Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-15. ச்சீ சொல்லப்பா....
Page 1 of 1 • Share
மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-15. ச்சீ சொல்லப்பா....
ஐக்கிய நாடுகள் சபையினால் (United Nations) நவம்பர் 19ம் தேதி ‘உலக கழிப்பறை தினம்’ என்று அனுசரிக்கப்படுகிறது.
இது எல்லாம் ஒரு விஷயமா என அதிகம் விவாதிகாத கழிப்பறை போன்ற விடயங்களே. நாம் இதையெல்லாம் கட்டாயம் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஏதேனும் பேருந்து நிலையத்தில், ரயில் நிலையத்தில் அவசரத்திற்கு சென்று விட்டு அரை மணி நேரம் ”இந்த இந்தியா எப்ப தாம், திருந்துமோ? அரசாங்கத்திற்கு பொறுப்புணர்வே இல்லை. இந்தியா வல்லரசு இப்படி இருந்தா எப்படி ஆகும்?” இது போன்ற தொடர் வசைகளை(சில கெட்ட வார்த்தை களோடு) மட்டும் சொல்லிவிட்டு அவர் அவர் சென்று விடுகிறோம்.
நண்பர்களே, பித்தன் திடுக்கிட்டு போன செய்தி, 59% இந்தியக் குடும்பங்களில் கைப்பேசி உண்டு. ஆனால், 47% குடும்பங்களில்தான் கழிப்பறைகள் உள்ளன. இந்தியாவில் எதையெல்லாமோ இலவசமாக தருகிறார்கள்.சுகாதாரம் மட்டும் இங்கு விலை அதிகம். 5 ரூபாய் கொடுத்து சிறுநீர் கழிக்க நேரும் போது கூட அங்கு மிக கொடுமையான இன்னல்தான்.
பித்தனின் நல்ல நண்பன் அவருக்கு இரண்டு கால்களும் ஒரு குழந்தையின் கால்களை போல இருக்கும். அவரால் தரையில் தவழ்ந்து மட்டுமே செல்ல இயலும் மாற்று திறனாளி அவர். முதுநிலை பொறியியல் வரை படித்து விட்டார். மனதளவில் மிக தன்னம்பிக்கை அதிகம் உடையவர், அவரோடு கதைக்கும் பொழுதில் மனதில் ஒரு உத்வேகம் வரும் அந்த அளவு சிறந்த மனிதர். ஓர் நாள் அவர் வந்தவுடன் அவரோடு பேசிக்கொண்டு இருக்கும் போது அவரது கைகளை பார்த்தேன். அந்த கைகள் தரையில் தேய்த்து தேய்த்து காய்த்து போய், கன்னி போய் இருந்தது. மனம் வருந்தி அவரிடம் இது எத்தனை வலி நிரம்பியதோ? என சொல்ல....
இல்லை நண்பா, இது வலி அல்ல, என் தேசத்தின் நிலை. என சொல்லி விட்டு சில நொடி கழித்து சிறு கண்ணீர் துளி அவர் கண்களில் இருந்து வர எத்தனிக்கும் போது, தனது சட்டையில் முகம் புதைத்து விட்டு, பின் பார்த்து சொன்னார்.
சிறு பிள்ளை பருவத்தில் இருந்து அனுபவித்து வருகிறேன். பள்ளி நாட்களில் ஊர்ந்து செல்கையில் பேருந்து வருமே என்பதற்காக சாலை ஓரம் ஒதுங்கும் போது, பல முறை மலம் கையில் பட்டு விடுகிறது. சாலை ஓரத்தில் பலரும் கழித்த சிறுநீர் நாற்றம் கொண்ட மணலில் தான் என் கைகள் தேய்கிறது.
பலமுறை அணைக்காமல் கீழே வீசப்பட்ட சிகரெட் துண்டத்தால் சூடு பட்டு இருக்கிறேன், மகிழ்ச்சி களிப்பில் போதையில் பலரும் உடைத்து போட்ட சாராய பாட்டிலில் கை காயம் பட்டு இருக்கிறது எனது கைகள். என சொல்லி விட்டு, நண்பா, கடந்த வாரம் ஒரு முறை வெளியூர் செல்லும் போது ஒரு கழிவறையில் 5 ரூபாய் கொடுத்து உள்ளே சென்றால் அங்கு கழிவறையில் எல்லா பகுதியிலும் மலத்திவலைகள். அங்கும் என் கைகள் பட்டுத்தான் விட்டது. எங்களுக்கு என்று சிறப்பு கழிவறை உள்ளது.ஆனால் அது எல்லா இடங்களிலும் இல்லை தான். இன்னும் சொல்லப்போனால் 90% சதவிகித கழிவறைகளில் தண்ணீரே இல்லை என்பது தான் மிக மிக கொடுமை.
என சொல்லிவிட்டு சட்டென சொன்னார் ”நான் இந்தியாவில் இருக்கிறேன். இதை தாங்கி கொள்ளத்தான் வேண்டும்.”
நண்பர்களே, திறந்த வெளி மலம் கழித்தல், போதிய கழிவறை இல்லாதது, சுகாதரம் இல்லாதது எத்தனை வலி கொண்டது. இப்போது அந்த நண்பனின் கையின் காயம் பித்தனின் மனதொடு ஒட்டிக்கொண்டது. உங்களுக்கு...................
இது எல்லாம் ஒரு விஷயமா என அதிகம் விவாதிகாத கழிப்பறை போன்ற விடயங்களே. நாம் இதையெல்லாம் கட்டாயம் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஏதேனும் பேருந்து நிலையத்தில், ரயில் நிலையத்தில் அவசரத்திற்கு சென்று விட்டு அரை மணி நேரம் ”இந்த இந்தியா எப்ப தாம், திருந்துமோ? அரசாங்கத்திற்கு பொறுப்புணர்வே இல்லை. இந்தியா வல்லரசு இப்படி இருந்தா எப்படி ஆகும்?” இது போன்ற தொடர் வசைகளை(சில கெட்ட வார்த்தை களோடு) மட்டும் சொல்லிவிட்டு அவர் அவர் சென்று விடுகிறோம்.
நண்பர்களே, பித்தன் திடுக்கிட்டு போன செய்தி, 59% இந்தியக் குடும்பங்களில் கைப்பேசி உண்டு. ஆனால், 47% குடும்பங்களில்தான் கழிப்பறைகள் உள்ளன. இந்தியாவில் எதையெல்லாமோ இலவசமாக தருகிறார்கள்.சுகாதாரம் மட்டும் இங்கு விலை அதிகம். 5 ரூபாய் கொடுத்து சிறுநீர் கழிக்க நேரும் போது கூட அங்கு மிக கொடுமையான இன்னல்தான்.
பித்தனின் நல்ல நண்பன் அவருக்கு இரண்டு கால்களும் ஒரு குழந்தையின் கால்களை போல இருக்கும். அவரால் தரையில் தவழ்ந்து மட்டுமே செல்ல இயலும் மாற்று திறனாளி அவர். முதுநிலை பொறியியல் வரை படித்து விட்டார். மனதளவில் மிக தன்னம்பிக்கை அதிகம் உடையவர், அவரோடு கதைக்கும் பொழுதில் மனதில் ஒரு உத்வேகம் வரும் அந்த அளவு சிறந்த மனிதர். ஓர் நாள் அவர் வந்தவுடன் அவரோடு பேசிக்கொண்டு இருக்கும் போது அவரது கைகளை பார்த்தேன். அந்த கைகள் தரையில் தேய்த்து தேய்த்து காய்த்து போய், கன்னி போய் இருந்தது. மனம் வருந்தி அவரிடம் இது எத்தனை வலி நிரம்பியதோ? என சொல்ல....
இல்லை நண்பா, இது வலி அல்ல, என் தேசத்தின் நிலை. என சொல்லி விட்டு சில நொடி கழித்து சிறு கண்ணீர் துளி அவர் கண்களில் இருந்து வர எத்தனிக்கும் போது, தனது சட்டையில் முகம் புதைத்து விட்டு, பின் பார்த்து சொன்னார்.
சிறு பிள்ளை பருவத்தில் இருந்து அனுபவித்து வருகிறேன். பள்ளி நாட்களில் ஊர்ந்து செல்கையில் பேருந்து வருமே என்பதற்காக சாலை ஓரம் ஒதுங்கும் போது, பல முறை மலம் கையில் பட்டு விடுகிறது. சாலை ஓரத்தில் பலரும் கழித்த சிறுநீர் நாற்றம் கொண்ட மணலில் தான் என் கைகள் தேய்கிறது.
பலமுறை அணைக்காமல் கீழே வீசப்பட்ட சிகரெட் துண்டத்தால் சூடு பட்டு இருக்கிறேன், மகிழ்ச்சி களிப்பில் போதையில் பலரும் உடைத்து போட்ட சாராய பாட்டிலில் கை காயம் பட்டு இருக்கிறது எனது கைகள். என சொல்லி விட்டு, நண்பா, கடந்த வாரம் ஒரு முறை வெளியூர் செல்லும் போது ஒரு கழிவறையில் 5 ரூபாய் கொடுத்து உள்ளே சென்றால் அங்கு கழிவறையில் எல்லா பகுதியிலும் மலத்திவலைகள். அங்கும் என் கைகள் பட்டுத்தான் விட்டது. எங்களுக்கு என்று சிறப்பு கழிவறை உள்ளது.ஆனால் அது எல்லா இடங்களிலும் இல்லை தான். இன்னும் சொல்லப்போனால் 90% சதவிகித கழிவறைகளில் தண்ணீரே இல்லை என்பது தான் மிக மிக கொடுமை.
என சொல்லிவிட்டு சட்டென சொன்னார் ”நான் இந்தியாவில் இருக்கிறேன். இதை தாங்கி கொள்ளத்தான் வேண்டும்.”
நண்பர்களே, திறந்த வெளி மலம் கழித்தல், போதிய கழிவறை இல்லாதது, சுகாதரம் இல்லாதது எத்தனை வலி கொண்டது. இப்போது அந்த நண்பனின் கையின் காயம் பித்தனின் மனதொடு ஒட்டிக்கொண்டது. உங்களுக்கு...................
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-15. ச்சீ சொல்லப்பா....
இந்த தேசத்தில் சில நுறுக்கு தனது ஓட்டை விற்கும் கனவான்களுக்கு, தனக்கு தேவையான பொது சுகாதாரத்தை கேட்க தெரியுமா? இது போன்று பலரும் இன்னல் படும் நிலை அவர்கள் மனம் அறியுமா?
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-15. ச்சீ சொல்லப்பா....
பதிவை படிக்கும் போது ரத்த கண்ணீரே வந்து விடும் அளவுக்கு வேதனை அடைகிறான் ஸ்ரீராம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பொதுவில் சிறுநீர்கழிக்கும் பழக்கம் மாறபோவதில்லை, இவர்கள் திருந்தவும் போவதில்லை.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-15. ச்சீ சொல்லப்பா....
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ப்ளாக்கில் நான் எழுதியதை இங்கே பகிர்ந்துள்ளேன்:
நம் நாட்டில் கிட்ட தட்ட அனைத்து மக்களும் எதோ ஒரு வகையில் இந்த சமுதாய சீர் கேட்டில் பங்கு வகிக்கிறோம். நம் வீட்டை சுத்தமாக வைத்திருக்க எந்த அளவிற்கு நாம் விரும்புகிறோமோ அந்த அக்கறையை நாட்டை சுத்தமாக வைத்திருக்க நினைப்பதில்லை, இன்றைக்கு பொது இடங்களில் நாகரிகமாக நடந்து கொள்கிறோமா என்றால் அதுவும் இல்லை, பொது இடங்களில் பேப்பர் மற்றும் பற்பல வஸ்துக்களை போட்டு நாட்டையே குப்பை தொட்டியாக்கிவிடுகிறோம். இது போன்ற சமுதாய சீர்கேடு இன்று பூங்காக்கள் முதல் கடற்கரை வரை எல்லா பொது இடங்களில் நடக்கிறது. சமிபத்தில் நான் என் அலுவலக நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு காற்று வாங்கலாமென சென்றோம், தற்போது மெரினா கடற்கரையில் சாலை ஓரம் கடற்கரை நெடுக ஆங்கங்கே தரமான டைல்ஸ் முறையில்இருக்கைகளை கட்டி இருக்கிறார்கள். ஆனால் அங்கேயும் சமுக விரோதிகள் ஆங்கங்கே அழகுக்காக வைக்கப்பட்டுள்ள உருளையான பொருட்களையும் மேலும் சில இருக்கைகளையும் சேதம் செய்துள்ளார்கள், ஒரு சில இடங்களில் போதை வாஸ்துக்களை போட்டு உமிழ்ந்தும் வைத்துள்ளார்கள். இப்படியே நாம் போய்கிட்டு இருந்தால் வளர்ந்த நாடுகளை பார்த்து பொறாமை பட வேண்டியது தான். இன்றைய தினங்களில் வளர்ந்த நாடுகளை விட பல மடங்கு நாம் மென்பொருள் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளோம். இருப்பினும் சமுதாய சீர்திருத்தத்தில் பின்தங்கியே இருக்கிறோம்.
ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனிலும் தங்கியுள்ளது. இதைத்தான் அமெரிக்காவின் அதிபராக இருந்த திரு. ஜோன் எஃப் கென்னடி “நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே நீ நாட்டுக்கு என்ன செய்தாய்” என்று கூறினார்.
நம் சமுதாயத்தை முற்றிலும் தூய்மையான சமுதாயமாக மாற்றுவோம், வளர்ந்த நாடுகளுக்கு சவாலாக இருப்போம்.
நம் நாட்டில் கிட்ட தட்ட அனைத்து மக்களும் எதோ ஒரு வகையில் இந்த சமுதாய சீர் கேட்டில் பங்கு வகிக்கிறோம். நம் வீட்டை சுத்தமாக வைத்திருக்க எந்த அளவிற்கு நாம் விரும்புகிறோமோ அந்த அக்கறையை நாட்டை சுத்தமாக வைத்திருக்க நினைப்பதில்லை, இன்றைக்கு பொது இடங்களில் நாகரிகமாக நடந்து கொள்கிறோமா என்றால் அதுவும் இல்லை, பொது இடங்களில் பேப்பர் மற்றும் பற்பல வஸ்துக்களை போட்டு நாட்டையே குப்பை தொட்டியாக்கிவிடுகிறோம். இது போன்ற சமுதாய சீர்கேடு இன்று பூங்காக்கள் முதல் கடற்கரை வரை எல்லா பொது இடங்களில் நடக்கிறது. சமிபத்தில் நான் என் அலுவலக நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு காற்று வாங்கலாமென சென்றோம், தற்போது மெரினா கடற்கரையில் சாலை ஓரம் கடற்கரை நெடுக ஆங்கங்கே தரமான டைல்ஸ் முறையில்இருக்கைகளை கட்டி இருக்கிறார்கள். ஆனால் அங்கேயும் சமுக விரோதிகள் ஆங்கங்கே அழகுக்காக வைக்கப்பட்டுள்ள உருளையான பொருட்களையும் மேலும் சில இருக்கைகளையும் சேதம் செய்துள்ளார்கள், ஒரு சில இடங்களில் போதை வாஸ்துக்களை போட்டு உமிழ்ந்தும் வைத்துள்ளார்கள். இப்படியே நாம் போய்கிட்டு இருந்தால் வளர்ந்த நாடுகளை பார்த்து பொறாமை பட வேண்டியது தான். இன்றைய தினங்களில் வளர்ந்த நாடுகளை விட பல மடங்கு நாம் மென்பொருள் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளோம். இருப்பினும் சமுதாய சீர்திருத்தத்தில் பின்தங்கியே இருக்கிறோம்.
ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனிலும் தங்கியுள்ளது. இதைத்தான் அமெரிக்காவின் அதிபராக இருந்த திரு. ஜோன் எஃப் கென்னடி “நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே நீ நாட்டுக்கு என்ன செய்தாய்” என்று கூறினார்.
நம் சமுதாயத்தை முற்றிலும் தூய்மையான சமுதாயமாக மாற்றுவோம், வளர்ந்த நாடுகளுக்கு சவாலாக இருப்போம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-15. ச்சீ சொல்லப்பா....
படிக்கும்போது மனது கூசுகிறது. இந்த நிலை நிச்சயம் மாறவேண்டும்!
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-15. ச்சீ சொல்லப்பா....
நீங்கள் உணர்ந்ததைதான் நானும் உணர்ந்தேன்.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-15. ச்சீ சொல்லப்பா....
ம் சமுதாயத்தை முற்றிலும் தூய்மையான சமுதாயமாக மாற்றுவோம், வளர்ந்த நாடுகளுக்கு சவாலாக இருப்போம்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-14 தூங்காத ஓர் இரவு
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-16.நீ ஏன் தமிழனாய் பிறந்தாய் பாரதி…..
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-18-அறம் என்பதன் பொருள் என்ன?
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-16.நீ ஏன் தமிழனாய் பிறந்தாய் பாரதி…..
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-18-அறம் என்பதன் பொருள் என்ன?
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|