Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-14 தூங்காத ஓர் இரவு
Page 1 of 1 • Share
மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-14 தூங்காத ஓர் இரவு
உலகில் நோய்மையை சந்திக்காத மனிதரே இல்லை. நாம் அனைவரும் கட்டாயம் கடந்தே வந்து இருப்போம். ஆம், இது ஒரு வினோதம் கொண்டது தான். எத்தனை பெரிய மனிதராய் இருந்த போதும் ஒரு காய்ச்சல் வரும் போது தன்னை அறியாமல் ஒரு சிறு பிள்ளை போல் முனங்குவது உண்டு.
நோய்மை யுற்றவனுக்கு மருந்தை போலவே சிறிது மனதுக்கு இதமான வார்த்தைகளும் , கனிவும் தரும் சில உறவுகளும் தேவை படும். சாதரண நாட்களைக் காட்டிலும் மனது அதிக அங்கிகாரம் எதிர் பார்க்கும். தன்னை யாரெல்லாம் கவனிக்கின்றனர் என்ற எண்ணம் தேட துவங்கும். பல நேரங்களில் அதுவே ஞானம் பற்றி சிந்திக்க கிடைத்த கால அவகாசம் போல இருக்கும். இறைவனை நினைக்க தோன்றும், இன்னும் பலவாறாக..
தன் இரு கைகளுக்கு இடையில் மனம் யார் கையையாவது விரல் கோர்த்து அணைத்து கொள்ள மாட்டோமா? என மனம் ஏங்கும். நோய்மை உற்றவனின் நாட்கள் நத்தையின் மீது ஏறி பயணிக்கின்றது. ஆதலால் ஒரு துணை தேவைப்படுகிறது மனதிற்கு இதமாக...
நிலா பார்த்து கொண்டு ஜன்னல் ஓர படுக்கையில் அவன் சிந்தனை வெறுமை கொண்டு தீர்க்க முடியா ஒரு பின்னலை போல் நகருமே அது உணருகையில்.... அனுபவம் விவரணைக்கு அப்பாற் பட்டது.
அவன் தூங்காத இரவொன்று நோய்மை யுற்றவரோடு அவரைக்கவனித்து பாருங்கள். அது உங்களின் வாழ்வில் ஒரு தூங்காத இரவாக மட்டும் இல்லை உங்கள் அகம் ஒரு வேளை விழிக்க அன்பின் விழி விசாலமாக வாய்ப்பாக கூட இருக்கலாம். ஆம் இன்று பித்தனும் அந்த இரவோடு கதைத்து கொண்டு இருப்பது உங்களுக்கும் கேட்கிறதா?................
நோய்மை யுற்றவனுக்கு மருந்தை போலவே சிறிது மனதுக்கு இதமான வார்த்தைகளும் , கனிவும் தரும் சில உறவுகளும் தேவை படும். சாதரண நாட்களைக் காட்டிலும் மனது அதிக அங்கிகாரம் எதிர் பார்க்கும். தன்னை யாரெல்லாம் கவனிக்கின்றனர் என்ற எண்ணம் தேட துவங்கும். பல நேரங்களில் அதுவே ஞானம் பற்றி சிந்திக்க கிடைத்த கால அவகாசம் போல இருக்கும். இறைவனை நினைக்க தோன்றும், இன்னும் பலவாறாக..
தன் இரு கைகளுக்கு இடையில் மனம் யார் கையையாவது விரல் கோர்த்து அணைத்து கொள்ள மாட்டோமா? என மனம் ஏங்கும். நோய்மை உற்றவனின் நாட்கள் நத்தையின் மீது ஏறி பயணிக்கின்றது. ஆதலால் ஒரு துணை தேவைப்படுகிறது மனதிற்கு இதமாக...
நிலா பார்த்து கொண்டு ஜன்னல் ஓர படுக்கையில் அவன் சிந்தனை வெறுமை கொண்டு தீர்க்க முடியா ஒரு பின்னலை போல் நகருமே அது உணருகையில்.... அனுபவம் விவரணைக்கு அப்பாற் பட்டது.
அவன் தூங்காத இரவொன்று நோய்மை யுற்றவரோடு அவரைக்கவனித்து பாருங்கள். அது உங்களின் வாழ்வில் ஒரு தூங்காத இரவாக மட்டும் இல்லை உங்கள் அகம் ஒரு வேளை விழிக்க அன்பின் விழி விசாலமாக வாய்ப்பாக கூட இருக்கலாம். ஆம் இன்று பித்தனும் அந்த இரவோடு கதைத்து கொண்டு இருப்பது உங்களுக்கும் கேட்கிறதா?................
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-14 தூங்காத ஓர் இரவு
உறங்காத இரவுகள்தான் வாழும் நாட்களாகவே இருக்கிறது என்பதை நானும் அறிந்திருக்கிறேன்...
என்னையும் சில உறங்காத இரவுகள் கடந்ததுண்டு
என்னையும் சில உறங்காத இரவுகள் கடந்ததுண்டு
Re: மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-14 தூங்காத ஓர் இரவு
உங்களுக்கும் கேட்கிறதா?................
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-14 தூங்காத ஓர் இரவு
உண்மைதான் பித்தன்பித்தன் wrote:ஆம் இன்று பித்தனும் அந்த இரவோடு கதைத்து கொண்டு இருப்பது உங்களுக்கும் கேட்கிறதா?................
நோயில் அவதிப்படும் நாழிகையில் ஒவ்வொருவர் எண்ணமும் இதுவாகத்தான் இருக்கும் .இது போன்ற நேரங்களில் அன்பான வார்த்தையும் அனுசரிப்புமே மிக சிறந்த மாத்திரைகள் .
கட்டுரையை படிக்கும் சமயத்தில் பித்தனுக்கு வேண்டியவர்கள் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையா என கவலையும் தொற்றி கொள்கிறது.
Re: மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-14 தூங்காத ஓர் இரவு
"பித்தனுக்கு வேண்டியவர்கள் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையா என கவலையும் தொற்றி கொள்கிறது."
உங்களின் அன்பில் அகம் மகிழ்கிறேன் நண்பரே.
உண்மையில் பித்தனுக்குத்தான் சில நாட்களாய் உடல் நலக்குறைவு. ஒன்றும் பெரிய அளவில் இல்லை. சற்றே காய்ச்சல் மற்றும் சளி....
நோய்மை பற்றி சிந்திக்கும் போது தோன்றியதை பதிந்தேன். விடுதியில் இறுமல் காரணமாக தூக்கம் தொலைந்த போது எதையும் வாசிக்க கூட மனம் விரும்ப வில்லை. சரி எழுதுவோம் என எடுத்த முயற்சி தான்.
பல்கலைகழக விடுதி, பல மொழி பேசும் நண்பர்களின் கனிவு, பித்தன் உறங்க வில்லை என்ற காரணத்தால் பித்தனோடு எது எதையோ பேசி இரவை கடத்த உதவிய அறை நண்பர்கள்.
மாத்திரைகளை சரியாக எடுத்து கொள்கிறேனா? என்பது பற்றிய கண்டிப்புடன் கூடிய கவனிப்பு . நோய்மை மறக்க செய்யும் அவர்களின் களிப்பு கதையாடல்கள்.
இதைபற்றி சிந்திக்க துவங்கும் பொழுதில், நோய்மை என்பது என்ன? அப்போது அவன் மனதில் ஓடும் எண்ணங்கள் என்ன? நாம் நோய்மை யுற்றவரை எப்படி பார்க்கிறோம்? என்பது மனம் பேசிய சில பிதற்றல்களே... இந்த பதிவு.
உங்களின் அன்பில் அகம் மகிழ்கிறேன் நண்பரே.
உண்மையில் பித்தனுக்குத்தான் சில நாட்களாய் உடல் நலக்குறைவு. ஒன்றும் பெரிய அளவில் இல்லை. சற்றே காய்ச்சல் மற்றும் சளி....
நோய்மை பற்றி சிந்திக்கும் போது தோன்றியதை பதிந்தேன். விடுதியில் இறுமல் காரணமாக தூக்கம் தொலைந்த போது எதையும் வாசிக்க கூட மனம் விரும்ப வில்லை. சரி எழுதுவோம் என எடுத்த முயற்சி தான்.
பல்கலைகழக விடுதி, பல மொழி பேசும் நண்பர்களின் கனிவு, பித்தன் உறங்க வில்லை என்ற காரணத்தால் பித்தனோடு எது எதையோ பேசி இரவை கடத்த உதவிய அறை நண்பர்கள்.
மாத்திரைகளை சரியாக எடுத்து கொள்கிறேனா? என்பது பற்றிய கண்டிப்புடன் கூடிய கவனிப்பு . நோய்மை மறக்க செய்யும் அவர்களின் களிப்பு கதையாடல்கள்.
இதைபற்றி சிந்திக்க துவங்கும் பொழுதில், நோய்மை என்பது என்ன? அப்போது அவன் மனதில் ஓடும் எண்ணங்கள் என்ன? நாம் நோய்மை யுற்றவரை எப்படி பார்க்கிறோம்? என்பது மனம் பேசிய சில பிதற்றல்களே... இந்த பதிவு.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-14 தூங்காத ஓர் இரவு
ரொம்ப ரொம்ப உண்மைதான் நண்பரே. நான் சென்னையிலும் சரி வீட்டிலும் சரி உறங்காத நாட்கள் பல உண்டு.
ஒரு முறை சென்னையில் நான் நோயுற்றபோது, என் அருகில் என் பெற்றோர்கள் இல்லை. என் நண்பர்கள் ஐந்து பேர் விடிய விடிய தூங்காமல் என்னை என் பெற்றோர்களுக்கும் மேலாக கவனித்து மறுநாள் காலைதான் என் பெற்றோகளுக்கு தகவல் தெரிவித்தார்கள். இப்போது அந்த சம்பவத்தை நினைத்து பார்க்கிறேன்....
உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள் நண்பரே. விரைவில் உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிராப்தித்துக்கொள்கிறேன்.
ஒரு முறை சென்னையில் நான் நோயுற்றபோது, என் அருகில் என் பெற்றோர்கள் இல்லை. என் நண்பர்கள் ஐந்து பேர் விடிய விடிய தூங்காமல் என்னை என் பெற்றோர்களுக்கும் மேலாக கவனித்து மறுநாள் காலைதான் என் பெற்றோகளுக்கு தகவல் தெரிவித்தார்கள். இப்போது அந்த சம்பவத்தை நினைத்து பார்க்கிறேன்....
உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள் நண்பரே. விரைவில் உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிராப்தித்துக்கொள்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-14 தூங்காத ஓர் இரவு
தங்களின் உடல்நலம் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல கச்சி ஏகம்பனை பிரார்த்தனை செய்கிறேன்.
என்றும் உங்கள் நலனில்
முழுமுதலோன்
என்றும் உங்கள் நலனில்
முழுமுதலோன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-15. ச்சீ சொல்லப்பா....
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-16.நீ ஏன் தமிழனாய் பிறந்தாய் பாரதி…..
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-18-அறம் என்பதன் பொருள் என்ன?
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-16.நீ ஏன் தமிழனாய் பிறந்தாய் பாரதி…..
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-18-அறம் என்பதன் பொருள் என்ன?
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|