Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
Page 1 of 4 • Share
Page 1 of 4 • 1, 2, 3, 4
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
சென்னை நகரில் ரோபோக்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பல இருந்தாலும் இரண்டு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. அவற்றில் முதல் இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக்க்கொண்டது வடபழனியில் உள்ள GK இன்போ சிஸ்டம்ஸ்தான், அதன் நிறுவனர் திரு. கணபதி கேசவன் மார்க்கெட்டில் புது புது டிசைன்களில் ரோபோக்களை தயாரித்து வெளியீட்டு தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். அதன் காரணமாக தொழில் ரீதியாக பொறாமை அதிகரித்து வந்தது .
தனக்கு இந்த நிலை தொடர்ந்தால் நிலமை மோசமாகிவிடும் என உணர்ந்த இரண்டாம் இடத்தில் இருக்கும் எஸ்ஆர்கே சிஸ்டம்ஸ் சுனில் ஷர்மா உடனடியாக நிறுவன மேலாளர்களையும், இயக்குனர்களையும் அழைத்து கூட்டம் போட்டு விவாதித்தனர், திரு. கணபதி கேசவன் நேர்மையாக தொழில் செய்பவர், தன்னிடம் உள்ள அனைத்து பணியாளர்களுடன் தேரடி தொடர்பு வைத்து இருப்பதால், தொழிலாளிகளும் கடுமையாக உழைக்கிறார்கள், அவர்களில் ஒருவரை கூட நாம் விலை கொடுத்து வாங்க முடியாது, மேலும் அவருடன் நேரடியாக போட்டி போட்டு ஜெயிக்க முடியாது, மறைமுகமாதான் வெல்லவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
இந்த விஷயம் திரு. கணபதி கேசவன் அவர்களின் காதுக்கும் எட்டியது, அவர் மனம் சஞ்சலப்பட்டது, என்ன செய்ய போகிறார்கள் என தெரியவில்லை, தெரிந்தாலும் எச்சரிக்கையாக இருக்கலாம். அந்த நேரத்தில் அவரது கார் அண்ணா சாலையில் அண்ணா தியட்டர் எதிரே உள்ள சிக்னலில் நின்றுக்கொண்டிருந்தது, தியாட்டார் வாசலில் தெரிந்த ஒரு பெரிய பேனர் ஒன்றை கவனித்தார், சிறிது நேரத்தில் பச்சை சிக்னல் கிடைத்து கார் சென்று கொண்டிருக்கும் போது மற்றொரு நிறுவன பெயர் பழகையை கவனித்தார், சற்று முன் கண்ட சினிமா பேனருக்கும் அந்த பெயர் பழகைக்கும் ஒரு சம்பந்தம் இருந்தது, அது ஒரு பிரபல துப்பறியும் நிறுவனம் (Deductive Agency). உடனே காரை நிறுத்த சொல்லிவிட்டு காரிலிருந்து இறங்கி ஏஜன்சி உள்ளே சென்றார், வாசலில் நின்ற செக்யூரிட்டி தேவையான தகவல்களை பதிந்து உள்ளே செல்ல அனுமதித்தார், உள்ளே அந்நிறுவனராக இருந்த முரளிராஜாவை சந்தித்து தன் கேள்விப்பட்ட தொழில் பிரச்சனையை எடுத்துக்கூறி தனக்கு உதவும்மாறு கேட்டார். அவரும் கண்டிப்பாக உதவுகிறோம் இங்கே எங்களிடம் பல துப்பறியும் ஏஜெண்டுகள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவரை தேந்தெடுத்துக்கொள்ளுங்கள் என பட்டியலை நீட்டினார்.
அந்த பட்டியலில் மகா பிரபு, இனியவன், ஸ்ரீராம், மொகைதீன், ரமேஷ், முத்து, சசிகுமார், செந்தில்... என பெரிதாக நீண்டது, பட்டியலை வாங்கி அதில் லில்ஸ்டில் உள்ளவர்களை ஒருமுறை பார்த்தவர், மூன்றாவதாக இருந்த ஸ்ரீராம் என்ற துப்பறியும் ஏஜெண்டை தேந்தெடுத்து மற்ற விவரங்களையும் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் கணபதி கேசவன். இப்போது அவருக்கு சற்று மன பாரம் குறைந்திருந்தது.
அன்று மாலை பொழுதிலேயே ஸ்ரீராம் GK இன்போ சிஸ்டம்ஸ் வந்துவிட்டார், அவரை அன்புடன் வரவேற்ற திரு. கணபதி கேசவன், ஸ்ரீராம்க்கு தனியாக அக்சஸ் கார்டை தந்து உள்ளே அழைத்து சென்று வரும் ஆபத்துகள், பிரச்சனைகள் பற்றி அனைத்தையும் விவாதித்தார். கொஞ்சம் நாட்களுக்கு புதிதாக யாரையும் பணியில் அமர்த்தவேண்டாம் என்ற ஸ்ரீராம் அந்நிறுவனத்தில் வெளிப்புற காமிராக்கள் கூடுதலாக அமைக்கவேண்டும் என
கேட்டுக்கொண்டார், அதை ஆமோதித்த நிறுவனர் அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யுமார் செக்யூரிட்டிகளுக்கு ஆணையிட்டார். அன்றைய தினமே ஸ்ரீராம் தனது பணியை ஆரம்பித்தார் செக்யூரிட்டிகள் அனைவரும் விழிப்புடன் இருந்தனர். அவ்வப்போது கன்ரோல் ரூமில் தெருவை நோட்டமிட்டனர். ஸ்ரீராம் பகல் நேரங்களில் ஓய்வு எடுத்துக்கொள்வார். நாட்கள் சில உருண்டோடியது எந்த பிரச்சனையும் இதுவரை நடைபெறவில்லை. திரு. கணபதி கேசவன் அவர்களுக்கும் தனக்கு வந்த செய்தி தவறாக இருக்குமோ என நினைத்தார், இருப்பினும் அனைவரையும் விழிப்புடன் இருக்க சொல்லிவிட்டு கிளம்பி சென்றார்.
அன்றைய தினம் இரவு நல்ல மழை கொட்டி தீர்த்தது, இந்த நேரத்தில் கண்காணிப்பு காமிராவில் ஒரு பெண் அருகில் ஓடி வருவதாக கண்ட்ரோல் ரூம் மானிட்டரில் தெரிந்தது, ஸ்ரீராம் உடனே அங்கிருந்து அலுவலக வாசலை அடைந்த நேரத்தில் அந்த பெண்ணும் வாசலில் வந்து அந்த கண்ணாடி கதவை தட்டினாள். ஸ்ரீராம் தனது அக்சஸ் கார்ட் மூலம் கண்ணாடி கதவை திறந்து என்னாச்சு யார் நீ என்றான், அந்த பெண் ஜீன்ஸ் பேண்டும், டீ ஷர்ட்டும் அணிந்து இருந்தாள், அவள் தான் லிபார்ட்டி அருகில் வாசிப்பதாகவும், தோழி வீட்டிற்கு பார்ட்டிக்கு வந்தவள் அங்கிருந்து லேட்டாக கிளம்பியதால் வரும் வழியில் தன்னை ஐந்தாறு பேர் துரத்தி வருவதாக சொன்னாள். ஸ்ரீராம் வெளியில் எட்டி பார்த்தபோது சற்று தூரத்தில் சிலர் ஓடி வருவது தெரிந்தது. அந்த நேரத்தில் வானத்தில் மின்னல் தோன்ற அந்த மின்னல் வெளிச்சத்தில் அவர்கள் கையில் ஆயுதங்களுடன் வருவதை கண்ட ஸ்ரீராம், உடனே கதவை மூடி, அனைவரையும் எச்சரிக்கையாக இருக்க செய்து விட்டு அந்த பெண்ணின் கையை பிடித்து விடுவிடுவேன இழுத்துக்கொண்டு போய் ரிசப்னிஸ்ட் பயன்படுத்தும் அறையில் உள்ளே தள்ளி ரூமின் வெளியே உள்ள தாழ்பாளை போட்டு விட்டு திரும்பினான். ஒரு செக்யூரிட்டி அங்கே வந்து சார் இந்த பெண்ணை துரத்திக்கொண்டு வந்தவர்கள் அனைவரும் நேராக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்றான். ஸ்ரீராம் புன்னகைத்தவாறே உடனே கணபதி கேசவன் அவர்களுக்கும், போலீஸ்க்கும் தகவல் தருமாறு பணித்தார் செக்யூரிட்டிகள் சற்று ஆச்சிரியப்பட்டாலும் இருபக்கமும் தகவல் கொடுக்கப்பட்டது.
மறுநாள் காலை போலீஸ் ஸ்டேஷனில் அந்த பெண்ணை போலீஸ் முறைப்படி விசாரித்ததில் எல்லா விஷயங்களை சொல்லிவிட்டால், தான் எஸ்ஆர்கே சிஸ்டம்ஸ் சுனில் சர்மாவால் அனுப்பப்பட்டவள் என்றும், தன்னிடம் சில அதிதொழில்நுட்பம் வாய்ந்த கண்ணுக்கு புழப்படாத பாட்டரி மூலம் இயங்கும் காமிராவை கொடுத்து அதை அங்கே சில இடங்களில் பொருத்திட பணித்தார் என்றாள். அதனால் அவர்கள் தயாரிக்கும் மாடலை/பொருளை அவர்களுக்கு முன்பே தயாரித்து மார்க்கட்டில் கிடைக்கும்படி செய்தால் GK இன்போ சிஸ்டம்ஸ் நாளடைவில் படுத்து விடும் என திட்டம்தீட்டப்பட்டது என தெரிந்தது, உடனடியாக சுனில் ஷர்மாவையும் கைது செய்தனர்.
அஸ்சிஸ்டன்ட் கமிஷ்னர் ஜேக் ஸ்ரீராமை நோக்கி நீங்க எப்படி கண்டுபிடித்தீர்கள் என்றார்?
ஸ்ரீராம் சொல்ல தொடங்கினார்.....................
சரி கேள்வி என்னவென்றால் ஸ்ரீராம் எப்படி இந்த பெண்தான் குற்றவாளியென்று கண்டுபிடித்தார்.?
சரியான பதிலை சொல்பவர்கள் என் அடுத்த துப்பறியும் கதையின் நாயகனாக வருவார்.
இந்த கதையை சில வாரங்களாக அவ்வப்போது வோர்டில் எழுதி வந்தேன், இன்று பதிவிட்டு இருக்கிறேன். கதையில் தவறுறிந்தால் சுட்டி காட்டுங்கள். அடுத்த புதிரில் சந்திக்கலாம்.
தனக்கு இந்த நிலை தொடர்ந்தால் நிலமை மோசமாகிவிடும் என உணர்ந்த இரண்டாம் இடத்தில் இருக்கும் எஸ்ஆர்கே சிஸ்டம்ஸ் சுனில் ஷர்மா உடனடியாக நிறுவன மேலாளர்களையும், இயக்குனர்களையும் அழைத்து கூட்டம் போட்டு விவாதித்தனர், திரு. கணபதி கேசவன் நேர்மையாக தொழில் செய்பவர், தன்னிடம் உள்ள அனைத்து பணியாளர்களுடன் தேரடி தொடர்பு வைத்து இருப்பதால், தொழிலாளிகளும் கடுமையாக உழைக்கிறார்கள், அவர்களில் ஒருவரை கூட நாம் விலை கொடுத்து வாங்க முடியாது, மேலும் அவருடன் நேரடியாக போட்டி போட்டு ஜெயிக்க முடியாது, மறைமுகமாதான் வெல்லவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
இந்த விஷயம் திரு. கணபதி கேசவன் அவர்களின் காதுக்கும் எட்டியது, அவர் மனம் சஞ்சலப்பட்டது, என்ன செய்ய போகிறார்கள் என தெரியவில்லை, தெரிந்தாலும் எச்சரிக்கையாக இருக்கலாம். அந்த நேரத்தில் அவரது கார் அண்ணா சாலையில் அண்ணா தியட்டர் எதிரே உள்ள சிக்னலில் நின்றுக்கொண்டிருந்தது, தியாட்டார் வாசலில் தெரிந்த ஒரு பெரிய பேனர் ஒன்றை கவனித்தார், சிறிது நேரத்தில் பச்சை சிக்னல் கிடைத்து கார் சென்று கொண்டிருக்கும் போது மற்றொரு நிறுவன பெயர் பழகையை கவனித்தார், சற்று முன் கண்ட சினிமா பேனருக்கும் அந்த பெயர் பழகைக்கும் ஒரு சம்பந்தம் இருந்தது, அது ஒரு பிரபல துப்பறியும் நிறுவனம் (Deductive Agency). உடனே காரை நிறுத்த சொல்லிவிட்டு காரிலிருந்து இறங்கி ஏஜன்சி உள்ளே சென்றார், வாசலில் நின்ற செக்யூரிட்டி தேவையான தகவல்களை பதிந்து உள்ளே செல்ல அனுமதித்தார், உள்ளே அந்நிறுவனராக இருந்த முரளிராஜாவை சந்தித்து தன் கேள்விப்பட்ட தொழில் பிரச்சனையை எடுத்துக்கூறி தனக்கு உதவும்மாறு கேட்டார். அவரும் கண்டிப்பாக உதவுகிறோம் இங்கே எங்களிடம் பல துப்பறியும் ஏஜெண்டுகள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவரை தேந்தெடுத்துக்கொள்ளுங்கள் என பட்டியலை நீட்டினார்.
அந்த பட்டியலில் மகா பிரபு, இனியவன், ஸ்ரீராம், மொகைதீன், ரமேஷ், முத்து, சசிகுமார், செந்தில்... என பெரிதாக நீண்டது, பட்டியலை வாங்கி அதில் லில்ஸ்டில் உள்ளவர்களை ஒருமுறை பார்த்தவர், மூன்றாவதாக இருந்த ஸ்ரீராம் என்ற துப்பறியும் ஏஜெண்டை தேந்தெடுத்து மற்ற விவரங்களையும் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் கணபதி கேசவன். இப்போது அவருக்கு சற்று மன பாரம் குறைந்திருந்தது.
அன்று மாலை பொழுதிலேயே ஸ்ரீராம் GK இன்போ சிஸ்டம்ஸ் வந்துவிட்டார், அவரை அன்புடன் வரவேற்ற திரு. கணபதி கேசவன், ஸ்ரீராம்க்கு தனியாக அக்சஸ் கார்டை தந்து உள்ளே அழைத்து சென்று வரும் ஆபத்துகள், பிரச்சனைகள் பற்றி அனைத்தையும் விவாதித்தார். கொஞ்சம் நாட்களுக்கு புதிதாக யாரையும் பணியில் அமர்த்தவேண்டாம் என்ற ஸ்ரீராம் அந்நிறுவனத்தில் வெளிப்புற காமிராக்கள் கூடுதலாக அமைக்கவேண்டும் என
கேட்டுக்கொண்டார், அதை ஆமோதித்த நிறுவனர் அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யுமார் செக்யூரிட்டிகளுக்கு ஆணையிட்டார். அன்றைய தினமே ஸ்ரீராம் தனது பணியை ஆரம்பித்தார் செக்யூரிட்டிகள் அனைவரும் விழிப்புடன் இருந்தனர். அவ்வப்போது கன்ரோல் ரூமில் தெருவை நோட்டமிட்டனர். ஸ்ரீராம் பகல் நேரங்களில் ஓய்வு எடுத்துக்கொள்வார். நாட்கள் சில உருண்டோடியது எந்த பிரச்சனையும் இதுவரை நடைபெறவில்லை. திரு. கணபதி கேசவன் அவர்களுக்கும் தனக்கு வந்த செய்தி தவறாக இருக்குமோ என நினைத்தார், இருப்பினும் அனைவரையும் விழிப்புடன் இருக்க சொல்லிவிட்டு கிளம்பி சென்றார்.
அன்றைய தினம் இரவு நல்ல மழை கொட்டி தீர்த்தது, இந்த நேரத்தில் கண்காணிப்பு காமிராவில் ஒரு பெண் அருகில் ஓடி வருவதாக கண்ட்ரோல் ரூம் மானிட்டரில் தெரிந்தது, ஸ்ரீராம் உடனே அங்கிருந்து அலுவலக வாசலை அடைந்த நேரத்தில் அந்த பெண்ணும் வாசலில் வந்து அந்த கண்ணாடி கதவை தட்டினாள். ஸ்ரீராம் தனது அக்சஸ் கார்ட் மூலம் கண்ணாடி கதவை திறந்து என்னாச்சு யார் நீ என்றான், அந்த பெண் ஜீன்ஸ் பேண்டும், டீ ஷர்ட்டும் அணிந்து இருந்தாள், அவள் தான் லிபார்ட்டி அருகில் வாசிப்பதாகவும், தோழி வீட்டிற்கு பார்ட்டிக்கு வந்தவள் அங்கிருந்து லேட்டாக கிளம்பியதால் வரும் வழியில் தன்னை ஐந்தாறு பேர் துரத்தி வருவதாக சொன்னாள். ஸ்ரீராம் வெளியில் எட்டி பார்த்தபோது சற்று தூரத்தில் சிலர் ஓடி வருவது தெரிந்தது. அந்த நேரத்தில் வானத்தில் மின்னல் தோன்ற அந்த மின்னல் வெளிச்சத்தில் அவர்கள் கையில் ஆயுதங்களுடன் வருவதை கண்ட ஸ்ரீராம், உடனே கதவை மூடி, அனைவரையும் எச்சரிக்கையாக இருக்க செய்து விட்டு அந்த பெண்ணின் கையை பிடித்து விடுவிடுவேன இழுத்துக்கொண்டு போய் ரிசப்னிஸ்ட் பயன்படுத்தும் அறையில் உள்ளே தள்ளி ரூமின் வெளியே உள்ள தாழ்பாளை போட்டு விட்டு திரும்பினான். ஒரு செக்யூரிட்டி அங்கே வந்து சார் இந்த பெண்ணை துரத்திக்கொண்டு வந்தவர்கள் அனைவரும் நேராக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்றான். ஸ்ரீராம் புன்னகைத்தவாறே உடனே கணபதி கேசவன் அவர்களுக்கும், போலீஸ்க்கும் தகவல் தருமாறு பணித்தார் செக்யூரிட்டிகள் சற்று ஆச்சிரியப்பட்டாலும் இருபக்கமும் தகவல் கொடுக்கப்பட்டது.
மறுநாள் காலை போலீஸ் ஸ்டேஷனில் அந்த பெண்ணை போலீஸ் முறைப்படி விசாரித்ததில் எல்லா விஷயங்களை சொல்லிவிட்டால், தான் எஸ்ஆர்கே சிஸ்டம்ஸ் சுனில் சர்மாவால் அனுப்பப்பட்டவள் என்றும், தன்னிடம் சில அதிதொழில்நுட்பம் வாய்ந்த கண்ணுக்கு புழப்படாத பாட்டரி மூலம் இயங்கும் காமிராவை கொடுத்து அதை அங்கே சில இடங்களில் பொருத்திட பணித்தார் என்றாள். அதனால் அவர்கள் தயாரிக்கும் மாடலை/பொருளை அவர்களுக்கு முன்பே தயாரித்து மார்க்கட்டில் கிடைக்கும்படி செய்தால் GK இன்போ சிஸ்டம்ஸ் நாளடைவில் படுத்து விடும் என திட்டம்தீட்டப்பட்டது என தெரிந்தது, உடனடியாக சுனில் ஷர்மாவையும் கைது செய்தனர்.
அஸ்சிஸ்டன்ட் கமிஷ்னர் ஜேக் ஸ்ரீராமை நோக்கி நீங்க எப்படி கண்டுபிடித்தீர்கள் என்றார்?
ஸ்ரீராம் சொல்ல தொடங்கினார்.....................
சரி கேள்வி என்னவென்றால் ஸ்ரீராம் எப்படி இந்த பெண்தான் குற்றவாளியென்று கண்டுபிடித்தார்.?
சரியான பதிலை சொல்பவர்கள் என் அடுத்த துப்பறியும் கதையின் நாயகனாக வருவார்.
இந்த கதையை சில வாரங்களாக அவ்வப்போது வோர்டில் எழுதி வந்தேன், இன்று பதிவிட்டு இருக்கிறேன். கதையில் தவறுறிந்தால் சுட்டி காட்டுங்கள். அடுத்த புதிரில் சந்திக்கலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
அருமை அருமை அசாத்தியமான கற்பனை திறன் இவ்வளவு நாட்கள் இந்த கற்பனை திறன் எங்கு ஒளிந்திருந்தது .....
கூடிய விரைவில் தம்பி ஸ்ரீராம் ஒரு நல்ல சினிமா directorயாக உருவாக நல்ல திறமை உள்ளது .வாய்ப்பை நன்கு பயன் படுத்தி கொள்ளுங்கள் ...
வாழ்க வளமுடன் ......
ஓடி வந்த ஜீன்ஸ் +டி சர்ட் பெண்ணுக்கு நம் தளத்தில் உள்ள ஒரு மங்கையரின் பெயரை சூட்டி இருக்கலாமே ...
எனக்கு வந்த ஒரு சந்தேகம் ....
"ஒரு செக்யூரிட்டி அங்கே வந்து சார் இந்த பெண்ணை துரத்திக்கொண்டு வந்தவர்கள் அனைவரும் நேராக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்றான்.."
ஒரு நல்ல துப்பறிவாளனுக்கு இங்கே சந்தேகம் வந்திருக்க வேண்டும்
இன்னும் விரிவான பதிலை நாளை காண்போம் ....
குடும்ப உறவுகள் அழைக்கிறது ....
துப்பறியும் தொழில் நடத்தும் தம்பி முரளிராஜா + ஸ்ரீராம் அவர்கள் சரியான முறையில் இந்த தொழிலுக்கு வருமான வரி கட்டுகிறிர்களா ?????.....
கூடிய விரைவில் தம்பி ஸ்ரீராம் ஒரு நல்ல சினிமா directorயாக உருவாக நல்ல திறமை உள்ளது .வாய்ப்பை நன்கு பயன் படுத்தி கொள்ளுங்கள் ...
வாழ்க வளமுடன் ......
ஓடி வந்த ஜீன்ஸ் +டி சர்ட் பெண்ணுக்கு நம் தளத்தில் உள்ள ஒரு மங்கையரின் பெயரை சூட்டி இருக்கலாமே ...
எனக்கு வந்த ஒரு சந்தேகம் ....
"ஒரு செக்யூரிட்டி அங்கே வந்து சார் இந்த பெண்ணை துரத்திக்கொண்டு வந்தவர்கள் அனைவரும் நேராக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்றான்.."
ஒரு நல்ல துப்பறிவாளனுக்கு இங்கே சந்தேகம் வந்திருக்க வேண்டும்
இன்னும் விரிவான பதிலை நாளை காண்போம் ....
குடும்ப உறவுகள் அழைக்கிறது ....
துப்பறியும் தொழில் நடத்தும் தம்பி முரளிராஜா + ஸ்ரீராம் அவர்கள் சரியான முறையில் இந்த தொழிலுக்கு வருமான வரி கட்டுகிறிர்களா ?????.....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
இன்னும் கொஞ்சம் யோசியுங்கள் அண்ணா; ஸ்ரீராம்க்கு ஒரு முக்கியமான துப்பு கிடைக்கிறது.
அந்த பெண் நெகட்டிவ் கேரக்டர் என்பதால் தளத்தில் இருப்பவர்களின் யார் பெயரையும் சூட்டவில்லை.
உங்கள் பாராட்டுக்கு நன்றி அண்ணா, இனி அவ்வப்போது என் சொந்த புதிர்கள் வரும்.
அந்த பெண் நெகட்டிவ் கேரக்டர் என்பதால் தளத்தில் இருப்பவர்களின் யார் பெயரையும் சூட்டவில்லை.
உங்கள் பாராட்டுக்கு நன்றி அண்ணா, இனி அவ்வப்போது என் சொந்த புதிர்கள் வரும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
துப்பறிவாளர் wrote:தன்னிடம் சில அதிதொழில்நுட்பம் வாய்ந்த கண்ணுக்கு புழப்படாத பாட்டரி மூலம் இயங்கும் காமிராவை கொடுத்து அதை அங்கே சில இடங்களில் பொருத்திட பணித்தார் என்றாள்
அந்த அழகிய மங்கை வைத்திருந்த கண்ணுக்கு புலப்படாத காமிராவை அதி தொழில் நுட்பம் வாய்ந்த நம் காமிரா காட்டி கொடுத்து விட்டதா ......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
அஸ்சிஸ்டன்ட் கமிஷ்னர் ஜேக் ஸ்ரீராமை நோக்கி நீங்க எப்படி கண்டுபிடித்தீர்கள் என்றார்?
ஸ்ரீராம் சொல்ல தொடங்கினார்.....................
"அந்த பெண்ணின் கையைப்பிடித்து உள்ளே அழைத்துச் செல்லும்போது... அவளது கையில் ஈரமில்லாதிருந்தது. அது மட்டுமில்ல... அவள் ஆடையில் கூட சரியாக மழையினால் ஈரம் இல்லாதிருந்தது. அப்போதே புரிந்து விட்டது... இவள் ஏதோ சதியுடன் வந்திருக்கிறாள் என்று... அதனால்தான் செக்யுரிட்டியிடம் உடனே சொல்லி உங்களை வரவழைத்தேன் - நீங்களும் சரியாக முறைப்படி விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்து உண்மையை வெளியெ கொண்டு வந்து விட்டீர்கள்" என்று சிரித்துக் கொண்டெ சொன்னார் ஸ்ரீ ராம்.
ஸ்ரீராம் சொல்ல தொடங்கினார்.....................
"அந்த பெண்ணின் கையைப்பிடித்து உள்ளே அழைத்துச் செல்லும்போது... அவளது கையில் ஈரமில்லாதிருந்தது. அது மட்டுமில்ல... அவள் ஆடையில் கூட சரியாக மழையினால் ஈரம் இல்லாதிருந்தது. அப்போதே புரிந்து விட்டது... இவள் ஏதோ சதியுடன் வந்திருக்கிறாள் என்று... அதனால்தான் செக்யுரிட்டியிடம் உடனே சொல்லி உங்களை வரவழைத்தேன் - நீங்களும் சரியாக முறைப்படி விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்து உண்மையை வெளியெ கொண்டு வந்து விட்டீர்கள்" என்று சிரித்துக் கொண்டெ சொன்னார் ஸ்ரீ ராம்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
[size=13.333333969116211]ASST.COMMISSIONER[/size]
மழை விட்டு விட்டது மங்கை அணிந்திருந்ததோ
RAIN WATER PROOF DRESS
[size=16.666667938232422]அந்த பெண்ணின் கையைப்பிடித்து உள்ளே அழைத்துச் செல்லும்போது... அவளது கையில் ஈரமில்லாதிருந்தது. அது மட்டுமில்ல... அவள் ஆடையில் கூட சரியாக மழையினால் ஈரம் இல்லாதிருந்தது. அப்போதே புரிந்து விட்டது[/size]
மழை விட்டு விட்டது மங்கை அணிந்திருந்ததோ
RAIN WATER PROOF DRESS
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
முழுமுதலோன் wrote:அந்த அழகிய மங்கை வைத்திருந்த கண்ணுக்கு புலப்படாத காமிராவை அதி தொழில் நுட்பம் வாய்ந்த நம் காமிரா காட்டி கொடுத்து விட்டதா ......
இல்லை தவறு அண்ணா
ஜேக் wrote:அஸ்சிஸ்டன்ட் கமிஷ்னர் ஜேக் ஸ்ரீராமை நோக்கி நீங்க எப்படி கண்டுபிடித்தீர்கள் என்றார்?
ஸ்ரீராம் சொல்ல தொடங்கினார்.....................
"அந்த பெண்ணின் கையைப்பிடித்து உள்ளே அழைத்துச் செல்லும்போது... அவளது கையில் ஈரமில்லாதிருந்தது. அது மட்டுமில்ல... அவள் ஆடையில் கூட சரியாக மழையினால் ஈரம் இல்லாதிருந்தது. அப்போதே புரிந்து விட்டது... இவள் ஏதோ சதியுடன் வந்திருக்கிறாள் என்று... அதனால்தான் செக்யுரிட்டியிடம் உடனே சொல்லி உங்களை வரவழைத்தேன் - நீங்களும் சரியாக முறைப்படி விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்து உண்மையை வெளியெ கொண்டு வந்து விட்டீர்கள்" என்று சிரித்துக் கொண்டெ சொன்னார் ஸ்ரீ ராம்.
இன்னும் நன்றாக யோசிங்க அஸ்சிஸ்டன்ட் கமிஷ்னர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
முழுமுதலோன் wrote:[size=13.63636302947998]ASST.COMMISSIONER[/size][size=16.363636016845703]அந்த பெண்ணின் கையைப்பிடித்து உள்ளே அழைத்துச் செல்லும்போது... அவளது கையில் ஈரமில்லாதிருந்தது. அது மட்டுமில்ல... அவள் ஆடையில் கூட சரியாக மழையினால் ஈரம் இல்லாதிருந்தது. அப்போதே புரிந்து விட்டது[/size]
மழை விட்டு விட்டது மங்கை அணிந்திருந்ததோ
RAIN WATER PROOF DRESS
கதையில் இல்லாதஉடை ( மழை பாதுகாப்பு உடை) எங்கிருந்து வந்தது?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
sriram wrote:அந்த பெண்ணின் கையை பிடித்து விடுவிடுவேன இழுத்துக்கொண்டு போய் ரிசப்னிஸ்ட் பயன்படுத்தும் அறையில் உள்ளே தள்ளி ரூமின் வெளியே உள்ள தாழ்பாளை போட்டு விட்டு திரும்பினான்.
அந்த மங்கையின் கையில் இருந்த ஏதோ ஒன்று தான் உங்களுக்கு துப்பாக இருந்து இருக்கும் ......
மின்னலில் ஏதேனும் flash உங்களுக்கு தென்பட்டு இருக்க வேண்டும் ...
விடாது கருப்பு .......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
இன்னும் நல்லா யோசிங்க அண்ணா. ஒரு குளு கிடைக்கும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
ரிசப்னிஸ்ட் பயன்படுத்தும் அறையில் எதாவது singal கிடைப்பது போன்று அமைக்க பட்டுள்ளதா ......
புரியுது ஆனா புரியலை ....
தெரியுது ஆனா தெரியல .....
புரியுது ஆனா புரியலை ....
தெரியுது ஆனா தெரியல .....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
பதில் இதவாகத்தான் இருக்க வேண்டும்:
திரு.கணபதி கேசவன் நேர்மையானவர். ரோபாட் (எந்திரன்) தயாரிப்பாளர். ஆனால், முன்னெச்சரிக்கை உள்ளவர். தொழில் போட்டியை சமாளிக்கும் திறனுடையவர்.
தியேட்டர் வாசலில் உள்ள பேனருக்கும், துப்பறியும் ஏஜென்ஸி பெயர் பலகையும் ஒரே பெயர். அதாவது எந்திரன்.
துப்பறிவாளரிடம் தன் பிரச்சினைகளை தெளிவாக சொன்னார். உடனே துப்பறியும் ஏஜெண்ட் ராம் அவர்களுடைய ஆலோசனையின்படி வெளிப்புற காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
அதன்மூலம் ஒரு விஷயம் அவருக்கு தெளிவானது. அதாவது, வெளிப்புற காமிராவில் பதிந்த ஒரு காரியம். குறிப்பிட்ட ஒரு பெண் தினமும் சில நாட்களாக இந்த கம்பெனியை நோட்டமிடுவது தெரிந்தது.
மற்றொருநாள்... எஸ்.ஆர்.கே.சிஸ்டம்ஸ் சுனில் சர்மா வின் காரில் முன்பக்கம் அமர்ந்து செல்வதும் பதிவாயிருந்ததை ராம் அவர்கள் கண்டுபிடித்தார்.
சிந்தையில் பொறி தட்டியது. எதிராளிகள் ஏதோ திட்டம் தீட்டுவது ராமுக்கு புரிந்தது. அதுதானே துப்பறிபவர்களின் திறன். அதை முறியடிக்க ராம் ஒரு திட்டம் தீட்டினார்.
உடனே திரு.கணபதி கேசவனிடம் சொல்லி - சுனில் சர்மாபோலவே ஒரு எந்திரனை செய்ய பணித்தார். அவரும் தன் பணியாட்களிடம் சொல்லி, மிக தத்ரூபமாக ஒரு எந்திரனை சுனில் சர்மா போலவே செய்து ராமிடம் ஒப்படைத்தனர். அதை ஒருவருக்கும் தெரியாமல் இரகசியமாக ரிசப்ஷனிஸ்ட் அறையில் தேவைப்படும்பொது தானே இயங்குமாறு வைத்து விட்டு, எதிரிகளுக்காக வலைவிரித்து காத்திருந்தார்.
ராம் எதிர் பார்த்தபடி அந்த நாளும் வந்தது. எதிராளிகள் தாங்கள் திட்டமிட்டபடி அப் பெண்ணை 5 பேர் துரத்திக் கொண்டு வருவதை போல பாசாங்கு செய்து நிறைவேற்ற... ராமம் அவளை கை பிடித்து சென்று அறையில் தள்ளி தாழ்ப்பாள் போட...
இனி அறைக்குள் நடந்தது... இதுதான்...
திரு.கணபதி கேசவன் நேர்மையானவர். ரோபாட் (எந்திரன்) தயாரிப்பாளர். ஆனால், முன்னெச்சரிக்கை உள்ளவர். தொழில் போட்டியை சமாளிக்கும் திறனுடையவர்.
தியேட்டர் வாசலில் உள்ள பேனருக்கும், துப்பறியும் ஏஜென்ஸி பெயர் பலகையும் ஒரே பெயர். அதாவது எந்திரன்.
துப்பறிவாளரிடம் தன் பிரச்சினைகளை தெளிவாக சொன்னார். உடனே துப்பறியும் ஏஜெண்ட் ராம் அவர்களுடைய ஆலோசனையின்படி வெளிப்புற காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
அதன்மூலம் ஒரு விஷயம் அவருக்கு தெளிவானது. அதாவது, வெளிப்புற காமிராவில் பதிந்த ஒரு காரியம். குறிப்பிட்ட ஒரு பெண் தினமும் சில நாட்களாக இந்த கம்பெனியை நோட்டமிடுவது தெரிந்தது.
மற்றொருநாள்... எஸ்.ஆர்.கே.சிஸ்டம்ஸ் சுனில் சர்மா வின் காரில் முன்பக்கம் அமர்ந்து செல்வதும் பதிவாயிருந்ததை ராம் அவர்கள் கண்டுபிடித்தார்.
சிந்தையில் பொறி தட்டியது. எதிராளிகள் ஏதோ திட்டம் தீட்டுவது ராமுக்கு புரிந்தது. அதுதானே துப்பறிபவர்களின் திறன். அதை முறியடிக்க ராம் ஒரு திட்டம் தீட்டினார்.
உடனே திரு.கணபதி கேசவனிடம் சொல்லி - சுனில் சர்மாபோலவே ஒரு எந்திரனை செய்ய பணித்தார். அவரும் தன் பணியாட்களிடம் சொல்லி, மிக தத்ரூபமாக ஒரு எந்திரனை சுனில் சர்மா போலவே செய்து ராமிடம் ஒப்படைத்தனர். அதை ஒருவருக்கும் தெரியாமல் இரகசியமாக ரிசப்ஷனிஸ்ட் அறையில் தேவைப்படும்பொது தானே இயங்குமாறு வைத்து விட்டு, எதிரிகளுக்காக வலைவிரித்து காத்திருந்தார்.
ராம் எதிர் பார்த்தபடி அந்த நாளும் வந்தது. எதிராளிகள் தாங்கள் திட்டமிட்டபடி அப் பெண்ணை 5 பேர் துரத்திக் கொண்டு வருவதை போல பாசாங்கு செய்து நிறைவேற்ற... ராமம் அவளை கை பிடித்து சென்று அறையில் தள்ளி தாழ்ப்பாள் போட...
இனி அறைக்குள் நடந்தது... இதுதான்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
அருமை அருமை
நடந்தது என்ன குற்றமும் பின்னணியும்
ஒரு வழியாக .......
மணலானே மங்கையின் பாக்கியம் ......
நடந்தது என்ன குற்றமும் பின்னணியும்
ஒரு வழியாக .......
மணலானே மங்கையின் பாக்கியம் ......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
வாவ் ஜேக் நீங்கள் அடுத்த புதிரை எழுதும் அளவுக்கு தேர்ச்சி பெற்று விட்டீர்கள்.
அண்ணா தியாட்டரில் அந்த பேனர், அந்த சினிமாவில் கதாநாயகன் (Hero) துப்பறியும் புலியாக வருகிறார். அதனால் மவுண்ட் ரோடில் ஒரு துப்பறியும் நிறுவனத்தை பார்த்த உடன் அந்த சினிமா ஞாபகம் வருகிறது.
இந்த கதையில் திசை திருப்ப நான் ஒரு சில எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் மாட்டி இருக்கிறேன். இதுவே பெரிய குளு.
சற்று முன் அமர்க்களம் முகநூலில் பதிவிடப்பட்டது. மற்ற நண்பர்கள் கண்டுபிடிக்கும் முன் சீக்கிரம் கண்டுப்பிடியுங்கள்.
அண்ணா தியாட்டரில் அந்த பேனர், அந்த சினிமாவில் கதாநாயகன் (Hero) துப்பறியும் புலியாக வருகிறார். அதனால் மவுண்ட் ரோடில் ஒரு துப்பறியும் நிறுவனத்தை பார்த்த உடன் அந்த சினிமா ஞாபகம் வருகிறது.
இந்த கதையில் திசை திருப்ப நான் ஒரு சில எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் மாட்டி இருக்கிறேன். இதுவே பெரிய குளு.
சற்று முன் அமர்க்களம் முகநூலில் பதிவிடப்பட்டது. மற்ற நண்பர்கள் கண்டுபிடிக்கும் முன் சீக்கிரம் கண்டுப்பிடியுங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
ஸ்ரீராம் wrote:அவர்கள் தயாரிக்கும் மாடலை/பொருளை அவர்களுக்கு முன்பே தயாரித்து மார்க்கட்டில் கிடைக்கும்படி செய்தால்
காமிராவை பொருத்திவிட்டால் போதுமா
இது எப்படி சாத்தியம்
ஸ்ரீராமின் தொழில் நுட்பத்தில் எதையுமே திருடமுடியாதே .......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
அந்த பட்டியலில் மகா பிரபு, இனியவன், ஸ்ரீராம், மொகைதீன், ரமேஷ், முத்து, சசிகுமார், செந்தில்... என பெரிதாக நீண்டது, wrote:
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
நிறுவனர் wrote:
காமிராவை பொருத்திவிட்டால் போதுமா
இது எப்படி சாத்தியம்?
ஸ்ரீராமின் தொழில் நுட்பத்தில் எதையுமே திருடமுடியாதே .......?
காமிராவை ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பொறுத்திவிட்டால் அது இங்கே நடப்பது அனைத்தையும் காட்டி கொடுத்து விடுமே. புதிய மாடல் ரோபோ தயாரிக்க படுவதைக்கூட எங்கோ உட்கார்ந்து கொண்டு பார்க்கலாமே? அது கண்ணுக்கு தெரியாத காமிரா என்பதால் நமக்கு காமிரா இருக்கும் இடம் கூட தெரியாதே. அப்புறம் ஸ்ரீராம் மட்டும் என்ன செய்வார்?
கொடுத்த கதையில் ஒரு நல்ல குளு இருக்கு அதை கண்டுபிடிக்க முடியாமல் என்ன என்னவெல்லாம் யோசிக்கிறாங்க.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
ஏன் ?ஸ்ரீராம் பகல் நேரங்களில் ஓய்வு எடுத்துக்கொள்வார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
மகா பிரபு wrote:
உங்களைத் தேர்ந்தெடுக்கல என்ன இளீப்பு வேண்டி கெடக்கு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
ஸ்ரீராம் wrote:கொடுத்த கதையில் ஒரு நல்ல குளு இருக்கு அதை கண்டுபிடிக்க முடியாமல் என்ன என்னவெல்லாம் யோசிக்கிறாங்க.
உடனே சொல்லி விட்டால் சுவாரிசியம் இருக்காது அதனால் தான் ரப்பர் போல இழுக்கிறோம் .....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
கோவத்திலும் சிரின்னு சொல்லி இருக்காங்க. அதனால் தான்.ரானுஜா wrote:மகா பிரபு wrote:
உங்களைத் தேர்ந்தெடுக்கல என்ன இளீப்பு வேண்டி கெடக்கு
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
மகா பிரபு wrote:கோவத்திலும் சிரின்னு சொல்லி இருக்காங்க. அதனால் தான்.ரானுஜா wrote:மகா பிரபு wrote:
உங்களைத் தேர்ந்தெடுக்கல என்ன இளீப்பு வேண்டி கெடக்கு
சரி சரி தக்காளி சட்னிய தொடைச்சிட்டு சிரிங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
தக்காளி விலை குறைந்து விட்டது.. அதனால் இருந்துட்டு போகட்டும்..ரானுஜா wrote:மகா பிரபு wrote:கோவத்திலும் சிரின்னு சொல்லி இருக்காங்க. அதனால் தான்.ரானுஜா wrote:மகா பிரபு wrote:
உங்களைத் தேர்ந்தெடுக்கல என்ன இளீப்பு வேண்டி கெடக்கு
சரி சரி தக்காளி சட்னிய தொடைச்சிட்டு சிரிங்க
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
முழுமுதலோன் wrote:ஸ்ரீராம் wrote:கொடுத்த கதையில் ஒரு நல்ல குளு இருக்கு அதை கண்டுபிடிக்க முடியாமல் என்ன என்னவெல்லாம் யோசிக்கிறாங்க.
உடனே சொல்லி விட்டால் சுவாரிசியம் இருக்காது அதனால் தான் ரப்பர் போல இழுக்கிறோம் .....
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|