Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-18-அறம் என்பதன் பொருள் என்ன?
Page 1 of 1 • Share
மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-18-அறம் என்பதன் பொருள் என்ன?
காலத்தின் வீரியமிக்க நாவுகள் விழுங்கிப் போனவற்றில் ஒன்று “அறம்”, என சொன்னால் உங்களால் உணர முடியுமா? என் அன்பின் உறவுகளே…
யாரையும் குறை சொல்ல நினைப்பது இல்லை பித்தனின் நோக்கம். ஆனாலும் ஒரு நாள் மானுட சமூகம் இதை உணராதா என்ற ஏக்கம் தான்.
திரை படம் முடிந்து வாகனங்கள் போருக்கு வெளி வரும் தடவாள வாகனத்தை போல மிகவும் அதிக உருமல்களுடன் வெளி வந்து கொண்டு இருந்தது திரை அரங்கு விட்டு.
உள்ளே செல்வதும் அப்படியாகவே இருந்தது திரை அரங்கிற்குள். அப்போது ஒரு கருப்பு வண்ண நீளமான கார், அந்த வண்ணமும் அதன் நீளமும் மனதின் மதிப்பீட்டில் அது விலை உயர்ந்தது என்பதை அதன் பெயர் கூட தெரியாத போதும் அது உணர்த்தவே செய்தது.
வெளி வந்த பொழுது காரை திரை அரங்கில் உள் வைக்க எடுத்த முயற்சியில் அது பின் பக்கமாக வரும் போது ஒரு இடைத்தட்டு வாழ்வில் உழலும் ஒருத்தனின், இரு சக்கர வாகனத்தில் பின் பக்கம் சட்டென மோதியது. இதில் சங்கடம் அவன் தன் மகளை அந்த இரு சக்கர வாகனத்தில் உட்கார வைத்து முன்னோக்கி வண்டியை தள்ளி கொண்டு சென்றான். (வண்டி ஓட்டினால் கூட்ட நெரிசலில் யார் மீதும் மோதி விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான்)
மோதியதும் அவன் நிலை தடுமாறினான், வண்டியை விட குழந்தை பெரிதாக தெரிந்ததால் குழந்தையை சட்டென பிடித்து கொண்டான். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. வண்டியில் பின் விளக்கு நொருங்கியது தவிர.
யாரும் கவனிக்க தயாராக இல்லை, அடிபட்டதா என விசாரிக்க கூட மனமில்லாத கூட்டம் அங்கே. உடனே தன் குழந்தையை யாரிடமோ கொடுத்து விட்டு வேகமாக காரை தொடர்ந்தான் அவன். கார் மிக தெளிவாக ஒதுக்க பட்ட இடத்தில் நிறுத்த பட்டது சில நிமிடங்களுக்கு பிறகே.
தனியாளாக காரின் அருகே சென்று கதவை தட்டிய போது மிக தெளிவான முகத்தோடு, வண்டியில் மோதிவிட்டோம் என்ற சிறு உணர்வு கூட இல்லாமல் மெதுவாக சாளரம் இறக்கி வெளிவந்த ஒருவர் சிறு புன்னகையோடு சொன்னார் “didn’t expect”.
உறவுகளே அவர் குறைந்த பட்ச மன்னிப்பு கூட கேட்க தயாராக இல்லை. அந்த இடைத்தட்டு மனிதன் மிக தெளிவாக, சத்தமாக கேட்டான். ”உங்களுக்கு ஒரு நொடி இறங்கி கூட பார்க்க இயலவில்லையா?” அவ்வளவு மனம் மரத்து விட்டதா இங்கு அனைவருக்கும்” என காரில் இறங்கிய ஒவ்வொருவரையும் கேட்டான்.
தான் காரை நிறுத்திய பிறகு பார்க்கலாம் என நினைத்தேன், என சொல்லி விட்டு ரிவர்ஸ் கியர் கேமராவில் பார்த்தேன் யாருக்கும் அடி படல தானே என சொன்னான்.
அவன் உடைந்த மனதுடன் உங்கள் மகளுடன் செல்கையில் இதை ஏற்பீர்களா? என்ற உடன் உள் இருந்த ஒரு பெண் சொன்னாள் “sorry”.
பின்னர் அந்த காரில் இருந்தவரும் ஒரு சடங்கை போல சொன்னார்.
உடன் தடுத்த அவன், இவ்வளவுதான் உங்களின் “humanity” யா? அடிபட்ட உடன் கேட்க தோன்றாத மனதின், sorry கூட அசிங்கமானது என சொல்லி அந்த இடம் விட்டு நகர்ந்தவனின் இருப்பு மனம் முழுக்க நெருடலையே உண்டாக்கியது.
மானுட அறம் என்பதன் பொருள் மறந்த சமூகத்தை என்ன சொல்வது உறவுகளே…
அவன் சண்டையிட்டு இருந்தால் கூட மறக்கப்பட்டு இருப்பான். அவன் போன பிறகும் அவன் தேடிய அறவுணர்வின் அப்பழுக்கற்ற அலறல் பித்தனுக்கு கேட்கிறது… உங்களுக்கு?...
