Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
Page 1 of 1 • Share
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
ஒரு ஊரில் பயந்த சுபாவமுடைய உழவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு வாய்த்திருந்த மனைவியோ அடங்காப்பிடாரியாக இருந்தாள்.தன் கணவனின் இயல்பு அறிந்த அவள், தினமும் விளக்குமாற்றால் இரண்டு அடி அடித்தபிறகுதான் அவனுக்கு சாப்பாடே போடுவாள்.
நாள்தோறும் விளக்குமாற்றுப் பூசை வாங்கிய உழவனுக்கு வாழ்க்கையே சலித்துப்போனது.மனைவியிடம் இருந்து தப்பித்து, பத்து நாட்களுக்காவது நிம்மதியாக இருக்கவேண்டும் என்று நினைத்த அவன், தான் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியுள்ளதென்றும், பத்து நாட்களில் வந்துவிடுவதாகவும் கூறினான்.
நாள்தோறும் விளக்குமாற்றுப் பூசை வாங்கிய உழவனுக்கு வாழ்க்கையே சலித்துப்போனது.மனைவியிடம் இருந்து தப்பித்து, பத்து நாட்களுக்காவது நிம்மதியாக இருக்கவேண்டும் என்று நினைத்த அவன், தான் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியுள்ளதென்றும், பத்து நாட்களில் வந்துவிடுவதாகவும் கூறினான்.
அதற்கு அவள், " உன்னை விளக்குமாற்றால் தினம் ஒருமுறையாவது அடிக்காவிட்டால் எனக்கு உறக்கம் வராதே. நான் என்ன செய்வேன் " என்றாள். அவனோ, " தோட்டத்தில் வேப்ப மரம் ஒன்று இருக்கிறது. அதை நானாக நினைத்து வேண்டுமட்டும் அடித்துக்கொள்" என்று கூறிவிட்டு வெலியூர் புறப்பட்டுப் போனான்.
அவளும் தன் கணவன் கூறியது போலவே, வேப்ப மரத்தை விளக்குமாற்ரால் ஓங்கி ,ஓங்கி அடித்தாள்.அந்த மரத்தில் நீண்ட நாட்களாக ஒரு பேய் தங்கியிருந்தது. அவளது அடியைத் தாங்கமாட்டாமல், வேப்ப மரத்தை விட்டு ஓடிவிடத் தீர்மானித்தது.
அவளும் தன் கணவன் கூறியது போலவே, வேப்ப மரத்தை விளக்குமாற்ரால் ஓங்கி ,ஓங்கி அடித்தாள்.அந்த மரத்தில் நீண்ட நாட்களாக ஒரு பேய் தங்கியிருந்தது. அவளது அடியைத் தாங்கமாட்டாமல், வேப்ப மரத்தை விட்டு ஓடிவிடத் தீர்மானித்தது.
உழவன் திரும்பிவந்ததும், " நீ எப்படித்தான் உனது மனைவியின் விளக்குமாற்று அடியை தினமும் தாங்கிக் கொள்கிறாயோ தெரியவில்லை. என்னால் தாங்க இயலவில்லை. அதனால் நான் இங்கிருந்து ஓடப்போகிறேன். ஆனால் போகும் முன்பாக உனக்கு ஒரு உதவி செய்யலாம் என்று நினைக்கிறேன்.நான் இங்கிருந்து போய், இந்த நாட்டு அரசனின் மகளைப் பிடித்துக்கொள்ளப் போகிறேன். நீ வந்தால்தான் அவளை விட்டுப் போவேன். உனக்கும் ஏராளமான பொன் மற்றும்பரிசுகள் கிடைக்கும். அதன் பிறகு உனது மனைவி உன்னை அடிக்கமாட்டாள்.," என்று கூறிவிட்டுப் போனது.
சொன்னபடியே, அந்தப் பேய், அந்நாட்டு அரசனின் மகளைப் பிடித்துக்கொண்டது. பெரிய பெரிய மந்திரவாதிகள் எல்லாம் வந்து எவ்வளவோ முயற்சி செய்தும் பேய் அவளை விட்டு விலகவில்லை.. தனது மகளைப் பிடித்த பேயை யார் விரட்டினாலும் அவர்களுக்கு ஏராளமான பொண்ணும் பொருளும் பரிசளிக்கப்படும் என்று அரசன் அறிவித்தான்.
சொன்னபடியே, அந்தப் பேய், அந்நாட்டு அரசனின் மகளைப் பிடித்துக்கொண்டது. பெரிய பெரிய மந்திரவாதிகள் எல்லாம் வந்து எவ்வளவோ முயற்சி செய்தும் பேய் அவளை விட்டு விலகவில்லை.. தனது மகளைப் பிடித்த பேயை யார் விரட்டினாலும் அவர்களுக்கு ஏராளமான பொண்ணும் பொருளும் பரிசளிக்கப்படும் என்று அரசன் அறிவித்தான்.
உழவன் அங்கே சென்றான்.அவனைக் கண்டதும் பேய், " அய்யோ நான் போய்விடுகிறேன்" என்று சொல்லியது. அதே சமயம் அவனது காதில், "நான் உனக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டேன். இனி நீ என் வழிக்கு வந்தால் உன்னைக் கொன்றுவிடுவேன்" என்றும் கூறியது.
பேயிடம் இருந்து மகளைக் காப்பாற்றிய உழவனுக்கு அரசன் பெரும் பொருளும் பொண்ணும் கொடுத்தான்.ஆனால் அந்தப் பேய் பக்கத்து நாட்டு அரசன் மகளைப் பிடித்துக்கொண்டது. அங்கும் இதே நிலைதான். எவ்வளவோ முயற்சித்தும் அவளை விட்டுப் போகவில்லை. பக்கத்து நாட்டு இளவரசியைப் பிடித்திருந்த பேயை ஒரு உழவன் விரட்டிய விஷயத்தை அறிந்த மன்னன், உழவனை வரவழைத்தான்.
தனது மகளைப் பிடித்துள்ள பேயை விரட்டக் கேட்டுக்கொண்டன். ஆனால் உழவன் முடியாது என்று மறுத்தான். அரசனோ, "நீ பேயை விரட்டாவிட்டால், உன்னைக் கொன்றுவிடுவேன்" என்று கோபமுடன் கூறினான். வேறு வழியின்றி, உழவன் இளவரசியிடம் சென்றான். அவனைப் பார்த்த பேய், " உழவனே, உனக்கு என்ன திமிர்?.மீண்டும் என் வழிக்கு வராதே என்று கூறியிருந்தேன். அதை சட்டை செய்யாமல் வந்துவிட்டாய். அதனால் உன்னைக் கொல்லப் போகிறேன் " என்றது.
உழவன் அந்தப் பேயிடம் ரகசியமாக ஏதோ கூறினான்.
உடனே பேய், போகிறேன், போகிறேன் என்று அலறிக்கொண்டு அந்த நாட்டையே விட்டு ஓடிப்போனது.
உழவன் பேயிடம் என்ன சொல்லியிருப்பான்.???
சரியான விடை சொல்பவர்களுக்கு பேயுடன் ஒரு நாள் வசிக்க வழி வகை செய்து தரப்படும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
என் மனைவி கிட்ட சொல்லிடுவேனு சொல்லி இருப்பான்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்கலாமே
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
கலக்கல் புதிர் அண்ணா
யோசித்துக்கொண்டே இருக்கிறேன் அண்ணா. நானும் அக்கா நினைத்தையே நினைத்தேன். "மனைவியிடம் சொல்லி விளக்குமாற்றால் அடிக்க சொல்லவா?"
இப்ப மாத்தி யோசிக்கிறேன்..........
யோசித்துக்கொண்டே இருக்கிறேன் அண்ணா. நானும் அக்கா நினைத்தையே நினைத்தேன். "மனைவியிடம் சொல்லி விளக்குமாற்றால் அடிக்க சொல்லவா?"
இப்ப மாத்தி யோசிக்கிறேன்..........
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
அண்ணா,
இப்படி சொல்லி இருப்பானோ "என் மனைவி பிறந்த ஊரு இது, இங்கே உள்ளவங்க எல்லாரும் என் மனைவியோட அதிகம் திமிர் பிடித்தவர்கள் நீ தாங்க மாட்டே ஓடிவிடு"
மேலும் முகநூலில் பத்துக்கும் மேற்ப்பட்டோர் தங்கள் கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள் அதை பாருங்கள்.
இப்படி சொல்லி இருப்பானோ "என் மனைவி பிறந்த ஊரு இது, இங்கே உள்ளவங்க எல்லாரும் என் மனைவியோட அதிகம் திமிர் பிடித்தவர்கள் நீ தாங்க மாட்டே ஓடிவிடு"
மேலும் முகநூலில் பத்துக்கும் மேற்ப்பட்டோர் தங்கள் கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள் அதை பாருங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
எல்லாரும் ஒரே பதில தான் சொல்லி இருக்காங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
நான் இன்னொரு திருமணம் செய்துள்ளேன் இருவரும் உன்னை பார்க்க விளக்குமாறோடு வருகிறார்கள் என சொல்லி இருப்பான்
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
அண்ணா விடையை எப்ப சொல்வீங்க. விடை தெரிந்துக்கொள்ள ஆவல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
என் மனைவியின் தங்கை தான் இவள் என்று சொல்லி இருப்பானோ
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
இன்று மதியம் 3.00 மணியளவில் புதிருக்கு விடை தெரிவிக்கப்படும்
எல்லோருமே பேயோட வாழ ஆசை படுகிறார்கள் போல தெரிகிறது
எல்லோருமே பேயோட வாழ ஆசை படுகிறார்கள் போல தெரிகிறது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
சென்ற வார புதிர் சற்று யோசிக்க கடினமாக இருந்ததால் இந்த புதிரை சற்று சுலபமாக கொடுத்தோம்
புதிருக்கு சரியான விடை
என் மனைவி விளக்குமாறோடு உன்னை அடிக்க வருகிறாள் என்று சொல்லியிருப்பார்.
வார்த்தைகளில் தான் சற்று மாறுபாடே தவிர விடையின் உள்அர்த்தத்தை அனைவருமே சிறப்பாக சொல்லியுள்ளார்கள்
"தல"க்கு இன்னும் மனைவி மோகம் தீரவில்லையா ... பொதுவாக எண்ணங்கள் தான் வார்த்தைகளாக வெளிவரும் ஆகவே தான் நான் இன்னுமொரு திருமணம் செய்துள்ளேன் என்று சொல்லியுள்ளார் .எனவே தல குடும்பத்தினர் சற்று ஜாக்கிரதையாக இருந்து கண்காணித்து கொள்ளவேண்டும் /......
நம் தளத்திலும் முகநூளிலும் முயற்சி செய்து சரியான விடையை தெரிவித்த அத்துணை நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் அமர்க்களம் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்
நம் தளத்தை பொறுத்தவரை வார்த்தைகள் மாறினாலும் உள் அர்த்தத்தை வெளிக்கொணர்ந்த சகோதரி ரனுஜா அவர்களுக்கும் தம்பி ஸ்ரீராம் அவர்களுக்கும், நான் இன்னொரு திருமணம் செய்துள்ளேன் இருவரும் உன்னை பார்க்க விளக்குமாறோடு வருகிறார்கள் என சொல்லி இருப்பான் என்று தன் மனதில் உள்ள ஆசையை கொட்டி தீர்த்த நம் தல அவர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்களை அகமகிழ்வுடன் தெரிவித்து கொள்வதில் பே{ய்}ராசை அடைகிறோம்
வாழ்த்துக்கள் பெற்றவர்கள் தங்கள் வீட்டு முகவரியை தந்தால் பேயைநீங்கள் விரும்பும் தினத்தன்று உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம் சிறப்பு சலுகைகள் உண்டு . வாய்ப்பை நழுவ விடாதிர்கள்
மீண்டும் அடுத்த புதிரில் புன்னகையோடு சந்திப்போம் .......நன்றி ..
புதிருக்கு சரியான விடை
என் மனைவி விளக்குமாறோடு உன்னை அடிக்க வருகிறாள் என்று சொல்லியிருப்பார்.
வார்த்தைகளில் தான் சற்று மாறுபாடே தவிர விடையின் உள்அர்த்தத்தை அனைவருமே சிறப்பாக சொல்லியுள்ளார்கள்
சகோதரி ரனுஜா wrote:என் மனைவி கிட்ட சொல்லிடுவேனு சொல்லி இருப்பான்
ஸ்ரீராம் wrote:யோசித்துக்கொண்டே இருக்கிறேன் அண்ணா. நானும் அக்கா நினைத்தையே நினைத்தேன். "மனைவியிடம் சொல்லி விளக்குமாற்றால் அடிக்க சொல்லவா?"
:\"தல "முரளி wrote:நான் இன்னொரு திருமணம் செய்துள்ளேன் இருவரும் உன்னை பார்க்க விளக்குமாறோடு வருகிறார்கள் என சொல்லி இருப்பான்
"தல"க்கு இன்னும் மனைவி மோகம் தீரவில்லையா ... பொதுவாக எண்ணங்கள் தான் வார்த்தைகளாக வெளிவரும் ஆகவே தான் நான் இன்னுமொரு திருமணம் செய்துள்ளேன் என்று சொல்லியுள்ளார் .எனவே தல குடும்பத்தினர் சற்று ஜாக்கிரதையாக இருந்து கண்காணித்து கொள்ளவேண்டும் /......
நம் தளத்திலும் முகநூளிலும் முயற்சி செய்து சரியான விடையை தெரிவித்த அத்துணை நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் அமர்க்களம் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்
நம் தளத்தை பொறுத்தவரை வார்த்தைகள் மாறினாலும் உள் அர்த்தத்தை வெளிக்கொணர்ந்த சகோதரி ரனுஜா அவர்களுக்கும் தம்பி ஸ்ரீராம் அவர்களுக்கும், நான் இன்னொரு திருமணம் செய்துள்ளேன் இருவரும் உன்னை பார்க்க விளக்குமாறோடு வருகிறார்கள் என சொல்லி இருப்பான் என்று தன் மனதில் உள்ள ஆசையை கொட்டி தீர்த்த நம் தல அவர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்களை அகமகிழ்வுடன் தெரிவித்து கொள்வதில் பே{ய்}ராசை அடைகிறோம்
வாழ்த்துக்கள் பெற்றவர்கள் தங்கள் வீட்டு முகவரியை தந்தால் பேயைநீங்கள் விரும்பும் தினத்தன்று உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம் சிறப்பு சலுகைகள் உண்டு . வாய்ப்பை நழுவ விடாதிர்கள்
மீண்டும் அடுத்த புதிரில் புன்னகையோடு சந்திப்போம் .......நன்றி ..
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
முழுமுதலோன் wrote:சென்ற வார புதிர் சற்று யோசிக்க கடினமாக இருந்ததால் இந்த புதிரை சற்று சுலபமாக கொடுத்தோம்
புதிருக்கு சரியான விடை
என் மனைவி விளக்குமாறோடு உன்னை அடிக்க வருகிறாள் என்று சொல்லியிருப்பார்.
வார்த்தைகளில் தான் சற்று மாறுபாடே தவிர விடையின் உள்அர்த்தத்தை அனைவருமே சிறப்பாக சொல்லியுள்ளார்கள்சகோதரி ரனுஜா wrote:என் மனைவி கிட்ட சொல்லிடுவேனு சொல்லி இருப்பான்ஸ்ரீராம் wrote:யோசித்துக்கொண்டே இருக்கிறேன் அண்ணா. நானும் அக்கா நினைத்தையே நினைத்தேன். "மனைவியிடம் சொல்லி விளக்குமாற்றால் அடிக்க சொல்லவா?":\"தல "முரளி wrote:நான் இன்னொரு திருமணம் செய்துள்ளேன் இருவரும் உன்னை பார்க்க விளக்குமாறோடு வருகிறார்கள் என சொல்லி இருப்பான்
"தல"க்கு இன்னும் மனைவி மோகம் தீரவில்லையா ... பொதுவாக எண்ணங்கள் தான் வார்த்தைகளாக வெளிவரும் ஆகவே தான் நான் இன்னுமொரு திருமணம் செய்துள்ளேன் என்று சொல்லியுள்ளார் .எனவே தல குடும்பத்தினர் சற்று ஜாக்கிரதையாக இருந்து கண்காணித்து கொள்ளவேண்டும் /......
நம் தளத்திலும் முகநூளிலும் முயற்சி செய்து சரியான விடையை தெரிவித்த அத்துணை நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் அமர்க்களம் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்
நம் தளத்தை பொறுத்தவரை வார்த்தைகள் மாறினாலும் உள் அர்த்தத்தை வெளிக்கொணர்ந்த சகோதரி ரனுஜா அவர்களுக்கும் தம்பி ஸ்ரீராம் அவர்களுக்கும், நான் இன்னொரு திருமணம் செய்துள்ளேன் இருவரும் உன்னை பார்க்க விளக்குமாறோடு வருகிறார்கள் என சொல்லி இருப்பான் என்று தன் மனதில் உள்ள ஆசையை கொட்டி தீர்த்த நம் தல அவர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்களை அகமகிழ்வுடன் தெரிவித்து கொள்வதில் பே{ய்}ராசை அடைகிறோம்
வாழ்த்துக்கள் பெற்றவர்கள் தங்கள் வீட்டு முகவரியை தந்தால் பேயைநீங்கள் விரும்பும் தினத்தன்று உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம் சிறப்பு சலுகைகள் உண்டு . வாய்ப்பை நழுவ விடாதிர்கள்
மீண்டும் அடுத்த புதிரில் புன்னகையோடு சந்திப்போம் .......நன்றி ..
பதிலுக்கு நன்றி அண்ணா
ஹா ஹா அருமையான விளக்கம்.
நாங்களே பேய் தான் எங்களுக்கு இன்னோரு பேய் வேணாம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
ரானுஜா wrote:நாங்களே பேய் தான் எங்களுக்கு இன்னோரு பேய் வேணாம்
இதை இதை இதைத்தான் உங்க கிட்ட இருந்து எதிர்பார்த்தோம் உங்க வாயாலே பேய் ன்னு சொல்லுவிங்கன்னு
சந்தோசம் சகோதரி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
நாங்களே பேய் தான் எங்களுக்கு இன்னோரு பேய் வேணாம்
உண்மை அக்கா, நாமே பேய்தான்.
நானும் நேற்று இரவு கட்டிலில் மல்லாக்க படுத்துக்கொண்டு பலமாக யோசித்துக்கொண்டிருந்தேன், அம்மாவிடமும் சொன்னேன் அம்மாவும் இதேதான் சொன்னாங்க. என்னதான் யோசித்தாலும் 11 மணிக்கு மேல் நித்ரா தேவியிடம் தோற்றுபோனேன்.
காலையில் எழுந்ததும் அம்மா காபியோடு வந்தார்கள், ஒரு வேளை "பேயோட மனைவியை அழைத்து வரட்டுமா" என்று சொல்லி இருப்பாரோ என்றார்கள்.
குபீரன சிரிப்பு வந்தது...
கடைசியில் இந்த விடையைதான் பெரும்பாலும் சொல்லி இருக்காங்க. எப்படி சொன்னாலும் அர்த்தம் ஒன்றுதானே.....
சரியண்ணா... அடுத்த புதிரை எதிர்நோக்கி...........
உங்கள் அமர்க்களம் உறவுகளுடன் நான்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #25
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #25
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|