Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
புதிர் மன்னர்களுக்கு முழுமுதலோனின் ஒரு எளிய விருந்து-வாருங்கள் !!! கண்டு களியுங்கள் !!
சிறப்பான பதிலை பதிவு செய்யுங்க !!!
சென்னையில் தன் உறவின்ர் வீட்டு குடும்ப விழாவுக்கு வந்த செந்திலுக்கு திடீரென ஒருநாள் குதிரைச் சவாரி செய்து பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது அதனால் மெரினா கடற்கரைக்கு வந்து ஒரு குதிரைக்காரனைத் தேடிப் பிடித்து தனது விருப்பத்தைக் கூறினார் அவனும் ரூபாய் 50 தர வேண்டும் என்று பேசி முடித்தபின்பு ஒரு வழியாக ஒரு குதிரையைக் கொண்டு வந்தான்.
தெனாலிராமன் வளர்த்த குதிரையைப் பற்றி நாம் அவ்வப்போது கதைகளில் படித்துள்ளோம். கிட்டத் தட்ட அதே போல ஒரு குதிரையைத்தான் அவன் ஓட்டி வந்தான்.
அந்தக் குதிரையின் முதுகின் மேல் சேனம் போடப்பட்டிருந்தது. ஆனால் கடிவாளமே இல்லை.
கடிவாளம் இல்லாமல் எப்படி ஏறுவது என்று செந்தில் சற்று தயங்கினார்
.
அதற்கு அவன் ஐயா நீங்கள் கொஞ்சம் கூட யோசிக்கவே வேண்டாம். இந்தக் குதிரை வேகமாக ஓடாது. மேலும் நானும் கூடவே வருவேன். அதனால் பயமில்லாமல் குதிரையின்மேல் ஏறுங்கள் என்றான்.
அதைக்கேட்ட செந்தில் கொஞ்சம் பயம் தெளிந்து குதிரையின் மேல் தாவி ஏறினார் .
குதிரையை அந்த மெரினாவின் அழகு கடற்கரையில் இங்கேயும் அங்கேயுமாக சுற்றி சுற்றி மெதுவாக நடத்தினான் குதிரைக்காரன்.
குதிரையும் மெதுவாக நடந்து நடந்து அந்த அழகு கடற்கரையை ஒரு சுற்றுச் சுற்றி வந்தது. செந்தில் கீழே சாய்ந்து விடாமல் இருப்பதற்காக சேனத்தை ஒரு கையால் பிடித்தபடி இருந்தார்
அப்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன், ஒரு பட்டாசுக்கட்டை கொளுத்திப்போட, அது நேராக குதிரைக்கு முன்னால் வந்து விழுந்தது.
பட்டாசு வெடிச் சப்தம் கேட்டதும், குதிரைக்கு ஏதோ ஆகிவிட்டது. திடீரென்று நாலுகால் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தது. கடற்கரையை விட்டு குதிரை சாலையில் தாவியது.
குதிரை கண்மண் தெரியாமல் ஓட மேலே இருந்த செந்தில் என்ன செய்வது என்று அறியாமல் குதிரையின் காதுகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு அப்படியே முன்பக்கம் சாய்ந்து கொண்டார் கொஞ்சம் கை நழுவினாலும் நிலை தடுமாறி கீழே விழுந்து, குதிரையின் கால்களுக்கிடையில் சிக்கிச் சின்னாபின்னமாவது நிச்சயம் என்று செந்திலின் மூளையில் ஒரு எச்சரிக்கை மணியடித்தது.
செந்தில் சற்று முன்பக்கம் சாய்ந்தபடியே கொஞ்சம் தலையை நிமிர்த்திப்பார்த்தார் .தூரத்தில் ஒரு லாரி வேகமாக வந்துகொண்டிருப்பது தெரிந்தது. இந்த வேகத்தில் போனால் நிச்சயமாக லாரி குதிரையோடு சேர்த்து தன்னையும் அடித்துவிடும் என்று நினைத்தார் . ஆனாலும் குதிரையை நிறுத்த வழியறியாது கலக்கம் அடைந்தார் .
பயத்தில் அந்த நேரத்தில் குதிரையின் காதுகளைப் பற்றியிருந்த அவ்ரது கைகளும் கொஞ்சம் கொஞ்சமாக நழுவத் தொடங்கியது.
தனது முடிவு தன் கண்களுக்குத் தெரிவதுபோல உணர்ந்த செந்தில் கண்களை மூடிக்கொண்டு வருவதை எதிர்கொள்ளத் தயாரானார் .அதே சமயம் கைகளின் பிடிமானம் முழுவதுமாக நழுவியது.
திடீரென்று குதிரை ஓடுவதை நிறுத்திவிட்டதை செந்தில் உணர்ந்தார் .
கண்களைத் திறந்து பார்த்தார் .
குதிரை ஓடாமல் நடுச் சாலையில் நிற்பதையும், தூரத்தில் தெரிந்த லாரி டிரைவர் தன்னை சபித்துக்கொண்டிருப்பதையும் செந்தில் கண்டார் .
உடனே குதிரையில் இருந்து கீழே குதித்ததோடு மட்டுமல்லாமல், குதிரையையும் சாலை ஓரம் இழுத்து அதையும் லாரியில் இருந்து பிரமாதமாக காப்பாற்றினார்
வெறி பிடித்ததுபோல் ஓடிய குதிரை ஏன் திடீரென்று ஓட்டத்தை நிறுத்தியது என்று கடைசி வரை செந்திலுக்கு விளங்கவே இல்லை. இருந்தாலும் தான் தப்பித்தது பெரும் பாக்கியம் என்று எண்ணி அப்போதே இரு கரம் கூப்பி கடவுளுக்கு நன்றி செலுத்தினார்
செந்திலின் குதிரை சவாரியை நாம இப்ப இங்கேயே நிறுத்துவோம்
இப்ப நம்ம புதிருக்கு வருவோம்
வெறி பிடித்து ஓடிய குதிரை நடுச்சாலையில் ஏன் அப்படியே நின்று விட்டது??
நீங்கள் தான் நம்ம செந்திலுக்கு குதிரை திடீரென்று ஏன் தன் ஓட்டத்தை நிறுத்தியது என்று கூற வேண்டும் ?? சரிங்களா திறமைசாலிகளே !!!
புதிரை நல்லா படியுங்க !! சிறப்பான பதிலை பதிவு செய்யுங்க !!! செந்திலுக்கு புரிய வையுங்க !!
சரியான பதில் நாளை காலை பதிவு செய்யப்படும்
Last edited by முழுமுதலோன் on Sat Feb 28, 2015 12:45 pm; edited 1 time in total
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
மிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் அண்ணா, உங்கள் பதிலுக்காக.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
அதானே பார்த்தேன்செந்தில் wrote:மிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் அண்ணா, உங்கள் பதிலுக்காக.
செந்தில் புத்திசாலியா மாறிடாரோ என பயந்துட்டேன்
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
உங்க தம்பியாச்சே!அதானே பார்த்தேன்
செந்தில் புத்திசாலியா மாறிடாரோ என பயந்துட்டேன்
_________________________
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
தொடந்து வெற்றி பெற்ற என்னையும் சற்று யோசிக்க வைக்குது இந்த புதிர் குதிரை எப்படி பிரேக் பிடித்து நின்றது. செந்தில் கைகளால் குதிரை கழுத்தை பிடித்து இழுத்து நெரித்து இருப்பாரோ.
தொடர்ந்து யோசிக்கிறேன் அண்ணா
தொடர்ந்து யோசிக்கிறேன் அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
அண்ணன் புத்திசாலியா இருந்தா தம்பி மக்கா இருக்கனுமா என்ன ?உங்க தம்பியாச்சே!
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
அண்ணன் புத்திசாலியா இருந்தா தம்பி மக்கா இருக்கனுமா என்ன ?
நினைப்பு பிழைப்பை கெடுக்கும் அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
உங்க அனுபவத்தை யார் இப்ப கேட்டாஸ்ரீராம் wrote:அண்ணன் புத்திசாலியா இருந்தா தம்பி மக்கா இருக்கனுமா என்ன ?
நினைப்பு பிழைப்பை கெடுக்கும் அண்ணா
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
சரியா சொன்னீங்க ஜி!நினைப்பு பிழைப்பை கெடுக்கும் அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
செந்தில் wrote:சரியா சொன்னீங்க ஜி!நினைப்பு பிழைப்பை கெடுக்கும் அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
உங்க அனுபவத்தை யார் இப்ப கேட்டா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
பட்டாசு சத்தத்தை கேட்டு பயந்து ஓடியது குதிரை அதே சமயம் செந்திலும் தான் கீழே விழுந்துவிடுவோமோ என பயந்து குதிரையின் காதை பிடிக்க அது மேலும் வலி தாங்கமுடியாமல் ஓடி உள்ளது .
லாரியை பார்த்த பயத்தில் குதிரையின் காதை பிடித்திருந்த செந்திலின் கை நழுவியது அதனால் குதிரையும் ஓடுவதை நிறுத்தியது
லாரியை பார்த்த பயத்தில் குதிரையின் காதை பிடித்திருந்த செந்திலின் கை நழுவியது அதனால் குதிரையும் ஓடுவதை நிறுத்தியது
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
முரளிராஜா wrote:பட்டாசு சத்தத்தை கேட்டு பயந்து ஓடியது குதிரை அதே சமயம் செந்திலும் தான் கீழே விழுந்துவிடுவோமோ என பயந்து குதிரையின் காதை பிடிக்க அது மேலும் வலி தாங்கமுடியாமல் ஓடி உள்ளது .
லாரியை பார்த்த பயத்தில் குதிரையின் காதை பிடித்திருந்த செந்திலின் கை நழுவியது அதனால் குதிரையும் ஓடுவதை நிறுத்தியது
இது சரியான பதிலாக இருக்கலாம்.
நான் மேலும் சில விஷயங்களை யோசித்தேன்.
* கடற்கரை குதிரை ஒரு எல்லைக்கு மேலே போகாது. எனவே தன் எஜமான் ஞாபகம் வந்து இருக்கலாம்.
* மஞ்சள், சிவப்பு அல்லது குதிரைக்கு பிடிக்காத கலரில் ஏதேனும் வாகனம் வந்ததால் நின்று இருக்கலாம்.
* குதிரைக்கு தாகம் எடுத்து இருக்கும் உடனே நின்று பிறகு நீர் நிலை இருக்கும் இடத்தை நோக்கி சென்று இருக்கும்.
* பட்டாசு வெடித்த இடத்தில் இருந்து வெகு தூரம் ஓடி வந்த களைப்பால் குதிரை நின்று இருக்கலாம்.
மேலும் விடாது கருப்பு. நாளை யோசித்து சொல்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
ஸ்ரீராம் wrote:முரளிராஜா wrote:பட்டாசு சத்தத்தை கேட்டு பயந்து ஓடியது குதிரை அதே சமயம் செந்திலும் தான் கீழே விழுந்துவிடுவோமோ என பயந்து குதிரையின் காதை பிடிக்க அது மேலும் வலி தாங்கமுடியாமல் ஓடி உள்ளது .
லாரியை பார்த்த பயத்தில் குதிரையின் காதை பிடித்திருந்த செந்திலின் கை நழுவியது அதனால் குதிரையும் ஓடுவதை நிறுத்தியது
இது சரியான பதிலாக இருக்கலாம்.
நான் மேலும் சில விஷயங்களை யோசித்தேன்.
* கடற்கரை குதிரை ஒரு எல்லைக்கு மேலே போகாது. எனவே தன் எஜமான் ஞாபகம் வந்து இருக்கலாம்.
* மஞ்சள், சிவப்பு அல்லது குதிரைக்கு பிடிக்காத கலரில் ஏதேனும் வாகனம் வந்ததால் நின்று இருக்கலாம்.
* குதிரைக்கு தாகம் எடுத்து இருக்கும் உடனே நின்று பிறகு நீர் நிலை இருக்கும் இடத்தை நோக்கி சென்று இருக்கும்.
* பட்டாசு வெடித்த இடத்தில் இருந்து வெகு தூரம் ஓடி வந்த களைப்பால் குதிரை நின்று இருக்கலாம்.
மேலும் விடாது கருப்பு. நாளை யோசித்து சொல்கிறேன்.
நல்லது நல்லது மக்கள் என்ன மாதிரி எல்லாம் யோசிர்க்கிறாங்க
ஆனால் விடை தான் தெரிய மாட்டங்குது
யோசிங்க மக்களே நல்லா யோசிங்க
இன்னும் நேரம் இருக்கு
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
ஐயோ அப்ப தல சொன்னது மற்றும் நான் சொன்னது அனைத்தும் வேஸ்டா.
சரி இரவு யோசித்ததில் மேலும் சில....
1. குதிரைக்கு பிடித்தது கொள்ளு, அது அங்கே கொட்டி கிடக்கலாம். அதை பார்த்தவுடன் குதிரை நின்று இருக்கும்.
2. செந்தில் குதிரையின் காதை விட்டு விட்டு லேசாக கீழே சரியும் போது தனக்கே தெரியாமல் கடிவளத்தை முன்னே பின்னே அசைத்து அசைத்து இருப்பார்.
3. குதிரை கண் மண் தெரியாமல் போன போது எதிரே வேறு ஒரு குதிரை கூட வந்து வந்து இருக்கலாம்.
இதுக்கு மேலயும் யோசிக்க ஒன்றும் இல்லை.
சரி இரவு யோசித்ததில் மேலும் சில....
1. குதிரைக்கு பிடித்தது கொள்ளு, அது அங்கே கொட்டி கிடக்கலாம். அதை பார்த்தவுடன் குதிரை நின்று இருக்கும்.
2. செந்தில் குதிரையின் காதை விட்டு விட்டு லேசாக கீழே சரியும் போது தனக்கே தெரியாமல் கடிவளத்தை முன்னே பின்னே அசைத்து அசைத்து இருப்பார்.
3. குதிரை கண் மண் தெரியாமல் போன போது எதிரே வேறு ஒரு குதிரை கூட வந்து வந்து இருக்கலாம்.
இதுக்கு மேலயும் யோசிக்க ஒன்றும் இல்லை.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
எப்படி உங்களால் மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடிகிறது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
என்ன பண்றது அண்ணா. ஆனால் கடைசிவரை வெல்லும் வாய்ப்பு குறைவாக இருக்கிறதே. முகநூலில் என்னுயிர் நவீன் தான் வெற்றி பெற போவதாக ரொம்ப நம்பிட்டு இருக்கார். அவருக்கு ஒரு பதில் போட்டு இருக்கேன். பாருங்கள்.
எது எப்படியோ...... இந்த முறை பூங்கொத்து உங்களுக்குதான் என சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா.
அடுத்த புதிர்ல உங்களை வெல்வேன்.
அதுக்கு முன் திங்கள் அன்று நான் ஒரு புதிர் பதிவிட எண்ணியுள்ளேன். முடிந்தவரை பதிவிடுவேன்.
எது எப்படியோ...... இந்த முறை பூங்கொத்து உங்களுக்குதான் என சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா.
அடுத்த புதிர்ல உங்களை வெல்வேன்.
அதுக்கு முன் திங்கள் அன்று நான் ஒரு புதிர் பதிவிட எண்ணியுள்ளேன். முடிந்தவரை பதிவிடுவேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
எனக்கு என்னவோ நீங்கள் புதிரை சரியாக படிக்க வில்லை என்று தோன்றுகிறது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
முழுமுதலோன் wrote:எனக்கு என்னவோ நீங்கள் புதிரை சரியாக படிக்க வில்லை என்று தோன்றுகிறது
எப்போது ஒரே முறையில் கண்டுபிடிப்பேன். இந்த புதிரை மூன்று தடவை படித்தேன். இனி அடுத்த புதிரை எதிர் நோக்கி ............
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
ஸ்ரீராம் wrote:முழுமுதலோன் wrote:எனக்கு என்னவோ நீங்கள் புதிரை சரியாக படிக்க வில்லை என்று தோன்றுகிறது
எப்போது ஒரே முறையில் கண்டுபிடிப்பேன். இந்த புதிரை மூன்று தடவை படித்தேன். இனி அடுத்த புதிரை எதிர் நோக்கி ............
ஒ அவ்வளவு தானா !!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
அவ்வளவுதான் அண்ணா. எனக்கு தெரியல.
அடுத்த புதிரில் நன்றாக செயல்படுகிறேன்.
பிடிங்க மலர் கொத்தை.
அடுத்த புதிரில் நன்றாக செயல்படுகிறேன்.
பிடிங்க மலர் கொத்தை.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
வழக்கம் போல இந்த புதிருக்கும் நல்ல வரவேற்பு இருந்தது
முகநூளிலும் நிறைய நண்பர்கள் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி
ஆனாலும் ஒருவர் கூட சரியான பதிலை பதிவு செய்ய வில்லை என்பது எனக்கு சற்று வருத்தமே !!!
இருப்பினும் உங்கள் அனைவரின் மன ஓட்டம் குதிரையின் ஓட்டத்தை விட அதிகமாக இருந்தது பாராட்ட தக்கது
முகநூளிலும் நிறைய நண்பர்கள் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி
ஆனாலும் ஒருவர் கூட சரியான பதிலை பதிவு செய்ய வில்லை என்பது எனக்கு சற்று வருத்தமே !!!
இருப்பினும் உங்கள் அனைவரின் மன ஓட்டம் குதிரையின் ஓட்டத்தை விட அதிகமாக இருந்தது பாராட்ட தக்கது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மூளைக்கு விருந்து -புதிர் எண் 26
புதிருக்கான சரியான விடை
காதை பிடித்திருந்த செந்திலின் கைகள் நழுவி குதிரையின் கண்களை மூடியதால், பார்வையை மறைத்தது
குதிரை 'சடன் பிரேக்' போட்டு நின்று விட்டது
யோசித்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் முழுமுதலோனின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
மீண்டும் அடுத்த புதிரில் சந்திப்போம்
நன்றி வணக்கம்
காதை பிடித்திருந்த செந்திலின் கைகள் நழுவி குதிரையின் கண்களை மூடியதால், பார்வையை மறைத்தது
குதிரை 'சடன் பிரேக்' போட்டு நின்று விட்டது
யோசித்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் முழுமுதலோனின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
மீண்டும் அடுத்த புதிரில் சந்திப்போம்
நன்றி வணக்கம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
» புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|