அறம் என்பதன் பொருள் என்ன?
யாரையும் குறை சொல்ல நினைப்பது இல்லை பித்தனின் நோக்கம். ஆனாலும் ஒரு நாள் மானுட சமூகம் இதை உணராதா என்ற ஏக்கம் தான்.
திரை படம் முடிந்து வாகனங்கள் போருக்கு வெளி வரும் தடவாள வாகனத்தை போல மிகவும் அதிக உருமல்களுடன் வெளி வந்து கொண்டு இருந்தது திரை அரங்கு விட்டு.
உள்ளே செல்வதும் அப்படியாகவே இருந்தது திரை அரங்கிற்குள். அப்போது ஒரு கருப்பு வண்ண நீளமான கார், அந்த வண்ணமும் அதன் நீளமும் மனதின் மதிப்பீட்டில் அது விலை உயர்ந்தது என்பதை அதன் பெயர் கூட தெரியாத போதும் அது உணர்த்தவே செய்தது.
வெளி வந்த பொழுது காரை திரை அரங்கில் உள் வைக்க எடுத்த முயற்சியில் அது பின் பக்கமாக வரும் போது ஒரு இடைத்தட்டு வாழ்வில் உழலும் ஒருத்தனின், இரு சக்கர வாகனத்தில் பின் பக்கம் சட்டென மோதியது. இதில் சங்கடம் அவன் தன் மகளை அந்த இரு சக்கர வாகனத்தில் உட்கார வைத்து முன்னோக்கி வண்டியை தள்ளி கொண்டு சென்றான். (வண்டி ஓட்டினால் கூட்ட நெரிசலில் யார் மீதும் மோதி விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான்)
மோதியதும் அவன் நிலை தடுமாறினான், வண்டியை விட குழந்தை பெரிதாக தெரிந்ததால் குழந்தையை சட்டென பிடித்து கொண்டான். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. வண்டியில் பின் விளக்கு நொருங்கியது தவிர.
யாரும் கவனிக்க தயாராக இல்லை, அடிபட்டதா என விசாரிக்க கூட மனமில்லாத கூட்டம் அங்கே. உடனே தன் குழந்தையை யாரிடமோ கொடுத்து விட்டு வேகமாக காரை தொடர்ந்தான் அவன். கார் மிக தெளிவாக ஒதுக்க பட்ட இடத்தில் நிறுத்த பட்டது சில நிமிடங்களுக்கு பிறகே.
தனியாளாக காரின் அருகே சென்று கதவை தட்டிய போது மிக தெளிவான முகத்தோடு, வண்டியில் மோதிவிட்டோம் என்ற சிறு உணர்வு கூட இல்லாமல் மெதுவாக சாளரம் இறக்கி வெளிவந்த ஒருவர் சிறு புன்னகையோடு சொன்னார் “didn’t expect”.
உறவுகளே அவர் குறைந்த பட்ச மன்னிப்பு கூட கேட்க தயாராக இல்லை. அந்த இடைத்தட்டு மனிதன் மிக தெளிவாக, சத்தமாக கேட்டான். ”உங்களுக்கு ஒரு நொடி இறங்கி கூட பார்க்க இயலவில்லையா?” அவ்வளவு மனம் மரத்து விட்டதா இங்கு அனைவருக்கும்” என காரில் இறங்கிய ஒவ்வொருவரையும் கேட்டான்.
தான் காரை நிறுத்திய பிறகு பார்க்கலாம் என நினைத்தேன், என சொல்லி விட்டு ரிவர்ஸ் கியர் கேமராவில் பார்த்தேன் யாருக்கும் அடி படல தானே என சொன்னான்.
அவன் உடைந்த மனதுடன் உங்கள் மகளுடன் செல்கையில் இதை ஏற்பீர்களா? என்ற உடன் உள் இருந்த ஒரு பெண் சொன்னாள் “sorry”.
பின்னர் அந்த காரில் இருந்தவரும் ஒரு சடங்கை போல சொன்னார்.
உடன் தடுத்த அவன், இவ்வளவுதான் உங்களின் “humanity” யா? அடிபட்ட உடன் கேட்க தோன்றாத மனதின், sorry கூட அசிங்கமானது என சொல்லி அந்த இடம் விட்டு நகர்ந்தவனின் இருப்பு மனம் முழுக்க நெருடலையே உண்டாக்கியது.
மானுட அறம் என்பதன் பொருள் மறந்த சமூகத்தை என்ன சொல்வது உறவுகளே…
அவன் சண்டையிட்டு இருந்தால் கூட மறக்கப்பட்டு இருப்பான். அவன் போன பிறகும் அவன் தேடிய அறவுணர்வின் அப்பழுக்கற்ற அலறல் பித்தனுக்கு கேட்கிறது… உங்களுக்கு?...
அறம் என்பதன் பொருள் என்ன?
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-15. ச்சீ சொல்லப்பா....
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-14 தூங்காத ஓர் இரவு
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-16.நீ ஏன் தமிழனாய் பிறந்தாய் பாரதி…..
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-14 தூங்காத ஓர் இரவு
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-16.நீ ஏன் தமிழனாய் பிறந்தாய் பாரதி…..
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum