல்களை போட்டிருந்தனர். கிட்டத்தட்ட வெங்கடேச சுப்ரபாதம், கந்தர் சஷ்டி கவசம், ஐயப்பப் பாடல்கள், சில வேத மந்திரங்கள், மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்ரம், திருப்பாவை என்று, ஒட்டு மொத்தமாக அலறிக் கொண்டிருந்தது.
இதனால் ஏற்படும் ஒலி அளவு, எந்த அளவுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதை யாருமே உணர்ந்த மாதிரி தெரியவில்லை. இந்த சப்தம் காரணமாக, விடியற்காலையில் எழுந்து படிக்கும் பழக்கம் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு, அந்த பழக்கத்தை, பெற்றோரே இல்லாமல் செய்து விடுவர் போலிருக்கிறது.
இதற்காக, நான் தெய்வ பக்தி இல்லாதவன் என்று அர்த்தம் இல்லை. ஆனால், "டிவி'யில் போட்டால் தான் பக்தி என்பது அல்ல. அதை அவரவர்களுக்கு மட்டும், கேட்கிற மாதிரி வைத்துக் கொள்ளலாமே. அதைவிடச் சிறப்பு, வீட்டில் உள்ளவர்கள், அவரவர்களுக்கு பிடித்த ஸ்தோத்ரங்களையோ, பாடல்களையோ மற்றவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பாராயணம் செய்யலாமே!

— எஸ்.ராமசாமி, சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:11 am

காதலர்களே உஷார்...


என் தோழி, ஆண் நண்பருடன், நகரிலுள்ள பூங்கா ஒன்றுக்கு சென்றிருக்கிறாள். இருவரும், அத்துமீறி விளையாடிக் கொண்டிருந்த சமயம், எவனோ ஒரு இளைஞன், தன் கேமரா மொபைலில், அதை படமாக்கி எடுத்திருக்கிறான். சில தினங்களுக்குப் பின், மீண்டும் அதே பூங்காவுக்கு, தோழி, ஆண் நண்பருடன் சென்ற போது, இருவர் தம்மை அறிமுகம் செய்து, முன்பு தாங்கள் எடுத்த படத்தை, பிரின்ட் போட்டு காண்பித்திருக்கின்றனர்.
அதிர்ந்து போன தோழியும், அவளது ஆண் நண்பரும் பதறியபடி, அழுதனர். அவர்களிடம் பேரம் பேசி, தோழியின் இரண்டரை பவுன் செயின், மோதிரம், நண்பரின் செயின், வாட்ச், ரிங், இருவரது மொபைல்போன் உட்பட, பணமும் கணிசமாக பெற்றுக் கொண்டு, படத்தையும் கொடுத்து, மொபைலில் அழித்து விட்டோம் என்று சொல்லி, மொபைலையும், இவர்களிடமே கொடுத்து, "எஸ்கேப்' ஆகியிருக்கின்றனர். வெளியே தெரிந்தால் கேவலம் என்று, மூடி மறைத்துள்ள தோழி, நகையை தொலைத்ததாக கூறியிருக்கிறாள். பெரும் பிரச்னை <உருவாகி, தற்போது தப்பித்து விட்டாள்.
தோழியரே... பொது இடங்களில் கொஞ்சல், குலாவல் என, ஆண் நண்பருடன் வைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.
காதலர்களே... இவ்விஷயத்தில், உஷா ராய் இருங்கள்.

— எஸ்.மாரியம்மாள், திருநெல்வேலி.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:12 am

கணவர்களை நம்பாத மனைவியர்!

நான் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். காப்பீடு செய்யும் ஒருவர், தன் காப்பீடு தொகைக்கு வாரிசுதாரராக, ஒருவரை நியமனம் செய்ய வேண்டியது நடைமுறை அவசியம். இந்த வகையில், ஆண்கள் காப்பீடு செய்யும் போது, திருமணமான ஆண்களில், 95 சதவீதம் பேர், தங்கள் மனைவியைத்தான் வாரிசுதாரர்களாக பதிவு செய்கின்றனர். அதேசமயம், திருமணமான பெண்கள் காப்பீடு செய்யும் போது, குறைந்தபட்சம், 75 சதவீதம் பெண்கள், கணவனை தவிர்த்து, அண்ணன், அக்கா, அம்மா, அப்பா இப்படி உறவு முறைகளில் உள்ள வேறு யாரையாவது தான், வாரிசுதாரர்களாக பதிவு செய்கின்றனர்.
இந்த நிலைக்கு காரணம்... தனக்கு ஏதாவது ஆகிவிட்டால், கிடைக்கும் பணத்தை மனைவி பெற்றுக்கொண்டு, குடும்பத்திற்கு உபயோகமாக, ஏதாவது ஒருவழியில் பயன்படுத்திக் கொள்வாள் என்று, ஒரு ஆண் நம்பிக்கை வைத்து செயல்படுவதைப் போல், மனைவியாகிய ஒரு பெண், காப்பீடு செய்யும்போது, தமக்கு ஏதாவது ஆகிவிட்டால், அதற்காக கிடைக்கும் பணம், கணவன் கைக்கு போவதை விரும்பவில்லை என்று தெளிவாகிறது.
இதிலிருந்து தெரியவரும் உண்மை, சமூகத்தில் இன்று, "கணவன் - மனைவி' என, தம்பதியராக குடும்பம் நடத்தி வந்தாலும், பரஸ்பர புரிதலும், நம்பிக்கையும் ஊசலாட்டமாகத்தான் உள்ளதென்பதோடு, பெரும்பாலான கணவன்கள், மனைவியின் நம்பிக்கைக்கு உரியவராக இல்லாமலோ, அதற்கேற்றாற்போல், அவர்களின் நடவடிக்கை இல்லாமல் இருப்பதாகவே தெரிகிறது. இதுபோன்ற போக்கு தொடர்வதென்பது, எதிர்காலத்தில் கணவன் - மனைவி - குடும்பம் என்கிற அமைப்பையே குலைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
ஒவ்வொரு கணவனும், குடும்ப பொறுப்போடும், குறிப்பாக மனைவியின் நம்பிக்கைக்குரியவராகவும் தங்கள் செயல்பாட்டை மாற்றிக் கொள்வதும், சில இடத்தில் கணவன் பொறுப்புணர்வுடன் இருந்தாலும், அதை மனைவி புரிந்துகொள்ளாமல் மனதில், ஒரு அச்சவுணர்வுடனோ, வெறுப்புணர்வுடனோ, சந்தேகப்பார்வையுடனோ கணவனை தவிர்த்து, மற்றவர்கள் மீது நம்பிக்கைக் கொள்ளும் போக்கை மாற்றிக் கொள்வதும் மிக அவசியமானதும், காலத்தின் கட்டாயமுமாகும்.

— ஆர்.ரகுவர்மன், கபிஸ்தலம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:12 am

குடிநீர் தர மறுத்த கிராதகன்!

தொலைதூர ரயில் பயணங்களின் போது, நான் சைடு லோயர்பெர்த் ரிசர்வ் செய்து கொள்வேன். இரண்டு லிட்டர் பாட்டிலில் ஜின்னும், இன்னொரு இரண்டு லிட்டர் வாட்டர் பாட்டிலில், வோட்காவும் கலந்து வைப்பேன். ஒன்றை பெட்டிக்குள் பத்திரப்படுத்திக் கொண்டு, இன்னொன்றை குடிக்க வைத்துக் கொள்வேன்.
ஒரு வாய் குடிக்க, இருபது பக்கம் வாசிக்க செய்வேன். முழு பாட்டிலும் தீர, நான்கு மணி நேரமாக்குவேன். அந்த இடைவெளியில், நான்கு புத்தகங்களை வாசித்து விடுவேன். ஒரு தடவை என் பெட்டியில், ஒரு கணவன், மனைவி நான்கு வயது மகனும் பயணித்தனர். பொடியன், என் சரக்கு கலந்த வாட்டர் பாட்டிலை கேட்டு, கலாட்டா பண்ண ஆரம்பித்து விட்டான்.
"கொஞ்சுண்டு அவனுக்கு குடிக்க தாங்க சார்...' என்று, கணவன், மனைவி, இதர பயணிகளும், என்னை கெஞ்சினர். குட்டு வெளிப்பட்டு விடும் என்ற பயத்தில், மறுத்தேன்.
தொடர்ந்த களேபரத்தின் ஒரு கட்டத்தில், அம்மாகாரி என் பாட்டிலை பிடுங்கி, சிறிது குடித்து விட்டாள். துப்பவில்லை, வாந்தி எடுக்கவில்லை. கணவனிடம் திரும்பி, "உங்க சனியன் பிடிச்ச வேலையை செஞ்சிருக்கிறார். (மகனிடம் திரும்பி) அச்சுக் குட்டி... அந்த மாமா தண்ணி, ஆயித்தண்ணி. அடுத்த ஸ்டேஷனில் நிக்கட்டும். வேற தண்ணி வாங்கித் தருகிறேன்!' என்றாள்.
அசடு வழிந்தேன். அதன்பின், சரக்கு கலந்த ஒரு பாட்டிலும், சரக்கு கலக்காத ஒரு பாட்டிலும், எடுத்து போக ஆரம்பித்தேன். ஹி...ஹி!

— ஓ.ஜம்புலிங்கம், கோவை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:12 am

ஏ.டி.எம்., கொள்ளையை தடுக்க...

கடன் அட்டைகளுக்கு மட்டுமே பயன்பாட்டில் இருந்த ஏ.டி.எம்., வசதி, தற்போது அனைத்து வங்கிப்பணி, பணபரிவர்த்தனைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இயந்திரத்தில் கார்டை நுழைத்து, ரகசிய எண்ணை அழுத்தி, பணம் எடுக்கும் சில நொடிகளில், கார்டின் ஜாதகமும், ரகசியக் குறியீட்டு எண்ணும், திருடர்களால் களவாடப்பட்டு, அதன் மூலம் லட்சக்கணக்கில் திருடப்படும் சம்பவங்களும் சமீப காலமாக அதிகரித்துள்ளன.
"சைபர் க்ரைம்' போலீசும் கொள்ளையைத் தடுக்க, "பின் எண்ணை' அவ்வப்போது மாற்றச் சொல்லி அறிவுறுத்துகிறது. ஆனாலும், கொள்ளை சம்பவங்கள் தொடர்கதையாக@வ உள்ளன. இதை முற்றிலும் தடுக்க, ஒரு உபாயம் உள்ளது. மிஷினில் கார்டை நுழைத்து, பின் எண்ணையும் அழுத்திய பின், வந்திருப்பவர் கார்டின் உண்மையான உரிமையாளர் தானா என்பதை அறிய, இயந்திரம் அவரது பிறந்த தேதி மற்றும் தந்தையின் பெயரை மிஷினில் அழுத்தச் சொல்லலாம்.
இதனால், பரிவர்த்தனைக்கு, ஓரிரு நிமிடங்கள் கூடுதலாகலாம். ஆனால், நம்முடைய அட்டையின் ரகசிய எண்ணும், மற்ற விவரங்களும் திருடப்பட்டு, அதன் மூலம் நிகழும் கொள்ளை தவிர்க்கப்படும். வங்கிகளும், காவல் துறையும் கவனத்தில் கொள்ளுமா?

— ஜெ.கும்பகர்ணன், சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:12 am

மனைவியிடம் எதையும் மறைக்காதீர்!

பிறந்த வீட்டிற்கு சென்றிருந்தேன். ஒரு மாதம் தங்க நேர்ந்தது. அதற்குள் என் கணவர், இரண்டுமுறை என்னை வந்து பார்த்துச் சென்றார். வரும்போதேல்லாம் ஆபீஸ் விஷயம் மட்டுமின்றி, நான் இல்லாதபோது வீட்டில் நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்வார்.
ஒரு மாதம் முடிந்து வீட்டிற்கு சென்றேன். அவசரத் தேவை என்றால் கூட கதவை சாத்திக் கொள்ளும் பக்கத்து வீட்டுப் பெண்மணி, தானாக வந்து பேசினார். "நீங்கள் இல்லாத போது அலுவலகம் செல்லும் உங்கள் கணவர், இரவில், நேரத்துக்கு வீடு திரும்புவதில்லை. இருமுறை, வீட்டிற்கு இரவு வரவேயில்லை. காலையில் தான் வந்தார்...' என்றாள்.
"நீ இல்லாதபோது, வீட்டிற்கு வர பிடிக்கவில்லை. எனவே, ஓவர்டைம் பார்த்துவிட்டு அதிகாலை 3:00 மணிக்கு தான் வீட்டிற்கு வந்தேன்...' என்று, என் கணவர் என்னிடம் முன்பே சொல்லியிருந்தார். அதற்கேற்றார்போல், அந்த மாத சம்பளமும் அதிகம் கிடைத்தது.
அதனால், அந்த பெண்மணி கூறியதை பொருட்படுத்தவில்லை நான். கணவன் - மனைவியிடையே ஒளிவு மறைவு இல்லாமல் இருந்தால், பிறர் பேச்சை கேட்டு, வீண் சந்தேகம் மற்றும் சண்டை வராமல் தடுக்கலாம்.

— நிர்மலா செந்தில்குமார், சிவகங்கை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:13 am

பஸ்சில் தூங்கும் இளம் பெண்களே!

இரவு நேரத்தில், பேருந்தில் பயணம் செய் தேன். உட்கார இடம் இல்லாததால், நின்று வந்தேன். அப்போது, பலரும் பின்பக்கம் திரும்பி பார்த்த வண்ணம் இருந்தனர். என்னதான் பார்க்கின்றனர் என்று நானும் திரும்பி பார்த்தேன். ஆடை கலைந்த நிலையில், கவர்ச்சி தெரியும்படி, அழகான இளம்பெண் ஒருத்தி தூங்கிக் கொண்டிருந்தாள். அந்த காட்சியைத்தான், இமைக்க மறந்து, பார்த்துக் கொண்டிருந்தனர். இதை கண்ட நான் திடுக்கிட்டேன்.
பெண்கள், எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இப்படி தன்னை மறந்த நிலையில் தூங்குவது, ஆண்களை தவறு செய்ய தூண்டும். எனவே, தூக்கம் வரும்போது, தோளைச் சுற்றி சேலையை நன்றாக இழுத்துச் செருகிக் கொண்டு தூங்கலாமே!
சமீபகாலமாக, நாட்டில் நடக்கும் கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்களை கேள்விப்பட்ட பிறகாவது, நாமும் கொஞ்சம் உஷாராக இருப்பது அவசியம்.

— வி.மாதவன், திருப்பூர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:13 am

படித்தால் மட்டும் போதுமா?

சமீபத்தில், வங்கிக்கு சென்று பணம் செலுத்துவதற்கு, சலானை பூர்த்தி செய்து கொண்டு இருந்தேன். அப்போது ஒரு மாணவி, தயங்கி தயங்கி வந்து, "மேடம் இந்த சலானை கொஞ்சம் எழுதி கொடுக்க முடியுமா?' என்று கேட்டாள். நான், "பொறும்மா, நான் பணத்தை கட்டிவிட்டு, பின் உனக்கு எழுதி தருகிறேன்...' என்றேன்.
பணம் கட்டிவிட்டு வந்து, அந்த மாணவியை அழைத்து, "என்னம்மா படிக்கிறாய்?' என்றேன். பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படிப்பதாக கூறினாள்.
"ஏம்மா... இவ்வளவு படித்துவிட்டு, ஒரு வங்கி சலான் கூட எழுத தெரியாதா... படிச்சு என்னம்மா பயன்? உனக்கும், படிக்காதவங்களுக்கும் என்னம்மா வித்தியாசம்?' என்று கேட்ட உடன், வெட்கத்தோடு சிரித்து, தலையை குனிந்தாள்.
பின், சலானில் உள்ள கேள்விகளை விளக்கி, அவளையே பதில் எழுதச் சொன்னேன்.
இப்படி, வங்கி, தபால் அலுவலகங்கள், அரசு அலுவலகங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தெரியாமல், நன்கு படித்தவர்கள் கூட குழப்பத்தோடு முழித்துக் கொண்டு இருப்பதை காணலாம்.
படித்தவர்கள், முடிந்தவரை சலான் மற்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது எப்படி என்று அறிந்து கொள்வது நல்லது.

— ஜி.கலாவதி, பொள்ளாச்சி.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:13 am

முதல் இரவு அறைக்கதவை தட்டியவர்கள்!

நண்பனின் தங்கைக்கு திருமணம் நடந்தது. மாப்பிள்ளையின் நண்பர்கள் ஏழெட்டு பேர் வந்திருந்தனர். திருமணத்திற்கு வந்திருந்த இளம் பெண்களை, "சைட்' அடித்து, இஷ்டப்படி கிண்டல் செய்தனர். திருமண நாளில் தகராறு வேண்டாம் என்பதால் பொறுத்துக் கொண்டோம்.
அன்று இரவு, முதலிரவு அறைக்குள் மாப்பிள்ளையும், பெண்ணும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின், அளவுக்கு மீறி உற்சாக பானம் அருந்தியதால், சுயநினைவின்றி, முதலிரவு அறைக்கதவை பலமாக தட்டினர் மாப்பிள்ளையின் நண்பர்கள். "டேய் மாப்ள... வெளியே வாடா... வழக்கம்போல் எங்களோடு சேர்ந்து குடிச்சிட்டு, உள்ளே போடா...' என்று கத்தி கலாட்டா செய்தனர். அதுவரையில் பொறுமையோடு இருந்த நாங்கள், ஆத்திரம் தாங்காமல், கட்டை, கம்புகளால் மாப்பிள்ளையின் நண்பர்களை அடித்து விரட்டினோம்.
திருமணத்திற்கு வரும் நண்பர்கள், நாகரிகமாக நடந்து கொள்ளவில்லை என்றால் இந்த கதிதான். திருமணம் என்றாலே, நண்பர்களுக்கு மது வாங்கி கொடுக்கும் கலாசாரத்தை நிறுத்தினாலே பாதி பிரச்னை தீரும்.

— எஸ்.எம்.ராமகிருஷ்ணன், மதுரை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:14 am

சுயமாக வேலை செய்ய குழந்தைகளை பழக்குங்கள்!

ரூமில் தங்கி வேலைப் பார்க்கிறேன். என் ரூமில் டியூப் லைட் எரியவில்லை. எனக்கு கரன்ட் சம்பந்தமாக அரிச்சுவடு கூடத் தெரியாது. சொல்ல வெட்கப்பட்டு, இதை மற்றவர்களிடம் சொல்லவில்லை. பல நாட்களுக்குப் பின், எலக்ட்ரீஷியன் வந்து சரி செய்தார்.
இன்னொரு சமயம், எதிர் வீட்டு அம்மாள், "தம்பி உனக்கு பீஸ் போடத் தெரியுமா?' என்றார். "எனக்குத் தெரியாது...' என்று சொல்வதற்குள் கூனி, குறுகி போய் விட்டேன். சின்ன வயதில் இருந்தே, "அதை தொடாதே ஷாக் அடிக்கும், அங்க போகாதே விழுந்துடுவ...' என்று, பயமுறுத்தி வளர்க்கப்பட்டதால், முப்பது வயதாகியும், கூச்சத்தாலும், பயத்தாலும் எந்த காரியத்தையும் தனியாக செய்ய முடிவதில்லை. எனவே, பெற்றோரே... உங்கள் குழந்தைகளை தைரியமுள்ள, அறிவுள்ள குழந்தைகளாக வளருங்கள். உங்கள் வீடுகளில் தச்சர், எலக்ட்ரீஷியன், பெயின்டர் ஆகியோர் வேலை செய்யும் போது, பிள்ளைகளை பார்க்க விடுங்கள். அவற்றை கூர்ந்து கவனித்து, திரும்ப செய்யுமளவிற்கு, அவர்களை பழக்குங்கள். எல்லாவற்றையும் கற்று வைத்திருந்தால், அவசரத் தேவைகளுக்கு உதவுவதுடன், சுய தொழில் செய்து முன்னேறுவதற்கும் வழி உண்டாகும்.

— மு.விஜயகுமார், சென்னை.

Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 12:14 am

நண்பரின் யுக்தி!

அண்மையில், நண்பர் ஒருவர் ஊருக்கு வெளியே புதிதாக அமைந்த லே - அவுட்டில் வீடு கட்டி, கிரகப் பிரவேசம் செய்தார். கிரகப் பிரவேசத்திற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தவிர, அந்த பகுதியைச் சேர்ந்த அஞ்சல் அ<லுவலகத்தில் பணியாற்றும் தபால்காரர், கேஸ் ஏஜென்சியின் கேஸ் டெலிவரி செய்யும் ஆட்கள் போன்றோரையும், என் நண்பர் அழைத்திருந்தார். வந்திருந்த உறவினர்களும், நண்பர்களும், விவரம் தெரியாமல் முழிக்கும் போது, நண்பர் அவர்களை அழைத்த காரணத்தை விளக்கினார்.
பொதுவாக, ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் வீடு கட்டி குடிபோகும்போது, நமக்கு வரும் தபால்கள், சரியான நேரத்தில் கிடைப்பது மிகவும் அரிது. அதற்கு ஒரு முக்கிய காரணம், வீட்டை கண்டுபிடிப்பதில் உள்ள சிரமம்தான். தாமதத்தால் பாதிப்பு அடைவது என்னவோ நாம்தான். ஆகவே, அந்த சிரமத்தை போக்க, நண்பர் செய்த யுக்தி தான் அவர்களையும் கிரகப் பிரவேசத்திற்கு அழைத்தது. என்ன, நண்பரின் யுக்தி வரவேற்கத்தக்கதுதானே? நாமும் அதை பின்பற்றலாமா?

— தேவதாஸ், மதுரை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 2 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum