தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 16, 2014 1:29 pm

First topic message reminder :

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Zbpqy_203565


பெண்ணே நீ யார் ....?
-------------------------------

என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!

நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?

தோகை விரித்தாடும் மயில்
அழகியா ..?

எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?

கண்ட நொடியில் வெந்து
துடிக்குதடி -மனசு
பெண்ணே நீ யார் ....?

குறள் - 1081

தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 28, 2015 10:16 am

நினைக்காமல் இருக்க முடியுமோ ...?

நீயும் நானும் ....
நினைத்து என்னபயன் ...?
மனசே ...!!!
அவர் நம்மை நினைக்க ...
மறுக்கிறாரே ....!!!

என்ன செய்யமுடியும் ...?
மனசே ...?
அவர் நினைகவில்லை...
என்பதற்காக நாம் ...
நினைக்காமல் இருக்க முடியுமோ ...?

குறள் 1245
+
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.
+
நெஞ்சொடுகிளத்தல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 165
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Mar 04, 2015 9:36 pm

நடித்தது போதும் மனசே ...!!!
-----------------------------------

ஓ நெஞ்சே ....
என்னவனுடன் கூடியபோது ...
என்னுடன் சேர்ந்து நீயும் ...
கூடினாய் இன்புற்றாய்....!!!

எதற்காக ...?
இப்போ நடிக்கிறாய் ...?
என்னவன் கெட்டவன் என்று ...?
நடித்தது போதும் மனசே ...
என்னவனோடு இணைந்துவிடு ...!!!

குறள் 1246
+
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
+
நெஞ்சொடுகிளத்தல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 166
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Mar 04, 2015 9:45 pm

துடிப்பதை நிறுத்து ...!!!
--------------------------------

ஓ மனமே ....
என்னவனை நினைத்து ...
துடிப்பதை நிறுத்து ...!!!

என்னவனோடு நான் ..
இணைவதை தடுக்கும்
நாணத்தை நிறுத்து ...
இரண்டையும் - நீ
என்னுள் இருந்து நீ
செய்தால் என் நிலை ...?

குறள் 1247
+
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.

+
நெஞ்சொடுகிளத்தல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 167
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Mar 04, 2015 9:56 pm

நீ என்ன அறிவில்லாதநீயா ..?
--------------------------------------

என் மனசே ....
உன்னையும் என்னையும் ...
என்னவன் மறந்துவிட்டான் ..
நம்மை பிரிந்து சென்று ...
விட்டான் .....!!!

எதற்காக மனசே ...
அவர்பின்னால் செல்கிறாய் ...
நீ என்ன அறிவில்லாதநீயா ..?
என் மனது அறிவற்ற பேதை
தான் போலிருக்கிறது ...!!!

குறள் 1248
+
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

+
நெஞ்சொடுகிளத்தல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 168
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Mar 04, 2015 10:05 pm

அலையாதே மனசே ...
---------------------------

ஏய் மனசே ...!!!
என்னவன் என் மனதில் ..
குடிகொண்டு வதைக்கிறான் ..
நீ எங்கே அவனை தேடுகிறாய் ...?

அலையாதே மனசே ...
என்னவன் வெளியில் இல்லை
வந்து பார் என்னுள்ளே தான்
இருக்கிறான் ....!!!

குறள் 1249
+
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

+
நெஞ்சொடுகிளத்தல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 169
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Mar 04, 2015 10:28 pm

நானும் நீயும் நினைத்து ...
----------------------------------

எம்மை சேராமல் ...
எம்மை நினைக்காமல் ..
பிரிந்து சென்ற என்னவன்
எப்படி இருக்கிறானோ ..?

எம்மை
நினைக்காத அவரை
நானும் நீயும் நினைத்து ...
உடல் மெலிந்து உளமும்
மேலியப்போகிறது...!!!

குறள் 1250
+
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.
+
நெஞ்சொடுகிளத்தல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 170
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 13, 2015 10:36 pm

நிறையழிதல்.
தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 14, 2015 10:03 am

காதல் வேட்கை ...

காதல் வேட்கை ...
கோடரி போன்றது ...
காதல் வரும் வரை நாணம் ...
வந்தபின் நாணத்தை காணாமல் ...
வெட்டி எறிந்துவிடும் ....!!!

எத்தனைதான் ...
நாணத்தால் காதலை ...
மூடி வைத்தாலும் -ஒரு
நொடியில் காதல் மரத்தை ..
வெட்டும் கோடரிபோல்...
உடைத்து எறிந்துவிடும் ....!!!
+
குறள் 1251
+
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 171
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 14, 2015 10:18 am

இரக்கமே அற்றது காதல் ...

காதல் வேட்கை ...
இரக்கமே அற்றது ....
என்னை நினைக்காமல் ...
உன்னை நினைக்க வைக்கிறது ....!!!

நிம்மதியாய் ...
தூங்கும் நள்ளிரவில் கூட ..
உன் நினைவால் வதைத்து ..
கொல்கிறது...
+
குறள் 1252
+
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 172
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 14, 2015 10:32 am

காதல் செய்யாமல் இருக்க ....!!!

அடக்க முடியாது ....
நமக்கு வரும் தும்மலை ....
இருக்கும் இடத்தையும் ..
பார்க்காமல் தும்மிவிடுகிறோம்....!!!

காதலும் அவ்வாறே ....
இயன்றவரை மறைத்து ...
பார்கிறேன் முடியவில்லை ..
உயிரே இதற்கு மேல் ...
காதல் செய்யாமல் இருக்க ....!!!
+
குறள் 1253
+
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 173
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 14, 2015 10:41 am

ஊர் முழுக்க பரகசியமானதே ...!!!

என்னைவிட மன உறுதி ...
யாருக்கு வரும் என்று ...
கர்வத்தில் இதுவரை ...
வாழ்ந்தேன் .....!!!

எல்லாமே
பொய்யாய் போனது உயிரே ...
உன்னை கண்ட நொடியில் ...
தோன்றிய காதலால் ...
ஊர் முழுக்க பரகசியமானதே ...!!!
+
குறள் 1254
+
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 174
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 14, 2015 10:53 am

என்னை பிரிந்து சென்றவனே ....

என்னை பிரிந்து சென்றவனே ....
நீர் பிரிந்து செல்லும் போது ....
காதல் வேட்கையை கொண்டு ...
செல்லாது விட்டால் காதல் வலி ..
உமக்கு புரியும் ....!!!

காதல் வேட்கையோடு ...
நீரும் சென்றால் என் வலி ..
உமக்கு புரியபோவதே..
இல்லை என்பது உண்மை ...!!!
+
குறள் 1255
+
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 175
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 28, 2015 7:57 am

காதல் கொடிய நோய் தானே ....!!!

வெறுத்து
நீர் பிரிந்து சென்றாலும் ...
எனக்கு வேதனை தர ....
நீர் பிரிந்து சென்றாலும் ....
என் மனம் உம்மையே ...
நாடுகிறதே.....!!!

என்னதான் நீர்
துன்பம் தந்தாலும் ...
உம்மையே சுற்றி சுற்றி ....
வரும் இந்த காதல் ....
கொடிய நோய் தானே ....!!!

குறள் 1256
+
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.

+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 176
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 28, 2015 8:08 am

என்னையே மறக்கவைகிறது ....!!!

என்னவனே ...
என் இதயம் நிறைந்தவனே ....
உன் மீது கொண்ட காதல் ...
என்னையே மறக்கவைகிறது ....!!!

நீர் நினைப்பதையும் ....
நீர் நினைக்காததையும் ....
செய்கிறேன் - நாணம்
ஒன்றையே இப்போ ...
என்னில் காணவில்லையே ....!!!
+
குறள் 1257
+
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 177
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 28, 2015 8:20 am

மன அடக்ககோட்டையை உடைத்தவனே

என்
மன அடக்ககோட்டையை ....
உடைத்தவனே ....
மன அடக்ககோட்டையை இப்போ ...
பஞ்சு கோட்டையனதே....!!!

ஏய் கள்வனே ....
என்னை மயக்கும் பொய் ...
உரைத்தவனே ....
பொய்யிலும் ஒரு இனிமை ...
இருக்குதானடா .....!!!
+
குறள் 1258
+
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 178
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 28, 2015 8:29 am

நாணத்தால் விலகினேன் ...

என்னவனே ...
உன்னருகில் வந்தேன் ...
நாணத்தால் விலகினேன் ...
முடியவில்லை என்னவனே ...
ஊடலை மறைக்க .....!!!

நான்
விலகினாலும் -என்
மனம் அவரோடு ஊடல் ...
கொண்டு விட்டதே ...
இனி எப்படி என்னால் ...
தடுக்க முடியும் ...?
+
குறள் 1259
+
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.

+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 179
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 28, 2015 8:40 am

எதுவுமே நடக்காததுபோல் ....

நெருப்பில் விழுந்த ....
நெய் போல் உருகுதே ...
என் மனம் உயிரே ....!!!

நீ கூடவும் ..
நான் ஊடவும்....
நடக்கும் திருவிழாவில் ...
எல்லாம் முடிந்தபின் ...
எதுவுமே நடக்காததுபோல் ....
மனம் நினைக்குமோ ....?
+
குறள் 1260
+
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 180
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 09, 2015 4:24 pm

என்னவனே நீ வரும் ....

என்னவனே நீ வரும் ....
நாட்களை சுவரில் ....
கீறி கீறி என் விரல்கள் ....
தேய்ந்து விட்டன ....!!!

தினமும் ...
உன்னை தேடி தேடி ...
ஓடி ஓடி பார்த்து....
என் பார்வைகளும் ....
மங்கிகொண்டு வருகின்றன ....!!!

+
குறள் 1261
+
அவர்வயின்விதும்பல்
+
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 181
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 09, 2015 4:38 pm

மறந்தால் வாழ்ந்திடுவேனோ....?

சூரிய ஒளி கொண்டவனே .....
எண்ணங்களை மறந்திடுவேனோ ....
மறந்தால் வாழ்ந்திடுவேனோ....?

உன் நினைவால் ...
என் உடல் மெலிகிறது ....
கைகள் தேய்கின்றன ....
என் அழகும் குறைகிறது ....
நீ வரும் வரை ....
உன் நினைவு ஒன்றுதான் ...
அழகை காப்பாற்றுகிறது ...!!!
+
குறள் 1262
+
அவர்வயின்விதும்பல்
+
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 182
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 10, 2015 7:44 am

இவள் காத்திருப்பாள் ....!!!

என்னவனே ....
வெற்றிதான் முக்கியம் ....
என் இன்பத்தை நுகராது ....
என் துணையை விரும்பாது ...
சென்றவனே .....!!!

உன் விருப்பமே என் ...
விருப்பம் - உன் வெற்றியே ..
என்றும் நம் வெற்றி ...
நீ எதையும் இழந்திடாதே ...
நீ வரும் வரை ...
இவள் காத்திருப்பாள் ....!!!
+
குறள் 1263
+
அவர்வயின்விதும்பல்
+
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 183
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 10, 2015 8:01 am

மிகுந்த காதலுடன் வருவீர் ....!!!

என்னனவே ....
என்னை பிரிந்து சென்றவனே ....
மீண்டும் வருவதை என் மனம் ....
நினைக்கும் துள்ளிக்குதிக்கிறது ...
மிகுந்த காதலுடன் வருவீரே....!!!

எந்த
நாளை எண்ணிபார்கையில்....
இதயம் வருத்தத்தை விட்டு ...
மனதில் இன்ப கிளைகளை ....
வளர்க்கிறது என் உயிரே ....!!!
+
குறள் 1264
+
அவர்வயின்விதும்பல்
+
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 184
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 10, 2015 8:12 am

கண்களே காத்திருங்கள் ....!!!

கண்களே ...
உங்கள் பணி என்னவனை ...
பார்ப்பதற்காக இருப்பதே ....
எத்துணை துன்பம் வந்தாலும் ...
விழித்திருங்கள் என்னவன் ....
வருவான் .....!!!

என் கண்கள் ...
என்னவனை கண்டதும் ....
மெலிந்த உடலும் தோலும் ...
பொழிவுபெரும்....
கண்களே காத்திருங்கள் ....!!!
+
குறள் 1265
+
அவர்வயின்விதும்பல்
+
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 185
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 11, 2015 10:03 am

துன்பங்களை துடைப்பான் ...!!!

என்னவன் என்னிடம் ...
என்றோ ஒருநாள் வருவான் ....
துன்பங்களை துடைப்பான் ...!!!

என்னிடம் இருக்கும் ...
அனைத்து துன்பங்களையும் ...
என்னவன் மீது கொட்டி ....
தீர்த்து அனுபவிப்பேன் ....
அத்தனை இன்பத்தை ....
பெறுவேன் ....!!!
+
குறள் 1266
+
அவர்வயின்விதும்பல்
+
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 186
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 11, 2015 10:26 am

துடித்துகொண்டிருக்கிறேன் ...!!!

என் கண்ணாலனே ....
நீ வந்தால் என்செய்வேன் ..?
ஊடல் செய்வோனோ...?
கூடல் செய்வேனோ ...?
இரண்டும் செய்வேனோ ...?

அத்துணை துன்பத்தை ...
அனுபவிக்கும் நான் ....
உன் வரவுக்காய் ....
துடித்துகொண்டிருக்கிறேன் ...!!!
+
குறள் 1267
+
அவர்வயின்விதும்பல்
+
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 187
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 11, 2015 10:35 am

மனசே பொறுத்திரு ....!!!

பொறுத்திருப்போம் ...
போரில் வெல்வோம் ...
நாட்டை காப்போம் ....
பொறுத்திருப்போம் .....!!!

நானும்
என் துணைவியும் ....
மாலைபொழுதில் ...
விருந்துண்போம்
மனசே பொறுத்திரு ....!!!
+
குறள் 1268
+
அவர்வயின்விதும்பல்
+
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 188
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    - Page 8 Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum